Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ்சிறார்களுக்கு நிதிசேகரிப்பிற்காக சிட்னியில் இளையோரினால் நிகழ்த்தப்பட்ட 'இதய ஒலி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ithayaolimp2.jpg

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள்

கந்தப்பு நீங்கள் போறீங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒம் நான் போகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பிறந்த இளையோரினாலும், சிறுவயதில் சிட்னிக்கு வந்த இளையோரினாலும் உருவானது Freedom Productions . இவர்களின் முதலாவது நிகழ்வான 'இதய ஒலி' சென்ற சனிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் நானும் கலந்து கொண்டேன். மாமனிதர் ஜெயக்குமாரின் மனைவியார் இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதில் சேகரிக்கப்பட்ட நிதி செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, இனிய வாழ்வு இல்லம் ஆகியவற்றுக்கு அனுப்பப்படும். 20க்கு மேற்பட்ட வாத்திய இசைகள் முழங்க தமிழீழ எழுச்சிப்பாடல்களையும், தென்னிந்தியத் திரைப்படப்பாடல்களையும் பாடினார்கள். சில பாடல்களுக்கு சிறுவர்கள், சிறுமிகள் மேடையில் தோன்றி ஆடினார்கள். சிலவற்றுக்கு இளையோரும் ஆடினார்கள். ஆபிரிக்க நாட்டுச் சகோதரர்களும் ஒரு பாடலுக்கு ஆடி மக்களைக் கவர்ந்தார்கள். இசைக்கலைஞர்கள் குப்பைத் தொட்டிகளை வைத்தும் இனிய இசையினை நிகழ்த்த முடியும் என நிருபித்துக்காட்டினார்கள். தாயகத்துக்கு உதவும் 'லாவிங்கோ லாவிங்', தமிழர் மருத்துவ நிதி சேகரிப்பிற்காக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் நிகழ்வு, நவம் அறிவுக்கூடத்திற்காக நிதி சேகரிக்கப்படும் ' நாட்டிய நிகழ்வு' போல இந்நிகழ்வும் எல்லோரையும் கவர்ந்தது.

'அம்மா உன் பிள்ளை' என்ற தாயகப்பாடலை பாடகர் பாடும் போது திரையில் மாமனிதர் ஜெயக்குமாரின் புகைப்படங்களைக் காட்டினார்கள். அப்பாடலைக் கேட்ட மக்களில் சிலரின் கண்களில் கண்ணீர் வந்ததினைப் பார்க்கும் போது மாமனிதர் ஜெயக்குமாரை எவ்வளவு மக்கள் நேசித்தார்கள் என்று தெரிந்தது. நான் பெரிது, நீ பெரிது என்று அவுஸ்திரெலியாவில் வாழும் மக்கள் மத்தியில் நாடு பெரிது என்று நாட்டுக்காக உழைத்து தேசியத்தலைவரினால் மாமனிதர் பட்டம் பெற்ற ஜெயக்குமார் அவர்கள் இல்லாதது மிகவும் பெரிய இழப்பு. சில தாயகப்பாடல்கள் பாடும் போது திரையில் வன்னியில் மக்கள் படும் இன்னல்கள் காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடல்களை அறிமுகப்படுத்தும் விதமும் புதுமையாகவும் எல்லோரையும் கவருவதாக இருந்தது. தொடரூந்தில் பயணிக்கும் இருவரின் நகைச்சுவை உரையாடல்களின் போது அடுத்த பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்தபோது தான் பலருக்கு நேரம் 11 மணியைத் தாண்டி விட்டது என்று தெரிந்தது. அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது. நிகழ்ச்சி முடிவடைந்தபின்பும் , வீடு செல்லாமல் மக்கள் பலர் நின்று கலைஞர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியதன் மூலம் இந்நிகழ்வு எப்படி எல்லோரையும் கவர்ந்தது என அறியக்கூடியதாக இருந்தது. சிட்னியில் வருடாவருடம் நடைபெறும் மக்கள் ஆதரவு பெற்ற தாயகத்துக்கு உதவுவதற்காக நடைபெறும் நாடகங்களான லாவிங்கோ லாவிங் போல 'இதய ஒலியும்' வரும் வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளுடன் நடைபெறப் போவது உறுதி. நுளைவுச்சீட்டின்றி மக்களில் சிலர் ஏமாறப் போவதும் உறுதி.

இந்நிகழ்வு முடிந்து சென்றபோது சிலர் கதைத்து காதில் கேட்டவற்றில் சில

" எஸ்.பி.பி. கரிகரன் நிகழ்ச்சிகளில் ஏற்படாத மகிழ்ச்சி இந்நிகழ்வில் கிடைத்தது".

" எஸ்.பி.பி, கரிகரனின் நிகழ்ச்சிகளில் இசைகளில் சில முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் எங்கட சிறுவர்களின் இன்றைய நிகழ்ச்சியில் எல்லா இசையும் மேடையில் இசைக்கப்பட்டிருக்கிறது" . "எங்கட நிகழ்ச்சிகள் எல்லாம் திறமையாக இருக்க ஏன் நாங்கள் உந்த எஸ்.பி.பி போன்றவர்களின் நிகழ்ச்சிகளுக்குப் போய் தமிழ்ப்பாடல்களுடன் கிந்திப்பாடல்கள் கேட்க வேணும்?".

இந்நிகழ்வினை தரிசனம் தொலைக்காட்சியினர் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பதிவு செய்தவர்களில் ஒருவர் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து , வளைகுடா எனப் புகழ்பெற்ற படலைக்குப்படலை திரு. சாரங்கன் அவர்கள்.சிறந்த எமது ஈழத்துக்கலைஞனை நேரில் கண்டதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

Edited by கந்தப்பு

.

இந்நிகழ்வு முடிந்து சென்றபோது சிலர் கதைத்து காதில் கேட்டவற்றில் சில

" எஸ்.பி.பி. கரிகரன் நிகழ்ச்சிகளில் ஏற்படாத மகிழ்ச்சி இந்நிகழ்வில் கிடைத்தது".

" எஸ்.பி.பி, கரிகரனின் நிகழ்ச்சிகளில் இசைகளில் சில முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் எங்கட சிறுவர்களின் இன்றைய நிகழ்ச்சியில் எல்லா இசையும் மேடையில் இசைக்கப்பட்டிருக்கிறது" . "எங்கட நிகழ்ச்சிகள் எல்லாம் திறமையாக இருக்க ஏன் நாங்கள் உந்த எஸ்.பி.பி போன்றவர்களின் நிகழ்ச்சிகளுக்குப் போய் தமிழ்ப்பாடல்களுடன் கிந்திப்பாடல்கள் கேட்க வேணும்?".

உண்மை தான்... நிகழ்ச்சி இவ்வளவு நன்றாக இருக்கும் என நானும் எதிர்பார்க்கவில்லை தான். பாடகர்கள், இசைக் கலைஞர்கள், நடனமாடிய பெண்கள் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்தன. ஆனாலும், எனக்கென்னவோ நகைச்சுவை பகுதியை மேலும் மெருகூட்டியிருக்கலாம் என்று படுகிறது. ஆனாலும், மொத்தத்தில் நல்ல ஒரு நிகழ்வு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லிகை வாசம். நீங்கள் சொல்வது போல நானும் இந்நிகழ்வு இவ்வளவு நல்லாய் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. சிலநிகழ்ச்சிகளில் தென்னிந்திய நடிகர்கள் போல சிலர் நடித்து நகைச்சுவையென்று இரசிகர்களை வெறுப்பூட்டுவார்கள். ஆனால் இங்கு நடைபெற்ற நகைச்சுவை பலரைக் கவர்ந்தது. எனினும் நீங்கள் சொல்லுவது போல நகைச்சுவை பகுதியை இன்னும் மெருகூட்டியிருக்கலாம்.

இங்கு நிகழ்ச்சியில் பங்குபற்றிய இளையோர்களின் திறமையினை வியந்து இரசித்தேன். மிருதங்கம், கடம், மேளம், புல்லாங்குழல், வயலின், கிட்டார் உட்பட பல வாத்தியங்களின் மூலம் இனிமையான இசையைத் தந்தார்கள்.பாடலுக்கு கிட்டார், வயலின் போன்ற இசைக்கருவியை இசைக்கிற இளையோர்களில் சிலர் அடுத்தபாடலுக்கு மிருதங்கம், கடம் போன்ற தாள வாத்தியங்களையும் வாசிக்கிறார்கள். பிறகு பாடல் ஒன்றையும் பாடுகிறார்கள். அதாவது இங்கு பங்குபற்றியவர்களில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வித்தியாசமான இசைக்கருவிகளை இசைக்கத் தெரிகிறது. அதிலும் 3 இளையோர் சொல்லுக்கட்டுடன், குப்பைத் தொட்டியினை வைத்து போட்டி போட்டுக் கொண்டு தடிகளினாலும் பிளாஸ்டிக் போத்தலினாலும் வழங்கிய இனிய இசைக்கு ஈடாக சிட்னியில் வேறு நிகழ்வுகள் நடந்திருக்கிறதா?. இவ்வளவு திறமையான கலைஞர்கள் எம்மிடத்தில் இருக்கும் போது ஏன் தென்னிந்தியக் கலைஞர்களைக் காசு கொடுத்து சிட்னிக்கு அழைக்க வேண்டும்?.

''எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..? கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா?" என்ற ஈழத்துக்கலைஞன் நிருவின் இசையில் வெளிவந்த இராமேஸ்வரம் என்ற தென்னிந்தியத் திரைப்படப் பாடலைப் பாடகர்கள் பாடும் போது மேடையில் சிறுவர்,சிறுமிகள் ஏக்கத்துடன் 'அங்குள்ள சிறுவர்களுக்கு இனி எப்பொழுது விடிவு வரும்?" என்பதைப் போல சோகத்துடன் தோன்றினார்கள். இப்படியான நிகழ்வுகளினால் சேகரிக்கப்படும் நிதிகள் அங்குள்ள சிறுவர்களுக்கு விரைவில் விடிவைக் குடுக்கும்.

நான் பெரியவன், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று இல்லாமல் அடக்கத்துடன் இந்நிகழ்வினை இளையோர்கள் நடாத்தினார்கள். இந்நிகழ்வில் பங்கு பற்றியவர்கள் சுயவிளம்பரமின்றி மனிதநேயமே பெரிது என்ற இலட்சியத்துடன் நிகழ்ச்சியை நடாத்தினார்கள்.

எம்மினமே உங்களுக்கு எங்களது "இதயஒலி" கேட்கிறதா? என்ற ஆதங்கத்துடன் இந்நிகழ்ச்சியை நிறைவு செய்த இளையோருக்கு எனது வாழ்த்துகள்.

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.