Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழ் அகதிகள் வருகை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் அகதிகள் வருகை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பு

05.08.2008 / நிருபர் வானதி

இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களால் தமிழகத்திற்கு தமிழ் அகதிகள் செல்வது தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலப்பகுதியில் கடுமையான கடற்கொந்தளிப்பின் மத்தியிலும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழர்கள் தமிழ் நாட்டிற்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

முன்னைய காலங்களில் இந்த அகதிகள் தமது உடைமைகள் சிலவற்றையாவது தம்முடன் எடுத்து வந்தனர்.

இப்போது சிறிய தொகைப் பணமோ அல்லது உடைகளோ இல்லாமல் வருகின்றனர் என்று தமிழ் நாட்டில் அகதிளுக்கான நிவாரணப் பணியில் தசாப்த காலங்களாக ஈடுபட்டு வரும் எஸ்.சி. சந்திரஹாசன் இந்தோ ஏசியன் செய்திச் சேவைக்கு நேற்றுத் தெரிவித்தார்.

தற்போது வருகை தருவோர் உடுத்த உடையுடன் மட்டுமே வருவதாக தோன்றுகிறது. அவர்களின் நிலைமை மிக மிக மோசம் என்று சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்திற்கு வரும் அகதிகளில் அநேகமானோர் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரியில் 145 அகதிகளும் பெப்ரவரியில் 159 பேரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் 233 பேரும் மேயில் 556 பேரும் ஜூனில் 228 பேரும் ஜூலையில் 242 பேரும் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

ஜனவரி 2006 இற்குப் பின்னர் தமிழகத்திற்குச் சென்ற இலங்கை அகதிகளின் தொகை 22 ஆயிரமாகும். மோதல்களால் ஏற்பட்டுள்ள இடப்பெயர்வு, கொலைகள், கடத்தல்களுக்கு அஞ்சியே தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வருவதாக சந்திரஹாசன் கூறியுள்ளார்.

படகுகளுக்கு அதிக தொகையை கட்டணமாகச் செலுத்தியே அகதிகள் தமிழ் நாட்டிற்கு செல்கின்றனர். சிலரை படகோட்டிகள் மணல் திட்டுகளில் இறக்கி விட்டுச் செல்லும் பரிதாபகரமான சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

அங்கு செல்லும் அகதிகள் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன், கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

இவர்கள் தமிழகத்திலுள்ள 117 அகதி முகாம்களில் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றனர்.

sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.