Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் - வரலாற்றுத்தேவை வாழ்க்கையின் கட்டளை (நூல் விமர்சனம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் வரலாற்றுத்தேவை

வாழ்க்கையின் கட்டளை (நூல் விமர்சனம்)

தோழர் தியாகு அவர்கள் எழுதி வெளி வந்த சில கட்டுரைத் தொகுப்புகளுடன் தலைப்புக்குரிய கட்டுரையையும் புதிதாக எழுதிச் சேர்த்து வாசகர்களாகிய நமக்கு அளித்துள்ள நூல்தான் தமிழீழம் - வரலாற்றுத் தேவை வாழ்க்கையின் கட்டளை:

இந்தப் புத்தகத்தில் வரும் 17 கட்டுரைகளும் கடந்த நாட்களில் நடந்த பேச்சுவார்த்தைகளை, வீரப்போர்களை, அதன் தியாகங்களை நினைவுப் படுத்துவதுடன், நிகழ்கால தேவைகளை, எதிர்கால எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளையானாலும், வேறு உண்மையான தேசிய விடுதலை இயக்கங்களையானாலும் உலக அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் முறியடிக்க முடியாது. விடுதலை இயக்கங்கள் அரசுகளிடமிருந்து தனிமைப் படலாம். ஆனால் அவை மக்களிடமிருந்துதான் தனிமைப் படக்கூடாது. அவற்றினது வலிமையின் ஊற்றுக்கண் மக்கள்தாமே தவிர அரசுகள் அல்ல என்ற தெளிவான, தீர்க்கமான உண்மையை வாசகர்களுக்கு பளிச்சென கூறியுள்ளார் ஆசிரியர்.

அயல் நாட்டினரின் சதி, இந்திய அரசின் எதிர்ப்பு என்று பல்வேறு முனைகளிலிருந்து எழும் எல்லா சவால்களையும் தமிழீழத்திற்காகப் போராடி வரும் நம் சகோதரர்கள் எப்படித் திறமையாகக் கையாண்டு, சமாளித்து மேலே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமான, உண்மையான பல செய்திகளுடன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்.

தற்போது இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை உலகம் எப்படிப் பார்க்கிறது என்ற கண்ணோட்டத்தையும் ஆழமாகச் சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒவ்வொரு தமிழரும் படித்து, தெரிந்து கொள்ள வேண்டிய மிகத் தேவையான நூல் இது.

ஆசிரியர் : தியாகு, வெளியீடு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், 1434 (36/22), இராணி அண்ணா நகர், சென்னை - 600 078, அலைபேசி : 9283222988 விலை ரூ.40/-

- தமித்தலட்சுமி

-தென்செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் வரலாற்றுத்தேவை

வாழ்க்கையின் கட்டளை (நூல் விமர்சனம்)

தோழர் தியாகு அவர்கள் எழுதி வெளி வந்த சில கட்டுரைத் தொகுப்புகளுடன் தலைப்புக்குரிய கட்டுரையையும் புதிதாக எழுதிச் சேர்த்து வாசகர்களாகிய நமக்கு அளித்துள்ள நூல்தான் தமிழீழம் - வரலாற்றுத் தேவை வாழ்க்கையின் கட்டளை:

இந்தப் புத்தகத்தில் வரும் 17 கட்டுரைகளும் கடந்த நாட்களில் நடந்த பேச்சுவார்த்தைகளை, வீரப்போர்களை, அதன் தியாகங்களை நினைவுப் படுத்துவதுடன், நிகழ்கால தேவைகளை, எதிர்கால எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளையானாலும், வேறு உண்மையான தேசிய விடுதலை இயக்கங்களையானாலும் உலக அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் முறியடிக்க முடியாது. விடுதலை இயக்கங்கள் அரசுகளிடமிருந்து தனிமைப் படலாம். ஆனால் அவை மக்களிடமிருந்துதான் தனிமைப் படக்கூடாது. அவற்றினது வலிமையின் ஊற்றுக்கண் மக்கள்தாமே தவிர அரசுகள் அல்ல என்ற தெளிவான, தீர்க்கமான உண்மையை வாசகர்களுக்கு பளிச்சென கூறியுள்ளார் ஆசிரியர்.

அயல் நாட்டினரின் சதி, இந்திய அரசின் எதிர்ப்பு என்று பல்வேறு முனைகளிலிருந்து எழும் எல்லா சவால்களையும் தமிழீழத்திற்காகப் போராடி வரும் நம் சகோதரர்கள் எப்படித் திறமையாகக் கையாண்டு, சமாளித்து மேலே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமான, உண்மையான பல செய்திகளுடன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்.

தற்போது இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை உலகம் எப்படிப் பார்க்கிறது என்ற கண்ணோட்டத்தையும் ஆழமாகச் சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒவ்வொரு தமிழரும் படித்து, தெரிந்து கொள்ள வேண்டிய மிகத் தேவையான நூல் இது.

ஆசிரியர் : தியாகு, வெளியீடு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், 1434 (36/22), இராணி அண்ணா நகர், சென்னை - 600 078, அலைபேசி : 9283222988 விலை ரூ.40/-

- தமித்தலட்சுமி

-தென்செய்தி

'தோழர்' தியாகு 'இனி' என்றொரு பத்திரிகையை முன்பு நடத்திவந்தார். இப்போதும் வருகிறதா என்று தெரியவில்லை. 1995 இல் வாசித்திருக்கிறேன்.

நான் மிக மதிக்கும் போராளி அவர். அவரும் கவிஞர் தாமரையும் இணைந்து தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திவந்தார்கள்.

அவரிடமிருந்து இப்போது ஒரு புத்தகம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொதுவுடைமைப் போராளியாக இருந்ததால் மரணதண்டனை விதிக்கப்படும் நிலைவரை சென்றவர். சிறைவாழ்க்கையில் மார்க்சிசத்தின் ஆதாரமான மூலதனம் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இன்றுவரை அவரின் மொழிபெயர்ப்புத்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தியாகு இப்போது மார்க்சியர்களின் எதிரி (கவனிக்க மார்க்சிசத்தின் எதிரியல்லர்).

பலருக்கு அவரை பெண்கவிஞர் தாமரையின் கணவனாகத்தான் தெரியும். ;-)

செய்தியை இங்குப் பகிர்ந்தமைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.