Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைப் படையினரின் பயிற்சிக்காக அனைத்துக் கதவுகளையும் திறந்துள்ள இந்தியா

Featured Replies

இந்தியாவிலுள்ள பல்வேறு இராணுவப் பயிற்சி முகாம்களில் 500 க்கும் மேற்பட்ட இலங்கை படையினருக்குப் பயிற்சிகள் வழங்கபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிசோரம் மாநிலத்தில் வனபயிற்சி நிலையத்திலும், மாரட்டிய மாநிலம் தேவலாவியில் உள்ள பீரங்கிப் போர் பயிற்சி நிலையத்தில் போர் பயிற்சியும் அளித்து வருகின்றது.

இலங்கை படைவீரருக்கு தனது இராணுவ பயிற்சி முகாம்களின் அனைத்து கதவுகளையும் இந்தியா திறந்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தகவல் தொழில்நுட்பம், நீர்மூழ்கிக் கப்பல் போர் பயிற்சி போன்ற பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதேபோல மங்கோலியா,மொரீசியஸ், போஸ்வான, உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் இந்தியா பயிற்சி அளித்து வருகிறது.

இலங்கை அண்மைக் காலமாக சீனா,பாகிஸ்தானுடன் உறவை அதிகரித்து ஆயுதங்களை வாங்கி வருகிறது. இதை தடுக்கவே இந்தியா ஆயுதங்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் தலைமையில் உயர் மட்டக் குழு அண்மையில் இலங்கை சென்றது. இலங்கைளுடன் இராணுவ உறவை பலப்படுத்திக் கொள்ளவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஆயுத விநியோகத்துடன் இலங்கை படைக்கு இராணுவப் பயிற்சி

இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் முயற்சிகளை மீள ஆரம்பிக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேசமயம் இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சியளிப்பதற்கு அந்நாடு முன்வந்துள்ளது.

2008 2009 காலப் பகுதியில் மட்டும் சுமார் 500 படை அதிகாரிகள் இந்திய நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர். இவர்கள் பல்வேறு தரத்தினை சார்ந்தவர்களாகும். மிசோரம் மாநிலத்திலுள்ள கிளர்ச்சி எதிர்ப்பு, வனயுத்தம் தொடர்பான பாடசாலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பீரங்கிப் படைக் கல்லூரி என்பவனவற்றிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதனைவிட ஏற்கனவே துவக்கு சுடுதல், கடல் நடவடிக்கைகள், தொடர்பாடல், நீர்மூழ்கி கப்பலில் சண்டையிடுதல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்பட்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் படையினருக்கு அதிகளவிலான ஆயுதங்கள், யுத்த தளபாடங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கும் தருணத்தில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்குள் சீனா தந்திரோபாய ரீதியில் ஊடுருவுவதற்கு பதில் நடவடிக்கையாகவே புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புடன் கடல் ரோந்து என்பனவற்றுடன் ஆயுத விநியோகம் மற்றும் பயிற்சி வழங்குதல் என்ற இரட்டை உபாயத்தையும் இந்தியா முன்னெடுக்கவுள்ளது.

பத்து நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் ஆயுதங்களுக்காக சீனா மற்றும் பாகிஸ்தான் பக்கம் இலங்கை அதிகளவுக்கு நாடிச் செல்வது குறித்து விசனத்தை வெளியிட்டிருந்தனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையானது நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த உடன்படிக்கை தட்டி எழுப்பிவிடுமென்று அஞ்சியே புதுடில்லி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஆனால், கொழும்புக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை புதுடில்லி இப்போது மாற்றிக்கொண்டுள்ளது.

உண்மையிலேயே 2002 இல் சுகன்யா ரோந்துக் கப்பலுடன் ஆயுத விநியோகம் ஆரம்பமாகிவிட்டது. இப்போது அண்மைக் காலமாக ஆயுத விநியோகம் விரைவுபடுத்தப்பட்டிருப்பது

நாம் ஈழத்தில் வாழ போராடுகிறோம்.... :wub:

அவர்கள் உலகில் வாழ்வதற்காக போரடுகிறார்கள்... :):lol:

போராட்டம்தான் வாழ்கை.... அதையும் நாம்பாத்திடுவோம். இந்த நவீன உலகில்.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.