Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் படத்துக்கு நீதிமன்ற தடை நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் படத்துக்கு நீதிமன்ற தடை நீக்கம்

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பெயரில் தயாரிக்கப்பட்ட சிங்கள மொழி படத்துக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஒஸ்மாண்ட் டி.சில்வா என்பவர், பிரபாகரன் என்ற பெயரில் சிங்கள மொழியில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதை தமிழகத்தில் திரையிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில்,, பிரபாகரன் படத்தில் இலங்கை தமிழர்களை தரக்குறைவாக சித்தரித்துள்ளதாகவும், எனவே, இப்படத்தின் நெகடிவ் பிரிண்ட் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி, பிரபாகரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சார்பில், படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யயப்பட்டடது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பிரபாகரன் படத்துக்கு நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும், அடுத்த கட்ட விசாரணை, ஜுலை 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

-குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இந்தத் தீர்ப்பு எவரின் அழுத்தத்தால் வழங்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழ் நாட்டில் அண்மையில் நடந்து வரும் நிகழ்வுகளின் இன்னொரு நீட்சியே இந்தத் தீர்ப்பு என்று நான் நினைக்கிறேன். இத்தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ உணர்வாளர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

முதலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றுனர் மருத்துவர் ராமதாஸ் ஐய்யாவைக் கூட்டணியிலிருந்து துரத்தினார்கள். பின்னர் ஈழத் தமிழர் தமிழகத்தில் நிலம் வாங்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள், அகதியில்லாத எந்த ஈழத்தமிழனையும் கைது செய்து நாடு கடத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். இன்று சிங்களத்தை மகிழ்ச்சிப்படுத்த தமிழ்த் தேசியத் தலமையை கேவலப்படுத்தும் ஒரு சிங்களப் பேரினவாதப் பிரச்சாரத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டிலிருந்த தடையை நீக்கியிருக்கிறார்கள்.

தன்னைத்தானே உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் என்று கூறிக்கொள்ளும் ஒருவரின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கிறது.

வாழ்க அவரின் தமிழ்ப் பற்று ! வாழ்க அவரின் தமிழ் ஆட்சி !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க என்னத்த செய்தாலும் நாங்கள் நாங்கள் தான் யாரையும் நம்பக்கூடாது தமிழன் தமிழனுக்கு வெட்கமாய் இல்ல உவங்களுக்கு உவங்கட சொந்தபந்தங்களை இழந்து நடு ரோட்டில நின்டாத்தான் தெரியும் வேதனையென்டா என்ன என்டு உவங்கள் தமிழனா இல்ல வேற..........

வயித்து வலியை நம்பினாலும் ---------------- நம்பாதை என்று எமது மூதாதையர் சொல்லுறது இப்பதான் ஞாபகத்துக்கு வருகுது.

எதிர்பார்த்தது தானே...இத்தனை நாள் நடந்தது நாடகமா.??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: இந்தத் தீர்ப்பு எவரின் அழுத்தத்தால் வழங்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழ் நாட்டில் அண்மையில் நடந்து வரும் நிகழ்வுகளின் இன்னொரு நீட்சியே இந்தத் தீர்ப்பு என்று நான் நினைக்கிறேன். இத்தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ உணர்வாளர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

முதலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றுனர் மருத்துவர் ராமதாஸ் ஐய்யாவைக் கூட்டணியிலிருந்து துரத்தினார்கள். பின்னர் ஈழத் தமிழர் தமிழகத்தில் நிலம் வாங்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள், அகதியில்லாத எந்த ஈழத்தமிழனையும் கைது செய்து நாடு கடத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். இன்று சிங்களத்தை மகிழ்ச்சிப்படுத்த தமிழ்த் தேசியத் தலமையை கேவலப்படுத்தும் ஒரு சிங்களப் பேரினவாதப் பிரச்சாரத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டிலிருந்த தடையை நீக்கியிருக்கிறார்கள்.

தன்னைத்தானே உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் என்று கூறிக்கொள்ளும் ஒருவரின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கிறது.

வாழ்க அவரின் தமிழ்ப் பற்று ! வாழ்க அவரின் தமிழ் ஆட்சி !!!!!

தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை சுட்டுக்கொல்லும் போதுகூட வாய் திறக்காமல் இருந்தவர் எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று ஏதிர்பார்ப்பது முட்டாள்தனம். எல்லோருக்கும் தங்களின் பதவிதான் முக்கியம் மற்றவனுக்கு என்ன நடந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, இது தான் அவர்களின் உண்மையான முகம். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயித்து வலியை நம்பினாலும் ---------------- நம்பாதை என்று எமது மூதாதையர் சொல்லுறது இப்பதான் ஞாபகத்துக்கு வருகுது.

புராணங்கள் தேசவாரியாக மட்டுமல்ல ஊர்வாரியாகவும் இருக்கு இவை எல்லாம் கசப்புணர்வை வளர்க்க மட்டும்தானே உதவும்.

கலைஞ்ஞர்மீது வரும் எரிச்சலை தேசத்தின்மீது உமிளுதல் பொறுப்பில்லாத செயல் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.