Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்

Featured Replies

எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின்

ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;” இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும்.

இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது

விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.

வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண்டும்.அவர்களுடைய விமானங்கள் வான்பரப்பில் மேலெழுவதற்கு முன்னரே எங்களது ராடர்களில் அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடுவோம். என்றெல்லாம் சிறீலங்கா அரசு செய்த வந்த பரப்புரைகளை குறிப்பாக நாளாந்தம் விடுதலைப்புலிகளின் இழப்புகள் தொடர்பான அரசாங்கம்; வெளியிட்ட எண்ணிக்கைகளை தென்பகுதி சிங்கள மக்கள் நம்பி பால்சோறு பொங்கி கொண்டாடினாலும் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டே பார்த்தன.

ஆனால் ஒரே பொய்யை திருப்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையென நம்பப்பட்டுவிடும் என்கின்கின்ற கோயபல்ஸ் தத்துவத்துக் கிணங்க விடுதலைப் புலிகள் பலவீனப் பட்டுப் போய்விட்டார்கள் என்கின்ற ஒரு மாய பிம்பம் சர்வதேச மட்டத்தில் உருவாகியிருந்தது என்னவோ உண்மை தான்.

தேசத்துரோகக் கும்பல்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் ஆஹா புலியின் கதை முடிந்துவிட்டது.வடக்கின் முதலமைச்சர் நாங்கள் தான்.யாழ்ப்பாணம் வன்னிக்கான அபிவிருத்திட்டங்களுக்கான முகவர்கள் நாங்கள் தான்.இனிமேல் எந்தத் தடையும் இல்லாமல் கோவில்களை வைத்து மோதல்களை துண்டிவிடலாம். சாதியை வளர்க்கலாம்.ஊர் பிரதேச வேறுபாடுகளை துளிர்விடச் செய்யலாம் என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டார்கள்.போராட்டம் விடுதலை எல்லாம் சாத்தியமில்லை.பௌத்த சிங்கள மேலாதிக்க வாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்து அவன் போடும் பிச்சையை பெற்றுக் கொண்டு அவனுடைய படையினரின் இச்சiயை தீர்ப்பதற்கு இளம்; பெண்களை பிடித்தோ காட்டியோ கொடுக்கலாம்.இது தான் பிழைப்பதற்காக உன்னதமான வழி.இதைவிட்டு தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்பதெல்லாம் மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும் காலத்துக்கு பொருந்தாத கோட்பாடுகள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது பாருங்கள் என்று பெருமையடித்துக் கொண்டார்கள.;

சிறீலங்கா அரசின் கோயாபல்ஸ் பாணியிலான பரப்புரை புலத்திலுள்ள தமிழ் தேசிய பற்றாளர்களிடையேயும் ஒருவித அவநம்பிக்கைணையும் சோர்வையும் தோற்றுவித்தது.

எது உண்மை? எது பொய்;? எதை நம்புவது- எதை நம்பாமல் இருப்பது? ஏன்கின்ற ஒருவித குழப்பான மனநிலையில் தான் புலம் பெயர்ந்த சாதாரண மக்களில் பலர் இருந்தனர்.

இந்தப் பின் புலத்தில் தான் திருகோணமலை துறைமுகம் மற்றும் அங்குள்ள சிறீலங்கா கடற்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடந்திருக்கிறது.

இந்தத் தாக்குதலில் முக்கியமான அம்சம் அதை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடமாகும்

திருகோணமலை கடற்படைத்தளத்திற்குமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கென அதிஉயர் சக்தி வாய்ந்த ராடார்களையும் அவற்றை கையாள்வதற்கான துறைசார் நிபுணத்துவ பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்த துறைமுக பாதுகாப்புக்கென சீனாவும் இந்தியாவும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியிருந்தன. விமானத் தாக்குதல்களை முறிடிப்பதற்கென்று இந்தியாவிலிலும் பாகிஸ்த்தானிலும் சிறப்புப் பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் திருமலைத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அவற்றை விரட்டிச் சென்று வானத்தில் வைத்து அழிப்பதற்கென்று திருமலைத் துறைமுகத்தை அண்டிய சீனன்குடா விமானப்படை தளத்தில் தாக்குதல் வானூர்திகளும் தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இவையெல்லாவற்றையும் விட அமெரிக்க இஸ்ரேலிய இந்திய உளவுச் செய்மதிகளின் வான் வழிக் கண்காணிப்பு இந்திய கடற்படை மற்றும் விமானப்படையினரின் ராடார் கண்காணிப்பு உதவி என்று கொழும்புத் துறைமுகத்தை விட அதி உச்சப்பாதுகாப்பு பொறிமுறைக்கு உட்பட்ட ஒரு பகுதியாக இந்த திருகோணமலை துறைமுகப்பகுதி இருந்து வருகிறது .

ஆனால் வான் புலிகள் இந்த அதி உச்சப் பாதுகாப்பு பொறிமுறையை செயலற்றதாக்கிவிட்டு சர்வ சாதாரணமாக அந்தப் பகுதிக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டுச் பாதுகாப்பாக திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.அதிலும் இரண்டு தடவைகள் 3 மணி நேர இடைவெளி விட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படி இது சாத்தியமானது என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.

முதல் தடவை நடந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இரண்டாவது தடவை தாக்குதல் நடந்தாகக் கூறப்படுவது வெறும் ஊகங்களாகவே உள்ளன.முதல் தாக்குலையே தங்களது வழமையான பாணியில் மூடி மறைக்க முடியாமல் மழுப்பிவரும் சிறீலங்கா அரச தரப்பும் அதன் படைத் தரப்பும் இந்த இரண்டாவது தாக்குதல் பற்றி முதலில் மூச்சே விடவில்லை. இரண்டாவது தாக்குதல் நடந்ததோ இல்லையோ ஆனால் மக்கள் மத்தியிலும் பல சர்வதேச ஊடகங்கள் மத்தியிலும் அது நடந்திருக்க வேண்டும் என்ற ஐயப்பாட்டை அது தோற்;றிவித்திருக்கிறது.இது தாக்குதலில் கிடைத்த பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

இந்தத் தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் சர்வதேசத்துக்கும் போர் வெறி கொண்ட சிங்கள இனத்திற்கும் அவர்களது எஜமானர்களான மகிந்த ராஜபக்ஷ அன் கொம்பனிக்கும் ஒரு முக்கியமான செய்தியை சொல்லி இருக்கிறார்கள்.

சிறீலங்கா அரசிடம் எவ்வளவு நவீன ஆயுதங்கள் உயர் வலுக்கொண்ட எவ்வளவு கண்காணிப்பு சாதனங்கள் எத்தனை வல்லரசுகளின் படைபல- நிபுணத்துவ உதவிகள் இருந்தாலும் அவர்களின் எத்த இலக்கையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் சென்று தாக்கும் வல்லமை தங்களுக்கு எப்போதும் உண்டு என்பதே விடுதலைப்புலிகன் சொன்ன அந்தச் செய்தியாகும்.

போர் களத்தில் ஆயுத பலமும் ஆள் பலமும் அடிப்படைத் தேவைகள் என்றாலும் அதைவிட முக்கியமானது மனோபலம் என்பதையும் அதையும் விட இலட்சிய உறுதியும் சலுகைகளுக்கு மண்டியிடாத சமரசத்துக்கு இடங்கொடுக்காத வெற்றிகளைக் கண்டு மயங்காத தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத தலைமைத்துவத்தின் திட்டமிடலும் வழிகாட்டலும் முக்கியமானது என்பதையும் அந்த சிறந்த தலைமைத்துவும் எப்போதுமே தமிழர் தரப்புக்கு உண்டென்பதும் இந்தத் தாக்குதல் மூலம் வெளிப்பட்ட மற்றொரு செய்தியாகும்.

அரசியலில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சொந்த வங்கிக் கணக்கை நிரப்புவதற்காகவும் யுத்தத்தை ஒரு வியாபாரமாகவே மேற்கொள்ளும் மகிந்த அன் கொம்பனிக்கு இந்தத் தாக்குதல் உடனடியாக இரண்டுவிதமான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓன்று சர்வதேச அளவிலான நெருக்கடி.மற்றது உள்ளுர் மட்டத்திலான நெருக்கடி.

சர்வதேச மட்டத்திலான நெருக்கடி என்கிற போது மகிந்த அரசு விடுதலைப்புலிகளை சமதரப்பாக ஏற்று பேச்சு வார்த்தை நடத்தவது என்ற முன்னைய அரசின் நிலைப்பாட்டில் இருந்து விலகி அவர்கள் மீது ஒரு தலைப் பட்சமான போரை திணித்து அந்தப் போரை அவர்களின் பிடியில் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று பறைசாற்றியிருந்தது.விடுதலைப

அருமையான ஆய்வு கட்டுரை..

நன்றி சிவா சின்னப்பெடி அவர்களுக்கு...

தொடர்ந்தும் இப்படியான ஆக்கபூர்வமான ஆய்வுகளை வெளியிட்டு மக்களின் மத்தியில்

நல்ல நம்பிக்கையையும் விளக்கங்களையும் தாருங்கள்....

தற்போது உள்ள அரசியல் நோக்குப் படி.. மகிந்தாவைக் காப்பாற்றும் பொறுப்பு.. தமிழரிடம் தான் உள்ளது..

மகிந்தாவின் போக்குப்படி.. தமிழிழம் கிடைப்பது மகிந்தாவின் காலப் பகுதியில் தான் என்பது நிச்சையம்...

அதை உலகம் வியப்புடன் பார்க்கத்தான் போகின்றது..

மக்களுக்கு நம்பிக்கையுட்டக் கூடிய இப்படியான கட்டுரைகள் இப்போதைய தேவையாகும்

திருமலைத் தாக்குதல் மகிந்த அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்திரக்கிறது என்பதற்கு அது தொடப்பாக அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் சாட்சியாக இருக்கின்றன.ராடாரில் புலிகளின் விமானங்கள் வருவது தெரிந்ததாம்.மின் விளக்ககளை அணைத.தவிட்டார்களாம் அதனால் புலிகளால் சரியான இலக்கை அடையாளம் காணமுடிய வில்லையாம்;.;;;;;;

"தேசத்துரோகக் கும்பல்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் ஆஹா புலியின் கதை முடிந்துவிட்டது.வடக்கின் முதலமைச்சர் நாங்கள் தான்.யாழ்ப்பாணம் வன்னிக்கான அபிவிருத்திட்டங்களுக்கான முகவர்கள் நாங்கள் தான்.இனிமேல் எந்தத் தடையும் இல்லாமல் கோவில்களை வைத்து மோதல்களை துண்டிவிடலாம். சாதியை வளர்க்கலாம்.ஊர் பிரதேச வேறுபாடுகளை துளிர்விடச் செய்யலாம் என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டார்கள்.போராட்டம் விடுதலை எல்லாம் சாத்தியமில்லை.பௌத்த சிங்கள மேலாதிக்க வாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்து அவன் போடும் பிச்சையை பெற்றுக் கொண்டு அவனுடைய படையினரின் இச்சiயை தீர்ப்பதற்கு இளம்; பெண்களை பிடித்தோ காட்டியோ கொடுக்கலாம்.இது தான் பிழைப்பதற்காக உன்னதமான வழி.இதைவிட்டு தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்பதெல்லாம் மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும் காலத்துக்கு பொருந்தாத கோட்பாடுகள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது பாருங்கள் என்று பெருமையடித்துக் கொண்டார்கள்"

இப்படியெல்லாம் பெருமையடித்துக் கொண்டவர்கள் இன்று தலையைப் பிய்த்துக் கொள்ளுகிறார்கள்.

"சுருக்கமாகச் சொல்வதானால் சிறீலங்காவின் மொத்தப் படைபலத்தின் அதி உச்ச திரட்சியை கூட்டி பாதுகாத்து வந்த ஒரு தளத்தை விடுதலைப்புலிகளின் வான் படை வெற்றிகரமாக தாக்குவிட்டு தங்களது தளத்துக்கு திரும்ப முடியும் என்றால் அவர்களால் குடாநாட்டிலோ வன்னியிலோ தென் தமிழீழத்திலுள்ள எந்தப்படைத்தளத்தின் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தமுடியும் என்பதும் தென் பகுதியில் உள்ள எந்த இலக்கையும் தாக்க முடியும் என்பதும் உணர்த்தப் பட்டிருக்கிறது

இதை தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பியவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு நம்பிக்கையுட்டக் கூடிய இப்படியான கட்டுரைகள் இப்போதைய தேவையாகும்

ஆமா..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.