Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலுப்பைக் கடவையும் ஆக்கிரமிப்பாளர் வசம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து வடக்கே அமைந்திருந்த இலுப்பக்கடவை பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த மேற்படி இலுப்பக்கடவை தளம் புலிகளின் முக்கியமான தளம் என்றும், இங்கே கடற்புலிகளின் தளம் இல்லை என்றும், இவ் பகுதியில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவ்பகுதியை பாவித்து வந்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://puspaviji.blogspot.com/

Edited by puspaviji

கடந்த சில தினங்களுக்கு முன்னர். மன்னார் மாவட்டத்தில் விடத்தல் தீவுப் பகுதியைக் ஆக்கிரமித்த இராணுவத்தினர், அது முடிந்து ஓரிரு நாட்களில் விடத்தல் தீவிலிருந்து வடக்கே 12 கிலோ மீற்றர் தூரம் சடுதியாக முன்னேறி நேற்று இலுப்பைக் கடவையையும் கைப்பற்றிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மிகவும் வேகமாக பெரிதாக எதிhப்புகளோ, தடைகளோ இன்றி முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் படையினருக்கு ஆதரவாக, பின்புற இராணுவ நிலைகளிலிருந்து பொதுமக்கள் குடியிருப்புகள் நோக்கி செறிவான ஷெல் வீச்சசுகள் நடத்தப்படுகின்றன. இதானல் இலுப்பைக்கடவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போக்கிடம் தெரியாமல், இடம் பெயர்ந்து அந்தரிக்கின்றனர் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

விடத்தல் தீவிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இலுப்பைக் கடவையை ஞாயிற்றுக் கிழமை ஆக்கிரமிப்பாளர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தின் விஷேட படைப் பிரிவொன்றும் ஞாயிறு நள்ளிரவு இலுப்பைக் கடவையை சுற்றி வளைத்த பின்னர் அதிகாலை நகருக்குள் நுழைந்தனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, 21 வருடங்களுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளிடமிருந்து இப்பகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் வடமேற்குக் கரையில் அமைந்திருந்த மற்றுமொரு முக்கிய தளத்தை விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலுப்பைக் கடவையில் படையினர் பாரிய முகாமொன்றைக் கைப்பற்றியுள்ளனர் என்றும், எனினும் இது கடற்புலிகளின் தளமல்ல என்றும் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்தள்ளார்.

விஷேட அதிரப்படையினர் இலுப்பைக்கடவை நகரத்திலிருந்து 2 கீலோ மீற்றர் வடக்கே முன்னேறிச் சென்று தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலுப்பைக் கடவையை கைப்பற்றுவதற்காக 48 மணித்தியாலங்கள் இடம் பெற்ற மோதலில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று கூறிய நாணயக்கார இதன் போது படையினருக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இலுப்பகை; கடவை மற்றும அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஷெல் வீச்சு மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

இதே வேளை இலுப்பகை;கடவைப் பகுதியை ஆக்கிரமிப்பாளர் கைப்பற்றிமை தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து நேற்று மாலை வரை எந்த தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.

நன்றி சுடர் ஒளி

எனது ஊர் கட்டாடிவயலில் ஆமி என்பது கொஞ்சம் வருத்தமான செய்திதான். உறவுகள் பலர் அங்கு இல்லை எண்றாலும் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் எண்று மனம் துடிக்கிறது.

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியினை கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் அறிவிப்பு!

வடக்கில் இலுப்பைக்கடவை பகுதியினை நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மன்னார், விடத்தல்தீவுக்கு வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இலுப்பைக்கடவை நகரை நோக்கி படையினர் முன்னேறியதாகவும், நேற்றுக் காலை நகருக்குள் படையினர் நுழைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வெற்றியின் மூலம், வடக்கில் விடுதலைப் புலிகளிடமிருந்து மற்றுமொரு மிகப் பெரிய நகரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தளமாக இந்நகரம் விளங்கியதாகவும், ஆனால் கடற்புலிகள் இங்கு நிலைகொண்டிருக்கவில்லை எனவும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 48 மணி நேரத்தில் நடைபெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தவித கருத்துக்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்:செல்வி

http://www.tamilseythi.com/srilanka/ilupai...2008-07-21.html

இராணுவம் சக்கரவியூகத்தினுள் மாட்ட வருகின்றது. அவர்கள் கைப்பற்றி உள் நுழையும் பகுதிகளை பார்க்கும்போது வசமாக மாட்டப்போகின்றார்கள். ஒன்றை இழந்துதான் இன்னொன்றை நாம் பெறவேண்டும். சில விட்டுக்கொடுப்புக்கள்தான் நாளையை வெற்றியை அள்ளிததரும் . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் சக்கரவியூகத்தினுள் மாட்ட வருகின்றது. அவர்கள் கைப்பற்றி உள் நுழையும் பகுதிகளை பார்க்கும்போது வசமாக மாட்டப்போகின்றார்கள். ஒன்றை இழந்துதான் இன்னொன்றை நாம் பெறவேண்டும். சில விட்டுக்கொடுப்புக்கள்தான் நாளையை வெற்றியை அள்ளிததரும் . .

எனது கருத்தும் இதுதான் . இந்த முறை அவர்கள் பெறப்போகும் இழப்பு இதுவரை யுத்தகளத்தில் பெறாததாக எண்ணிப்பார்க்காத இழப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இராணுவம் யுத்தகளத்தில் அகலக்கால் வைத்தாலும் அது ஒருபோதும் நிரந்தர வெற்றியாகஇருக்கமுடியாது அங்கு அவர்களுக்கு பொறி வைக்கப்படப்போகிறது என்பதே உண்மை.

நாம் நினைப்பது போல் இருக்குமா என்பது சந்தேகம். ஏனெனில் இலங்கை அரசின் நோக்கம் வன்னியில் நிலப்பரப்பை குறைவாக்கி விமானத் தாக்குதலுக்கு இலகுவாக இலக்குகளை ஏற்படுத்துவதே......

சில நேரம் இன்னும் கொஞ்ச கலத்திக்குள் சண்டையை நிப்பாட்டி விட்டு கடும் விமாணத்தாகுதல்களை செய்வார்கள்

1000ம் குண்டில் 1 குண்டாவ்து முக்கிய இடங்களை தாக்காதா? என்று ஆகா விட்டு விட்டு அடிக்கலாம் என்பது எலல நேரமும் சரிவருமா என்பது சந்தேகம் ஆனால் வன்னியில் 50.000 இராணவத்தின் உடல்களை யாருக்குமே கிடைகாத அளவு ***சு அடிசால் சிங்கள நாடே அதிரும் அதை விட இனியும் தொடர்ந்தால் 50 லட்சம் சிங்கள மக்கள் அழிவார்கள் என்று காட்டனும் இலலது போனால் கருணாவுக்கு தற்போது கிடைத்த பெயர் மாறி எங்கள் தலைவர்களுக்கு மாட்டி விடுவார்கள் கருனாவுக்கு நெல்சன் மண்டலொ என்ற பெயரை மாட்டி விட்வார்கள்........

புலிகள் நல்லவர்கள் அப்பாவிகளை தாக்க மாட்டார்கள் கெளரவமாக சண்டை பிடித்து பண்டாரவன்னியன் போல் மடிவார்களே ஒழிய அப்பாவிகளை அழிக்க மாடார்கள் ...................

இந்த நம்பிக்கை ஒன்று தான் புலிகள் மீது அனைத்து நாடுகளும் ஏறி இருந்து சவாரி செய்கிறார்கள்.....

வேதனையான செய்தி..

இந்த செய்தில என்ரகண்ணுக்கு பேயும் பிசாசு தான் தெரியுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.