Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது இந்த நவீன உலகில ஊருக்குப் போய்த்தான் சேவை செய்யவேணும் எண்டுற தேவை இல்லை. வெளியில இருந்துகொண்டே தாயகத்தை கட்டி எழுப்ப தாராளமாக உதவி செய்யமுடியும்.

நான் நிகழ்கால உதாரணங்களை வைத்தே கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கனடா உட்பட மேற்கு நாடுகளுக்கு நம்மபவர்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கி கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகின்றன. இந்த 25 வருடத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. இவை கட்டியெழுப்பிய அதி நவீன தாயகம் எங்கே..???!

தாயகத்தில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தைக் கூட சரியா கூர்மைப்படுத்தி அதி நவீனப்படுத்த முடியல்ல.. சும்மா தாங்களும் தங்கட வசதிக்கும் தாயக சோகங்களைப் பாவிச்சுக் கொண்டிருக்கினமே தவிர.. உண்மையாக தாயக வளர்ச்சியில் அக்கறை உள்ளவன்.. தாய் மண்ணில் மிதிக்கவே விரும்பி நிற்கிறான்..! அதுதான் பயன்.

அதிநவீன உலகைக் கொண்ட சிங்கப்பூரை அங்கு வாழும் மக்கள் தான் கட்டி வளர்க்கிறார்கள் இணையத்தின் வழியல்ல.. முரளி அவர்களே. அதி நவீன வசதிகளைக் கொண்டு கட்டியெழுப்ப முடியும் என்றால் இவ்வளவுக்கும் அமெரிக்காகாரன்.. விண்வெளியெங்கும் கட்டியெழுப்பி இருப்பான்..!

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு மனித வளமும் மூளை வளமும் அத்தியாவசியம். அதற்கு மேலால் உழைப்பு அவசியம். அதற்கு மேலால் தியாக சிந்தனை அவசியம். எவனொருவன்... தன்ர வாழ்க்கை முக்கியம் என்று கருதிறானோ அவனிடம் தியாகத்துக்கு இடமிருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்டவனால.. தாயகத்தை என்ன தன்னைச் சார்ந்த சமூகத்தையே உருப்படியாக் கட்டி எழுப்ப முடியாது..! :wub:

உங்க இருந்து எழுத்தில வித்துவத்துவம் காட்டாமல் முதலில ஒருக்கால் கனடாவுக்கு வாங்கோ. கனடாவில வந்து கொஞ்சக்காலம் இருந்து பாருங்கோ. அதுக்கு பிறகு உங்கட விமர்சனங்கள கனடா எப்பிடி இருக்கிது எண்டு சொல்லுங்கோ.

கனடாவைப் பார்க்கிறம் தானே. குப்பை அள்ளப்படாத ரொரண்டோவைப் பார்க்கிறம். ஏட்டிக்குப் போட்டி போட்டு தொலைக்காட்சி வானொலி நடத்திற 20 ஆண்டுகளுக்கு முந்திய மனநிலையிலேயே இருக்கிறதைப் பார்க்கிறம்.. என்ன புதிசா செய்திட்டினம்.. ஊரில யுனிக்குப் போறது வெட்டுப்புள்ளியால கஸ்டமா இருந்திச்சு.. உங்கினை.. எல்லாரும் போகலாம் என்பதைத் தவிர...????! அவை படிச்சதை வைச்சு.. சாதிச்சு... கட்டியெழுப்பிய.. தாயகத்தையும் காண முடியல்ல.. ரொரண்டோவையும் காண முடியல்ல.. இன்னும் வெள்ளைக்காரனின் கையில் தான்...!

எதுஎப்படியோ கனடாவின் ஊசியிலைக் காட்டுக்குள்ள உருவான ரொரண்டோவை தமிழர்கள் விருத்தியாக்கின கணக்கில்.... வன்னிக்காடுகளையும் அப்படி உருப்படியாக்கினா.. தேசம் உருப்படும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனபடியா தாத்தா...கரை ஒதுக்கிய கப்பலிற்கு நன்றி செலுத்துகிறார்கள் அவர்கள்..(அவர்களின் உள்ளெண்ணம் நமக்கு தேவையில்லை)..ஆனால் நன்றி செலுத்துவது அழகு தானே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

தன் சொந்தத் தாயை நேசிக்கத் தெரியாதவன்.. எப்படி செவிலித் தாயை நேர்மையாக நேசிப்பான். உள்ளெண்ணம் என்பதிலும்.. பிச்சை போட்ட இடத்தில் இன்னும் பொறுக்கலாம் என்ற நப்பாசையில் இப்படிச் செய்கிறார்கள்.. அவ்வளவே..! :D

தன் சொந்தத் தாயை நேசிக்கத் தெரியாதவன்.. எப்படி செவிலித் தாயை நேர்மையாக நேசிப்பான். உள்ளெண்ணம் என்பதிலும்.. பிச்சை போட்ட இடத்தில் இன்னும் பொறுக்கலாம் என்ற நப்பாசையில் இப்படிச் செய்கிறார்கள்.. அவ்வளவே..! :D

ஓ..அப்படி வாறியளோ..சொந்த தாயை யாரும் நேசிக்காம இருக்க மாட்டீனம் அல்லோ தாத்தா..(ஆனால் சில காரணங்களுக்காக அந்த தாயை மறந்த மாதிரி இருப்பார்கள்).. :)

ஆனால் பாசம் இருக்கும் அல்லோ.. :D

அதை போல் செவிலி தாயின் அரவணைப்பில் இன்பம் கண்டுள்ளார்கள்..(நிம்மதியாக தூங்குகிறார்கள்)..தன் தாயையும் உய்வடைய செய்கிறார்கள் அல்லோ :wub: ..தம் சொந்த தாய் அல்லுறும் போது கூடவே இருந்து தான் கவனிக்க வேண்டும் எண்டு இல்ல தள்ளி இருந்தும் அந்த தாயை உயர்த்தலாம் பாருங்கோ.. :D

அதே போல் சொந்த தாயின் துயர் தீர்ந்த பிறகு..(செவிலி தாயிற்கு)..ஒரு வேளை துன்பம் வந்தால் நிச்சயமா உதவுவார்கள் எண்டு தான் நினைக்கிறன் :lol: ..செவிலி தாயை வாழ்த்தி தான் பிச்சை எடுக்க வேண்டும் எண்டு இல்லை ஏன் எண்டா வாழ்த்தாட்டியும் இன்று அந்த அன்னை பிச்சை போட்டு கொண்டு தானே இருக்கிறாள் தாத்தா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அதை போல் செவிலி தாயின் அரவணைப்பில் இன்பம் கண்டுள்ளார்கள்..(நிம்மதியாக தூங்குகிறார்கள்)..தன் தாயையும் உய்வடைய செய்கிறார்கள் அல்லோ :wub: ..தம் சொந்த தாய் அல்லுறும் போது கூடவே இருந்து தான் கவனிக்க வேண்டும் எண்டு இல்ல தள்ளி இருந்தும் அந்த தாயை உயர்த்தலாம் பாருங்கோ.. :lol:

அதே போல் சொந்த தாயின் துயர் தீர்ந்த பிறகு..(செவிலி தாயிற்கு)..ஒரு வேளை துன்பம் வந்தால் நிச்சயமா உதவுவார்கள் எண்டு தான் நினைக்கிறன் :D ..செவிலி தாயை வாழ்த்தி தான் பிச்சை எடுக்க வேண்டும் எண்டு இல்லை ஏன் எண்டா வாழ்த்தாட்டியும் இன்று அந்த அன்னை பிச்சை போட்டு கொண்டு தானே இருக்கிறாள் தாத்தா.. :)

அப்ப நான் வரட்டா!!

சொந்தத் தாயின் துயர் கண்டு ஓடியவர்கள்.. அவளின் துயர் தீர உதவுவினம்.. கிழிப்பினம்..! சொந்த தாயின் துயர் தீர்க்க விரும்பிறவன்.. தூர இருப்பினும் அவளின் காலடியில் போய் நின்றல்லோ அவளின் துயர் என்னென்று கண்டு தீர்க்க முயல வேண்டும். இது.........?????!

ஒன்று மட்டும் புலப்படுகிறது.. பொருளாதாரம் தேட "அகதி" என்ற முத்திரையைக் குத்த சொந்தத் தாயையே குத்திக் குதறக் கூடிய கொடிய தமிழர்கள் பலர் உளர்..! உண்மையை ஒத்துக் கொள்ள பல பேர் தயங்கினம். இதுதான் இவைட உண்மை மூஞ்சி..! :D

Edited by nedukkalapoovan

:o:) சீ சீ இந்தப் பழம் புளிக்கும் ^_^
  • கருத்துக்கள உறவுகள்

இச் செய்தியை சிலரின் பார்வைக்கு வைப்பது சாலப் பொருந்தும் என்று நினைக்கிறேன்...

"புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே இருக்கின்ற பிரிவினைகளை விட்டுவிட்டு தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை வன்பறித்து நிற்பவர்களை கலைப்பதற்கான பொருளாதார வளத்தையும், உணர்வு ரீதியான பலத்தையும் ஒன்றுபட்டு நின்று தருகின்றபோது நாங்கள் எழுந்து நிற்போம்."

பொங்கு தமிழ் நிகழ்வுகளை ஒட்டி யோகரட்ணம் யோகி அண்ணன் வழங்கிய செவ்வியில் இருந்து..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.