Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சண்டியன் மேர்வினின் சில்வாவின் சமாளிப்பு

Featured Replies

களனி புதிய பாலத்திறப்பு விழாவில் 'சிரச' தொலைக்காட்சி நிறுவன படப்பிப்பாளர் தாக்கப்பட்டு அவரது புகைப்படக்கருவி பறிமுதல் செய்யபட்டது தொடர்பாக மேர்வின் சில்வாவிடம் பேலியாகொட பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவையும் தாக்குதலுடன் சம்பந்தபட்டவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜா செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

எனினும் மேர்வினை இதுவரை கைதுசெய்யாத அதே நேரம், அவரும் இதுவரை பொலிஸாரிடம் சரணடையவுமில்லை

இந்நிலையில், கடந்த 9ம் திகதி மேர்வின் சில்வாவின் வீட்டுக்குச் சென்ற பேலியாகொட பொலிஸார். இந்த சம்பவம் தொடர்பாக மேர்வினிடம் நீண்ட வாக்கு மூலமொன்றைப் பெற்றுள்ளனர்.

இதன் போது இந் நிகழ்வில் கலந்துகொண்ட தனது படம் விடுதலைப் புலிகளின் கைகளுக்குச் சென்று விடுமென்ற அச்சம் காரணமாக தனது படத்தை எடுக்க வேண்டாமென 'சிரச' புகைப்பிடிப்பாளருக்கு தான் கூறியதாக மேர்வின் சில்வா தெரிவித்ததாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதே நேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக இரு பௌத்த பிக்குகளிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

எனினும், இது வரை எவரும் இச்சம்பவம் தொடாபாக கைது செய்யபடவில்லை.

நன்றி தினக்குரல்

தாக்குதலில் ஈடுபட்ட 21 சந்தேக நபர்களின் புகைப்படங்களை 'சிரச' வலையமைப்பினர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டும் இன்னமும் அவர்கள் கைது செய்யப்படாதுள்ளனர்

இதற்கிடையில் நேற்று திங்கள் அன்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சண்டியன் மேர்வினின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றினைந்து சிரச ஊடகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். சிரச வலையமைப்பை நிறுத்தும் படி பதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆhப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எது எப்படியிருந்தாலும் சண்டியருக்கு புலி என்றால் கிலி என்று தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தனது படம் விடுதலைப் புலிகளின் கைகளுக்குச் சென்று விடுமென்ற அச்சம் காரணமாக

இவன்ரை திறத்தில , இவன்ரை படத்தை விடுதலைப்புலிகள் பொக்கற்றுக்குள்ளை வைச்சுக்கொண்டே இருக்கப்போயினம் .

Edited by தமிழ் சிறி

துஷ்டகைமுனு சொல்வதிலும் நியாயம் இருக்கிறது!

இனவாத சிங்களவர்களே "கொட்டி மெயாவ மரண் நாநே!" என்று அங்காலாய்க்கும் அளவுக்கு இவரது பிரபல்யம் விளங்குகிறது!

மகிந்தவும் தன்மீதான பழிகளுக்காக பிராயச்சித்தம் செய்வதற்கான பலியாடாக இவரை வளர்த்து வருகிறார்!

புலிகளுக்கு இவரது புதிய புகைப்படம் ஒன்று தேவைப்படக்கூடும், கொல்வதற்காக அல்ல பாராட்டுவதற்காக!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.