Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம்

சென்னை, ஆக. 9: ""ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல. தமிழகத் தமிழர்களின் பங்காளிகள்'' என்று காந்தளகம் பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் "அறவாணர் சாதனை விருது 2007' வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு அனைத்துலக அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது. சச்சிதானந்தம், மருத்துவர் ச.சண்முகம் ஆகியோருக்கு அனைத்திந்திய அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சச்சிதானந்தம் பேசியது:

இந்த விருது ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்ததாகக் கருதுகிறேன். காரணம் ஈழத் தமிழர் யாருக்கும் விருது அளிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து பாதகங்களுக்கும் ஈழத் தமிழர்கள் காரணம் என்பது சரியல்ல.

சிறப்புரை ஆற்றிய குன்றக்குடி அடிகளார்: இந்தியாவில் கொட்டிக் கிடப்பது ஞானக்குவியல். இந்திய ஓலைச் சுவடிகளின் கருத்துகளை எடுத்துச் சென்ற சீன யாத்ரீகன் பாகியான் கங்கை நதியைக் கடந்து சென்றபோது, படகு பாரம் தாளாமல் இருந்தது. படகோட்டி, அவர் வைத்திருந்த சுவடிகளில் சிலவற்றை நீரில் போட்டால், கரைக்குப் பாதுகாப்பாகச் செல்லலாம் என யோசனை கூறியதற்கு, "எல்லாச் சுவடிகளையும் பத்திரமாக கரையில் கொண்டு சேர். நான் நீரில் நீந்திக் கடந்து வருகிறேன்' என்று கூறினான் பாகியான் என்றார் அடிகளார். முன்னதாக அ. அறிவுநம்பி தலைமையில் "தமிழரை வீழ்த்தும் போதைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கிரிக்கெட், புகை, சின்னத்திரை, மது, திரைப்படம், சூது ஆகியவற்றின் கொடுமைகளை அதில், செ.தனராசு, அருள் மாணிக்கம், வே.திருநாவுக்கரசு, மு.முருகையன், காரைமைந்தன், ஆ.ஏகாம்பரம் ஆகியோர் விவரித்துப் பேசினர். விழாச் சிறப்பு மலர் (அறவேந்தன்), தமிழர் மகளிர் பண்டும் நேற்றும் (தாயம்மாள்), ஆனந்தரங்கப் பிள்ளை (நா.செல்வராசு), சேனாவரையர் உரைநெறி, இளம்பூரணர் உரைநெறி (சு.குருசாமி), தமிழர் தடங்கள், தடுமாற்றங்கள் (அறவாணன்) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

பேராசிரியர் சு.பழனியாண்டி, இரா.கலைவாணி, சு.தமிழ்வேலு, லயோலா மேலாண்மையியல் நிறுவன (லிபா) இயக்குநர் கஸ்மீர் ராஜ், இரா.குமாரவேலு, சா.வளவன், மைதிலி, ம.ரா. அரசு, வெ.நல்லதம்பி, அமுதா பாலகிருஷ்ணன், அருள் சீனிவாசன், லட்சுமி நாராயணி, துளசிபாக்கியவதி, செங்கமலத்தாயார், ஆறு அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஈழ இளைஞர்கள் ஆயுதம் எடுத்தது எப்படி?

சென்னை, ஆக. 9: கிருபானந்த வாரியாரின் பேச்சைக் கேட்டுத்தான் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தைக் கைகளில் ஏந்தினர் என்று மறவன்புலவு சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

அறவாணர் சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழ் மண்ணில் ஆன்மிக உரையாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார், ""அசுரர்களை ஒழிக்க, ஆயுதம் ஏந்தினார் பெருமான்'' என்று குறிப்பிட்டார். இது இளைஞர்களின் மனத்தில் ஆழமாகக் பதிந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர் என்றார் சச்சிதானந்தம்.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

"அறவாணர் சாதனை விருது 2007' ஐ பெற்றுக்கொண்ட மறவன்புலவு சச்சிதானந்தம் , தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் , மற்றும் மருத்துவர் ச.சண்முகம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ இளைஞர்கள் ஆயுதம் எடுத்தது எப்படி?

சென்னை, ஆக. 9: கிருபானந்த வாரியாரின் பேச்சைக் கேட்டுத்தான் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தைக் கைகளில் ஏந்தினர் என்று மறவன்புலவு சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

அறவாணர் சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழ் மண்ணில் ஆன்மிக உரையாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார், ""அசுரர்களை ஒழிக்க, ஆயுதம் ஏந்தினார் பெருமான்'' என்று குறிப்பிட்டார். இது இளைஞர்களின் மனத்தில் ஆழமாகக் பதிந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர் என்றார் சச்சிதானந்தம்.

http://www.dinamani.com

விடுதலை போராட்டம் ஆரம்பமானதற்கு எந்தவொரு சமய காரணங்களையோ அல்லது எந்தவொரு சினிமா காரணங்களையோ சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது . எமது போராட்டம் ஆரம்பமானதுக்கு காரணம் எமது மக்கள் சிங்களவர்களால் துன்புறுத்தப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள் எமது உரிமைகள் மறுக்கப்பட்டன என்பதே உண்மை. இது ஒரு விடுதலை போராட்டம் இதை ஒரு சமயம் சம்பந்தமாக வைத்து பேசுவது அழகல்ல. ஏன் சில தமிழகத்தவர்கள் இப்படி எமது போராட்டத்தை வேறு திசையில் பார்க்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை??????????

இப்படியானவர்களது பேச்சை பார்த்தால் ஏதோ தமிழகத்தவர்கள் சில பேர் தான் இந்த போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு காரணம் போலல்லவா இருக்கிறது இதில் எவ்வித உண்மையுமில்லை. எமது போராட்டம் எம்மவர்களாலேயே தொடங்கப்பட்டது இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் சுப்பண்ணை, மிகச்சரியாகச் சொன்னீர்கள். இப்படியான கூற்றுக்கள் மிகவும் கண்டனத்திற்குரியது!

"அறவாணர் சாதனை விருது 2007' ஐ பெற்றுக்கொண்ட மறவன்புலவு சச்சிதானந்தம் , தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் , மற்றும் மருத்துவர் ச.சண்முகம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .

எமது விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியவருக்கு (-ர்களிற்கு) வாழ்த்துக்களா?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.