Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை

[12 - July - 2008]

* அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென இந்தியாவிலிருந்து 1500 படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லையெனத் தெரிவித்துள்ள அரசு இந்தியப் படை வரவுமில்லை, இனிவரப்போவதுமில்லையெனவும் உறுதிபடக் கூறியுள்ளது.

சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கேள்விக்கு அரசு சார்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியதாவது;

சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் இலங்கை வந்துள்ளதாக வெளியாகும் தகவல்களை அரசு முற்றாக மறுக்கின்றது. ஒரு இந்திய படைவீரர் கூட இலங்கையில் காலடிவைக்கவில்லை.

சார்க் மாநாட்டுக்கு வரும் ஒருநாட்டின் அரச தலைவரொருவர் தான் வரும்போது தனக்கு தேவையான பாதுகாப்புக்கு தனது பாதுகாப்பு பிரிவை அழைத்து வரலாமே தவிர தனது நாட்டுப்படைகளை கொண்டுவர முடியாது.

1500 இந்தியப் படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் முற்றுமுழுதாக கடைந்தெடுக்கப்பட்ட பொய். அரசாங்கம் ஒருபோதும் தனது கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படாது.

இந்தியப்படை இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சும் முற்றாக மறுத்துள்ளது. அரசுக்கு எதிராக இவ்வாறான விஷமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜே.வி.பி. யினரே இவ்வாறான தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஜே.வி.பி.யினர் தாம் மட்டும் தான் புத்திசாலிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைத்துச் செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கென 1500 இந்தியப் படையினர் இலங்கை வந்துள்ளதாக வெளிவரும் செய்திகளை அரசு முற்றாக மறுக்கின்றது. இந்தியப் படையினர் எவரும் இலங்கை வரவும் இல்லை வர அனுமதிக்கப் போவதுமில்லை என்பதை அரசு உறுதியுடன் கூறிக்கொள்கின்றது.

http://www.thinakkural.com/news/2008/7/12/...s_page54389.htm

முடிவை சொல்லுங்கப்பா? வருவார்களா மாட்டார்களா?

முடிவை சொல்லுங்கப்பா? வருவார்களா மாட்டார்களா?

நீங்க என்ன நினைக்கிறீங்க....??

ஏற்கனவே 207 விமான கண்காணிப்பாளர்களும் வந்துவிட்டனர்

சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் இலங்கை விமானப்படையினருக்கு அது தொடர்பான பயிற்சிகளை வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்காக இந்தியாவைச் சேர்ந்த 207 சிறப்பு நிபுணர்கள் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வான் பரப்பு பாதுகாப்புக்கான ரேடார் கட்டமைப்பு வசதிகளை இந்தியாவே இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்காக இந்திய இந்த வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்த முன்வந்துள்ளதாகவும்

இந்தியாவின் 3 யுத்த கப்பல்கள் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் தரித்து நிற்கும் என ஐசூர்யாவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/http://isoorya.blogspot.com/

நான் என்ன சாத்திரியாரா?வர தானே வேண்டும்.மகிந்தட ஆட்களை நம்ப முடியாது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள்

வருவார்கள் என்றும் சொல்லமுடியாது

வரமாட்டார்கள் என்பதும் தெரியாது

வரவேண்டிய நேரத்தில் வருவார்கள்என்றும் சொல்லமுடியாது

வரவேண்டி வந்தால் வருவார்கள்என்பதும் தெரியாது

ஆனால் இதுவெல்லாம்

மகிந்தவின் கைகளில் இல்லை என்பது தெரியும்

இலங்கையின் கையில் இல்லை என்பதும் தெரியும்

இந்தியாவின் கையிலும் இல்லை என்பதும் தெரியும்

அப்படியாயின் இதெல்லாவற்றையும் தெரிந்தவர் யார்???

இதெல்லாவற்றையும் தீர்மானிப்பவர் யார்????

ஆம் அது பிரபாகரன் என்னும் நாமம்................

  • கருத்துக்கள உறவுகள்

பந்தயம் பிடிப்பம்...கிரிக்ககெட் சூதாட்டம் மாதிரி இது இந்தியன் ஆர்மிய வைச்சு ஆடுவம்...

அது சரி கொழும்பில ஆடுகள் மாடுகள் கோழி எல்லாம் களவு போகபோதே...

நாளை போறாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய(ஞாயிறு) லக்பிம நியூஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் இந்தியப்படையினர் 1500 வருகின்றார்கள் எனவும் அவர்களைத் தங்க வைக்க ஹோட்டல் தாஜ் சமுத்திரா, ஹில்டன் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதா

அவங்கள் வந்ததா தகவல் தெரிந்தவர்கள் மறக்காமல் யாழ்களத்துக்கு தெரிவிக்கவும்...

(அவங்கள் கட்டுநாயக்காவில இறங்கினா.. வெள்ளவத்தைக்கு நெய்மணக்குமா?) அதுல இருந்து தெரிந்துகொள்லலாம் :lol:

:lol: படை வரும் பின்னே நாற்றம் வரும் முன்னே.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கள் மப்புல ஒருக்கா வருவாங்கள் என்று சொல்லுவாங்கள் அப்புறம் வரமட்டாங்கள் என்று சொல்லுவாங்கள் இவங்களின் கதையை கேட்டாலே எங்களுக்கும் மப்பு வந்திடும் :lol: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.