Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கை தாக்குதல் நிறுத்தப்படுவது புலிகளுக்கு அனுகூலம். பிரிட்டன் தடையை நீக்க வாய்ப்பளிக்கும்.

Featured Replies

தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளுக்கு அனுகூலமாக அமையுமெனவும் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்குவதற்கும் வாய்ப்பாக அமையுமென்ற கருத்தை வருகை தந்துள்ள பிரிட்டன் வெளியுறவு உதவியமைச்சர் மல்லே பிரவுண் பிரபு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் த.தே.கூட்டமைப்பு பா.உ தலைவர் சம்ந்தனுடனான சந்திப்பின் போதே மல்லோ பிறவுன் பிரபு இக்கருத்தை தெரிவித்தார் என தெரியவருகிறது.

மல்லோ பிரவுண் பிரபுவை நேற்று முன்தினம் கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் சம்பந்தன் சந்தித்து உரையாடினார். 40 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பின் போது சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கூறியதாவது :

'இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒன்றைக்காணும் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் அமையவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்ககைள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

பல்லின பல்கலாசார, பல்சமய மக்கள் வாழுகின்ற நாடு என்பதை ஏற்றுக் கொண்டு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும எண்ணத்துடன் இலங்கை அரசு செயல்படவில்லை. பெரும்பான்மை இனத்தின் நாடு இலங்கை என்ற நிலைப்பாட்டில் மீதான் அரசு செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால், அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வாய்ப்பு அரிதாகவே தென்படுகின்றது

இராணுவ நடவடிக்கையிலேயே அரசு இன்று முழுமையாக ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்ததைக்கு செல்லாமல் இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை எவரும் மறுக்கமுடியாது.

சர்வகட்சி மாநாடு மூலம் ஒன்றுமே அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒன்றை அடையும் முயற்சியில் சர்வகட்சி மாநாடு தோல்வி கண்டுள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்கதையாக மாறியுள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இத் திகதிவரை 90 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்று முறைப்பாடுகள் வெளியாகியுள்ளன. அரசின் போர் நடவடிக்கை தீவிரமடைந்து வருவதால் வன்னிப் பிரந்தியத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தமிழ்க் குடிமக்கள் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரசு ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்காது இருக்கிறது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். முன்வைக்கப்படும் தீர்வு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். அவ்வாறில்லாத ஒரு அரசியல் தீர்வை, அர்த்தமற்றதான அரசியல் தீர்வை தமிழ் பேசும் மக்கள் தொடமாட்டார்கள்.

முன் வைக்கப்படும் அரசியல் தீர்வு, அர்த்தமுள்ளதாக அமையும் பட்சத்தில் மாத்திரமே இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை நாம் கேட்க முடியும்.

உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் கூடியதும், வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களை உள்ளடக்கியதுமான சுயாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் மட்டுமே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண முடியும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு வலியுறுத்திக் கூறவேண்டும். சர்வதேச சமூகம் இனியும் மௌனித்துக் கொண்டிருக்கக் கூடாது.' என்று சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தன் கூறியவற்றை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட பிரிட்டிஷ் அமைச்சர், அரசியல் போராட்டத்தில் நியாயமிருப்பதைத் தாம் உணர்வதாகவும் அப்போது கூறினார். என்றும் தெரியவருகிறது.

பிரிந்து செல்லும் கட்டத்திற்கு நாடு வந்து விட்டதா என்பது பற்றியோ அல்லது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் பற்றியோ தாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறிய அவர் தென்னிலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதாக அரசு சுமத்தும் குற்றச்சாட்டு பற்றி அப்போது கருத்து வெளியிட்டாதாக தெரியவருகிறது.

தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது, விடுதலைப்புலிகளுக்கு இலாபமாக அமையும். அது விடுதலைப்புலிகள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையை அகற்றுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கும். இது தான் உண்மை நிலை என்று பிரிட்டன் அமைச்சர் அப்போது கூறியதாகவும தெரியவருகிறது.

நன்றி தினக்குரல்.

பட்டறிவுப் பகிர்வு!

மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மஹிந்த விசேடமான பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவரது வேலைத்திட்டங்களின் பிரகாரம் இலங்கை தற்போது முற்போக்குவாதப் பாதையில்??? பிரவேசித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படும் விருப்பத்தில் சர்வதேச சமூசங்கள் இருக்கின்றன.

இவ்வாறு மலேன் பிறவுண் பிரபு நேற்று முன் தினம் அலரிமாளிகையில் மஹிந்தவை சந்தித்த வேளையில் புகழாரம் சூட்டினாரென மஹிந்தவின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளர்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவரலய அரசியல் விவகார அதிகாரி மஹேந்திர ரணவீர பட்டப்பகலில் ஜனக்கூட்டம்; நிறைந்த இடத்தில் அரசின் தகவல் திணைக்களத்துக்கு அண்மித்;த பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டா.

அவரைக் கடத்திச் செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை, மலேன் பிறவுண் பிரபு அறிந்திருந்தால் இவ்விதம் கூறியிருப்பாரா எளக் கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நன்றி சுடர் ஒளி

பேச்சு மேசையின் மீதிருந்த புட்டியைக் கண்ட தடம் புரண்டுவிட்டாரோ பிரபு??? :mellow::wub::wub:

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்களை பார்ட்டி/தண்ணி/பெண் வைச்சு கவுக்கிறத்திலை சிங்களவனுக்கு நிகர் யாரும் இல்லை.

-- அன்று துட்டகைமுனு தன் அம்மாவையே அனுப்பி எல்லாளனின் அமைச்சரை வசப்படுத்தி போரை வெற்றி கொண்டான்.

-- சொல்பரிக்கு மது/மாது கொடுத்து அரசியல் யாப்பையே தங்களுக்கு சாதகமாய் எழுத வைச்சாங்கள்.

-- புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக கனடாவில் Stockwell Day என்ற அமைச்சரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து எல்லா தடைகளையும் கொண்டுவந்தாங்கள் (குறிப்பாக அண்மையில் உலகத் தமிழர் அமைப்பு மீதான தடைக்கு இந்த அமைச்சர் தான் பிரதான காரணம்)

இப்படி தமிழினத்தை கவிழ்ப்பதற்கு எல்லா கேவலமான வழிமுறைகளையும் பன்நெடுங்காலமாக சிங்களவன் கையாள்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் புலிகள் என்ன முசுப்பாத்திக்கோ தாக்குதல் நடத்துகின்றார்கள்? பிரபு மப்பில் புலம்புகிறார் போல உள்ளது. இவர் சொல்லில் வீரராக இருப்பாரெனில் அரசின் வடக்கு, கிழக்கு மக்கள் மீதான அரசின் காட்டு மிராண்டி தாக்குதல் பற்றி ஒரு சொல் கூட கூறவில்லை. அத்துடன் அரசுடன் சேர்ந்தியங்கும் துரோகி பிள்ளையானுடன் பேச்சுவார்த்தை நடாத்தி யாரின் பிரச்சனை தீரப்போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இன்று படும் அவலங்களுக்கு காரண கர்த்தாவே இந்த பிரித்தானியாதான். அவனுக்கு எந்த அருகதையும் இல்லை எம்மைப்பற்றிக் கதைப்பதற்கு. சிங்களவனின் கொலைவெறித் தாண்டவத்துக்கு தீனி போடும் இவர்கள் தென்னிலங்கையில் நடக்கும் தாக்குதக்களுக்கு மட்டும்தான் கண்ணீர் வடிப்பார்கள். நாம் செத்தால் நாய்களுக்குச் சமம்.

அப்படியாயின் வன்னி மீது தாக்குதல் நடாத்தும் சிறீலங்காவை பிரிட்டன் தடை விதிக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் தென்னிலங்கையில் "சிவிலியன்" இலக்குகளை தாக்குவது பிரிட்டன் உட்பட்ட நாடுகளுக்கு விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் தடங்கலாக இருக்கிறது என்று அவர் கருதுகிறார் போலும். அதில் ஒரு வித நியாயத்தன்மை இருக்கிறது.

சிறீலங்கா அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடரும் வேளை.. தமிழர் தரப்பும் (அது எத்தரப்பு எனினும்) அதைச் செய்வது நல்லதல்ல.

தென்னிலங்கையில் இராணுவ இலக்குகளை தாக்குவது போர் நியமங்களுக்கு எதிரானதல்ல...! அதை அவர் கருதிச் சொல்லி இருக்கமாட்டார்..! :mellow:

முதல்ல சும்ம சும்மா லண்டனில்ல புடிச்ச பொடியங்களை விடட்டும்..... பிறகு மகிந்த செய்யிற மனித உரிமை மீறல்களை நிறுத்தட்டும்.... அதுக்குப்பிறகு யார் உண்மையா குண்டு வைக்கிறங்கள் எண்டு பாக்கட்டும்....

சும்மா புலிகளின் மேல் பழிபோடுவதை நிறுத்தவேண்டும்..... 30 ஆண்டுகளா இதுகளைத்தான் கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு.

புலிகள் மீதான தடை நீக்க முன் வன்னில் கையில் இருக்கவேண்டுமே..

இவர்கள் இப்படி தான் சொல்லுவார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் தடை என்பது பிரச்சனையான விடயமல்ல. அது நீக்கப்படுவதற்கு கால எல்லை இல்லை. முதலில் தமிழீழம் என்ற மண்ணைப் பெற்றெடுப்போம். அது தான் முக்கியம்.

அதன் பின்னர் தடை நீக்கம் பற்றி ஆராய்வோம். தமிழீழத்தை நாம் வென்றெடுத்தோமானால் புலிகள் அமைப்பு என்பது தேவைப்படாது. தலைவர் அதைக் கலைத்துவிட்டு, இராணுவமாக்குவார். அப்போது தடைகள் பற்றி அலட்டத் தேவையில்லை.

முதலில் தமிழீழத்திற்கான உங்களது உயர்ந்தபட்ச அர்ப்பாணிப்புக்களை வழங்குங்கள். தலைவன் காலத்தில் தமிழீழத்தைப் பெற்றிட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.