Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?

செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா? 37 members have voted

  1. 1.

    • ஆம்
      8
    • இல்லை
      16
    • சுத்த பம்மாத்து
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இல்லை.

  • Replies 67
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட.... :shock: :shock:

நம்ம மக்காள் ரொம்ப உஷாராத்தான் இருக்கினம்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். :lol::lol:

இதில் நம்பிக்கை இல்லாது இருந்தாலும்

தாயகத்தில் நான் கேட்ட சம்பவங்கள் அப்படி இருக்கலாமோ

என்ற பயத்தோடு சேர்ந்த நம்பிக்கையை வரவழைக்க முயன்றது

வியப்பானதே!! :lol::lol:

அப்படி என்னதான் கேள்விப்பட்டனீங்கள் குறும்பன் அண்ணா? எங்களுக்கும்

சொல்லுங்கோவன். :roll:

அப்படி என்னதான் கேள்விப்பட்டனீங்கள் குறும்பன் அண்ணா? எங்களுக்கும்

சொல்லுங்கோவன். :roll:

எமக்கும் கேட்க ஆசைதான்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி... நீங்கள் எல்லாரும் கேக்குற படியால சொல்லுறன்.

அண்மை காலத்தில நான் தாயகம் சென்றுவந்தேன். கிட்ட தட்ட 16 வருடங்களுக்கு

பின்னர். சிறு வயதிலேயே வந்த படியால சிறுவயதில் பார்த்த முகங்களை கற்பனை செய்து கொண்டு போன எனக்கு

முகம் தெரியாத உறவுகள் மட்டுமே அறிமுகமானது. அகண்ட வீதிகளெல்லாம் ஒடுங்கிப்போய் இருந்தன. சிறுவயதில்

வீதியின் ஒரு கரையிலிருந்து மறுகரை தாண்டுவதே உயிர்போகும் விடயமாக இருந்தவை இப்போது இரண்டு அடி

எடுத்து வைப்பில் தாண்டியது வியப்பாக இருந்தது. ஊரே மாறிப்போயிருந்தது மனிதர்கள் பலரும் கூட.

எமது வீட்டுக்கு பக்கத்து வீடு பற்றி நான் அறிந்த விடயம்தான், இந்த செய்வினை, சூனியம் பற்றி கேள்வி எழ அடித்தளமாக இருந்தது. அதாவது, எமது பக்கத்து வீடும், காணியும் இடிபாடுகள் நிறைந்த யாருமே வசிக்க முடியாத படி பற்றைகள் நிறைந்து காணப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தத்தின் கோரபற்களுக்கு பலியானவற்றில் இதுவும் ஒன்றென எண்ணினேன். ஆனால், ஊரிலுள்ள வயோதிபர் ஒருவர் சொன்னார். அவரை அப்பப்பா என்றுதான் அழைப்பேன். அவர் கூறியது தான் துாக்கி வாரிப்போட்டது. அவர் சொன்னார், அந்த காணியில யாரோ செய்வினை செய்து போட்டிருக்கினமாம், அதனால் அங்க வாழ்ந்த குடும்பம் சிதறி சின்னா பின்னமாக போய்விட்டது என்று. அந்த காணியில் வசித்து வந்தது ஒரு அழகான சிறிய குடும்பம். தாய், தந்தை 2 பெண், 3 ஆண் - நடுத்தர குடும்பம். நான் சிறு வயதில் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தனால் நன்றாக நினைவிருக்கிறது. அவர்களுக்கு அந்த காணி சொந்தமானது அல்ல வாடகையே. அவர்கள் அங்கு வருவதற்கு முன் 4 வீடு தள்ளியுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்கள். அங்கு வீட்டு உரிமையாளரின் மகன் இவர்களது மகனை காதலித்த விடயம் தொடர்பாக பிரச்சனை உருவாக இங்கே வந்து குடியேறி இருந்தார்கள். இங்கே குடியேறும் வரை ஒரளவு வசதியாகத்தான் இருந்தார்கள். ஆனால், வந்தபின் சோதனைமேல் சோதனை. அயலவர்களுடன் சண்டை. வேலை வாய்ப்புகள் இன்றி பட்டினி, ஆண் பிள்ளையின் நண்பர்கள் வீட்டுக்கு வருவதால் பெண்பிள்ளைகளுடனான உறவில் காதல். இதனால் பெற்றோர்களுடன் சண்டை. அதுவரை அவர்கள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஊரில் மிகவும் மதிக்கப்பட்ட பெண்கள். முத்தவர் ஆண்மகன் பலநேரங்களில் நோய்ப்பட்டே இருப்பார். சில நேரங்கள்தான் வெளியே காணும் வாய்ப்பு கிடைக்கும்.

இப்படியான குடும்பம் நான் வெளிநாடு வந்த சில காலங்களில் சின்னாபின்னமாக போய்விட்டது. நோய்வாய்ப்பட்ட அந்த ஆண்பிள்ளைக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் நோய் தீராமல் இளவயதில் இறந்துபோனார். பெண்பிள்ளைகளில் ஒருவர் காதலித்து திருமணம் முடித்து வேற்றுார் சென்றார். அதன் பின் குடும்பத்துடன் தொடர்பே இல்லையாம். மற்றைய 2 ஆண்பிள்ளைகள் காணியில் வெடிக்காமல் கிடந்த கைக்குண்டு வெடித்ததில் பலியாகியுள்ளனர். மிகுதியாய் இருந்த அந்த பெண் மற்றும் பெற்றோர்கள் அநாதரவாக அந்த வீட்டிலேயே இறந்து கிடந்திருக்கிறார்கள். சில நாட்களின் பின்னரே அது ஊரவர்களால் கண்டறியப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்படி அந்த சின்னபின்னமாக போன அந்த குடும்பம் பேரரில் நேரடியாக பாதிப்படையாமல் இப்படி போனது குறித்து அப்பப்பா சொன்னார் " அந்த காணியில் குடியிந்த யாருமே இப்போது உயிருடன் இல்லை என்றும். இவர்களுக்கு முன் இருந்தவர்கள் கூட துாக்கு போட்டு தற்கொலை செய்தவர்கள் என்றும் சொன்னார். இந்த காணியில் யார் வசிக்க வந்தாலும் உருப்படாமல் உருக்குலைந்து போனவர்கள்தான். காரணம் யாரோ எதோ காரணத்துக்காக அந்த காணியில் செய்வினை செய்து இருக்கினம். அத இன்னும் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

இதை செய்வினையில் நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம்.

ஆனால்,....... :?: :?: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காணி எங்கையிருக்கெண்டு சொல்லுங்கோ குறும்பன் நல்ல மலிவா அமத்தலாம் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காணி எங்கையிருக்கெண்டு சொல்லுங்கோ குறும்பன் நல்ல மலிவா அமத்தலாம்

_________________

இங்கைபாருங்கள் இந்த கூத்தை

:P அந்த குடும்பத்திற்கு ஏன் இப்படியானது.. பாவம். :|

அந்த காணி எங்கையிருக்கெண்டு சொல்லுங்கோ குறும்பன் நல்ல மலிவா அமத்தலாம்

எனக்கும் சொல்லுங்கோ :lol::lol: சனம் திருந்தாது :evil: :twisted:

செய்வினை சூனியம் பேய் பிசாசு இல்லை எண்டு நிறைய பேர் சொல்லுறீங்கள்..யாரவது தம்மளை சுடலைக்கு இரவு 12மணிக்கு ஒருக்கா போட்டு வருவீங்களோ??? நானும் நம்பிக்கை இல்லாதவன் தான்.ஆனாலும் மனப்பயம் இப்பவும் இருக்கு...என்ரை 2வது பெட்டையை உவன் பூபாலின்ரை பெடியன் மருந்து போட்டுதானே எடுத்தவன்..என்னை நிமிந்துகூட கதைக்காத பெடிச்சி அவனுக்காண்டி என்னோடை சண்டை பிடிச்சு அவனேடையே போயிட்டாள் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன் (நானும் இதுதான் சாண்ஸ் செலவு மிச்சம் எண்டு பேசாமல் விட்டுட்டன் அது வேறை கதை)

  • கருத்துக்கள உறவுகள்

செய்வினை சூனியம் பேய் பிசாசு இல்லை எண்டு நிறைய பேர் சொல்லுறீங்கள்..யாரவது தம்மளை சுடலைக்கு இரவு 12மணிக்கு ஒருக்கா போட்டு வருவீங்களோ??? நானும் நம்பிக்கை இல்லாதவன் தான்.ஆனாலும் மனப்பயம் இப்பவும் இருக்கு...என்ரை 2வது பெட்டையை உவன் பூபாலின்ரை பெடியன் மருந்து போட்டுதானே எடுத்தவன்..என்னை நிமிந்துகூட கதைக்காத பெடிச்சி அவனுக்காண்டி என்னோடை சண்டை பிடிச்சு அவனேடையே போயிட்டாள் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன் (நானும் இதுதான் சாண்ஸ் செலவு மிச்சம் எண்டு பேசாமல் விட்டுட்டன் அது வேறை கதை)

ììììììì ??? ¿øÄ ÝôÀ÷ ÌÎõÀõ... ¸ÅÉõ ¬îº¢ «Å¡¨Å¡ÅÐ ?? (¡ÕìÌ ¦¾Ã¢Ôõ º¢ýÉôÒ Á¡¾¢Ã¢ ÀÆÍ¸û ¯Ç¡Å¢È ¸Çõ þÐ) :oops: :oops: :evil:

தம்பி லொள்ளூ கூடத்தான்...என்னை போல 8உருப்படியை பெத்து வளத்து கட்டிக்குடுத்தால் தெரியும்.....நீங்கள் எங்கை 2பிறந்த தோடையே ஆட்டம் குளோஸ் பிறகு ......... :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை சிறுவயதிலேயே பேய் பிசாசு என்று பயம் காட்டி வளர்த்தினால் அடிமனதில் சிறு பயம் இருக்கிறது. இங்கு வளரும் பிள்ளைகள் பெரிதாக இதையெல்லாம் நம்பமாட்டார்கள்.

நானும் பாக்கிறன் 10க்கும் மோகனுக்கும் ஏதாவது செய்யலாம் எண்டால் ................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10க்கும் மோகனுக்கும் ஏதாவது செய்யலாம் எண்டால் ...

:lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை சிறுவயதிலேயே பேய் பிசாசு என்று பயம் காட்டி வளர்த்தினால் அடிமனதில் சிறு பயம் இருக்கிறது. இங்கு வளரும் பிள்ளைகள் பெரிதாக இதையெல்லாம் நம்பமாட்டார்கள்.

நானும் பாக்கிறன் 10க்கும் மோகனுக்கும் ஏதாவது செய்யலாம் எண்டால் ................

அண்ணாச்சி... என்ன வம்புல மாட்டி விட்டுடாதிங்கோ! :lol:

எனக்கும் வெட்டு போட 10 திரியுறதா டங்ஸ் புல"நாய்"வு தகவல் சொல்லுது. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சே...வெட்கம் இல்லை. சின்னப்பு எப்படி பேசினாலும்...இந்த விடயத்தில் ராமன். [சின்னாச்சிக்கு பயந்து எல்லம் இல்லை] அத்தூ அத்தூ என்டு போட்டு..அந்த தாத்தா அங்காளா போக இங்காள கதையா..இருங்கோ வரட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அட சே...வெட்கம் இல்லை. சின்னப்பு எப்படி பேசினாலும்...இந்த விடயத்தில் ராமன். [சின்னாச்சிக்கு பயந்து எல்லம் இல்லை] அத்தூ அத்தூ என்டு போட்டு..அந்த தாத்தா அங்காளா போக இங்காள கதையா..இருங்கோ வரட்டும்
:roll: :lol:

என்ன கவிஸ் முழுசுறிங்கள்? அப்புறம் சிரிக்கிறிங்கள்? என்னமோ கொஞ்ச நாளா ஆள் சரியில்லை :lol:

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது செய்வினை வெச்சனீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.