Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் வன்முறை கலாசாரம்

Featured Replies

இலங்கையின் வன்முறை கலாசாரம்

[ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2008, 11:16 மு.ப ஈழம்] [க.நித்தியா]

இலங்கையில் நிகழ்ந்த- நிகழ்ந்து வரும் வன்முறை கலாச்சாரத்தின் தன்மை குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் தமிழ் வடிவம்:

இலங்கை வன்முறைகள் பற்றி ஆராய்வதற்கு கறுப்பு ஜூலை இனக்கலவர அவலம் நேர்ந்த 25 ஆவது ஆண்டு பூர்த்தி நாளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றில் ஓர் கறைபடிந்த அத்தியாயமாக கறுப்பு ஜூலை கருதப்படுகிறது. கொழும்பிலும் வேறு பிரதேசங்களிலும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலாள வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 95 விழுக்காடு தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இந்த கோரத் தாண்டவ வெறியாட்டம் தமிழர்கள் மீது அநாயாசமாக கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கறுப்பு ஜூலை அவலம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகும் இந்த சந்தர்ப்பத்தில் இனக்கலவரம் எவ்வாறு கலாச்சார வன்முறையாக மாறியுள்ளது என்பதனை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

தற்போது வன்முறைக் கலாச்சாரம் எமது சமூகத்தில் நிறைந்து காணப்படுகின்றது. சுதந்திரத்திற்கு பின்னான இலங்கையில் காலத்துக்கு காலம் பல்வேறு பரிமாணங்களில் வன்முறைகள் வெடித்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியுரிமை விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொண்ட விதம் இந்த வன்முறைச் செயல்களில் முதலாவது கட்டமாக குறிப்பிடலாம்.

இலங்கையின் முதனிலை வருமான பங்களிப்பாளர்களான இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவே இந்த சட்டத்தின் மூலம் கருதப்பட்டனர்.

1956 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தனிச்சிங்கள சட்ட மூலத்தின் மூலம் இனமுறுகல் நிலை ஏற்பட்டது. இலங்கை மூன்று மொழிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் நாடாக போற்றப்பட்டது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் காணப்படுகின்றன.

தனிச்சிங்கள சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர், யுவதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சிங்கள மக்கள் ஆங்கில மொழிப் புலமையின்மையினால் எதிர்நோக்கிய அசௌகரியங்களுக்கு ஓர் தீர்வாகவே இந்த தனிச்சிங்கள சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டது.

எனினும், இந்த நிலைமை தமிழ் மக்களை மிகவும் மோசமாக பாதித்தது. ஆங்கில மொழியூடான கல்வி மறுக்கப்பட்டதன் மூலம் அனைத்துலக ரீதியில் நாமே நமது பின்னடைவிற்கு காரணமாகியுள்ளோம்.

1958 ஆம் தமிழ் தலைமைகளினால் அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் இன வன்முறைகளாக வெடித்து நாடு முழுவதும் வியாபித்திருந்தது. இந்த அடக்குமுறை நடவடிக்கைகளினால் அநேக தமிழர்கள் தாம் இரண்டாம் நிலை குடிமக்களாக நடத்தப்படுவதாக உணர்ந்தனர்.

அமைதியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இராணுவ வன்முறைகள் தமிழ் இளைஞர்களை கிளர்ச்சி கொள்ளச் செய்தது. இந்த நிலைமையே இன்று வரை தொடர்ந்து கொண்டிடிருக்கின்றது.

பல வருடங்களாக இலங்கையில் கட்டம் கட்டமான இனவன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

இலங்கை மூன்று பிரதான கிளர்ச்சிகளை எதிர்நோக்கியதாகும்.

இரண்டு கிளர்ச்சிகள் தெற்கில் வெடித்தது. மற்றையது இன்றுவரை தொடர்ந்து செல்லும் போராகும்.

அனைத்து மோதல்களினாலும் பாரியளவில் உயிர்களும் சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.

உதாரணமாக 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியின் போது சுமார் 20 ஆயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

1988-1989 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியில் சுமார் 60 ஆயிரம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தற்போது நிகழ்ந்து வரும் போரின் மூலம் இதுவரையில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் மருத்து சஞ்சிகையொன்றின் தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கையின் இரண்டு மடங்கானோர் காயமடைந்துள்ளனர். போரின் காணரமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதுடன், மேலும் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

போரின் மூலம் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை.

எண்ணில் அடங்காதளவு வீட்டு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக பெருந்தோட்டப் பகுதியில் தொழில் புரியும் பெண்கள் தங்களது சம்பளப் பணத்தை கணவன்மாருக்கு மதுபானம் அருந்துவதற்கு வழங்காத சந்தர்ப்பத்தில் இந்த வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கின்றன. பாலியல் வன்புணர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

ஆசியப் பிராந்திய நாடுகளைப் பொறுத்தமட்டில் அதிகளவு தற்கொலைச் சம்பவங்கள் நிகழும் நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விவரத் தகவல்களின் மூலம் தெரிகிறது.

கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்வங்கள் வழமையான நிகழ்வாக இன்று மாறியுள்ள ஓர் துர்ப்பாக்கிய சூழ்நிலை உருப்பெற்றுள்ளது. இலங்கையில் ஊடகங்கள் அதிகளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

சமூகம் என்ற வகையில் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாத ஓர் வன்முறைக் கலாச்சாரத்தை நாம் உருவாக்கியுள்ளோமா? இலங்கை இயல்பாகவே வன்முறை நிறைந்த ஓர் நாடா? இலங்கை மக்கள் மிகவும் நட்புக்குரிய பண்பான மக்கள். பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்களுக்கு நாம் அடைக்கலம் அளித்துள்ளோம்.

இந்தத் தகவல்கள் சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை. இலங்கை பல மதங்களின் வீடாக கருதப்படுகின்றது. இலங்கையில் பௌத்த மதத்தை பொறுத்தமட்டில் சிறப்பிடம் இடம் காணப்படுகின்றது.

பௌத்த மதம் அனைத்து வகையான வன்முறைகளையும் முற்றாக நிராகரிக்கின்றது. இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் ஏனைய ஆன்மீக அமைப்புக்களும் இலங்கையில் காணப்படுகின்றன.

இந்த அனைத்து மதங்களும், ஆன்மீக அமைப்புக்களும் வன்முறையற்ற அமைதியான வழியை போதிக்கின்றன.

பல வகையான வன்முறைகள் காணப்படுகின்றன. கட்டமைப்பு சார் வன்முறை, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இந்த நிலைமை தோன்றுகின்றது. பெருந்தோட்டங்களின் லயன் அறைகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களினால் இந்த கட்டமைப்புசார் வன்முறை மேற்கொள்ளப்படுகின்றது.

சுகாதாரம் கல்வி நிலைமை என்பவற்றில் மலைநாட்டுப் பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையைக் காட்டி நிற்கின்றது.

கலாச்சார வன்முறை, ஓர் சமூகம் அல்லது இனம் மற்றுமொரு சமூகத்தின் கருத்துக்களை மறுதலித்தல் இந்த வகையினைச் சாரும்.

நேரடி வன்முறைகளும் எமது சமூகத்தில் பல தசாப்தகாலங்களாக இடம்பெற்று வருகின்றன.

இலங்கை பல மதங்களையும், பல்வேறு இனத்துவ அடையாளங்களையும் கொண்ட ஓர் சமூக அமைப்பு இலங்கையில் பல நூற்றாண்டு காலமாக காணப்படுகின்றது.

இந்த பல்லினத்துவ அடையாளங்கள் எமக்கு காணப்படும் தனித்துவமான ஓர் சொத்தாக கருதப்பட வேண்டும். வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் எமது சமூகங்கள் ஒற்றுமையுடன் பல காலங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கொழும்பில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்கள் மக்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர்.

25 ஆவது கறுப்பு ஜூலை நினைவு நாளில் நாம் மதிப்பீடு செய்து விட்ட தவறுகளை திருத்திக்கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.