Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை கொண்டு நடவுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கை கொண்டு நடவுங்கள்

ஏய்!

முணு முணுக்கும் வாய்களே!

கொஞ்சம் நிறுத்துங்கள்.

படலைக்கு உள்ளே

தெருநாய் வருவதால்

உன் முற்றம் தொலையுதென்று

எவன் சொன்னான்?

தெருக்கள் எங்கும் நீ

கை வீசி நடக்கணும்.

உன் இருப்பை எப்போதும்

உறுதி செய்யணும்.

உண்மைதான்

உருப்படியாய்

என்ன செய்தாய் இதற்கு?

ஊருக்கு சொல்ல

உன்னிடம் நிறைய உண்டாயினும்

உன்னிடம் சொல்ல

ஏதேனும் உண்டாவென

உன் மனச்சாட்சியைக் கேள்

ஆமெனில்..

நீ கரைவதை தொடர்

ஆயினும்

சில வார்த்தைகளைத் தவிர்

அதைப் பின் காலம் சொல்லும்

இல்லையெனில்..

இனியாவது

சிந்தனைகொள்

மானிடப் பேரவலம் கண்டாவது

உன் மனக்கதவு திறக்கட்டும்

இரும்புச் சிறையுடைத்து

புது மனிதனாய் வெளியே வா!

விடுதலை பற்றி

அப்போது கதைப்போம்

நசிக்கப்பட்ட குரல்வளைகளே

உரிமைக் குரலை

உரத்தொலிக்கும் போது

சில திறந்த குரல்கள் மட்டும்

ஏனிங்கு மௌனித்து கிடக்கின்றன

தெருக்கள் களவு போகும் போதும்

நல்ல உறக்கம் எப்படி உனக்கு வருகிறது

வெறும் கொள்ளி வைக்க மட்டும் தானா

அன்னை பெற்றாள் நம்மை

அன்னை மண் காப்பதை

பிள்ளையன்றி யார் செய்வார்?

அடுத்தவன் வருவானோ சொல்?

நம்பிக்கைச் சிறகு நமக்கிருந்தால் தானே

சிகரத்தை நோக்கி உயரப் பறக்க முடியும்

கூரை ஏறவே சிறகு வலித்தால்

வானாய் விரிந்த சுதந்திரத்தை

எப்படி உன்னால் அனுபவிக்க முடியும்

அண்ணனை நெஞ்சில் எண்ணிடும் நெஞ்சங்கள்

அஞ்சி வாழுதல் முறையோ சொல்லுங்கள்

மண்ணினில் ஆயிரம் மறவரை விதைத்த நாம்

பகையிடம் மண்டியிட்டுப் போவோமா சொல்லுங்கள்

எங்கள் தம்பிகள் தங்கைகள் செய்திடும் போருக்கு

உரமாய் இருக்க எதையோ செய்யுங்கள்

ஆயிரம் போரினில் நாங்கள் தோற்றாலும்

இலட்சியப் போரினில் வெல்வதுதான் நம் இலக்கு

விடுதலைத் தீயது அணையாது

நெஞ்சு நிமிர்த்தி நில்லுங்கள்

வாழ்வா சாவா வரட்டும் பார்ப்போம்

தமிழா!

இது விடுதலைப் பயணம்

வேறு வழியின்றிப் போனதால்

தெரிந்து தான் குதித்தோம்

ஏதிரியை எதிர்ப்பதும்

அவன் தரும் வலியினைச் சுமப்பதும்

இறுதியில் வெற்றி பெறுவதும்

நாங்களாய் தான் இருக்கணும்

இதை விதியென்று சொல்லாதே

இது தான் வாழ்வென்று சொல்லிடவே

எங்கள் வரலாறு விரும்புகிறது.

துயரம் இமயமாய் உயர்ந்தாலும்

விடுதலைப் பறவைகளுக்கு

எப்போதும்

வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான்

நம்பிக்கை கொண்டு நடவுங்கள்

கொடுத்துச் சிவக்கும் கரங்கள் உமதாகட்டும்

நாளைய பொழுது நமதாகும்

உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் கவிதை...

ஊருக்கு சொல்ல

உன்னிடம் நிறைய உண்டாயினும்

உன்னிடம் சொல்ல

ஏதேனும் உண்டாவென

உன் மனச்சாட்சியைக் கேள்

ஆமெனில்..

நீ கரைவதை தொடர்

ஆயினும்

சில வார்த்தைகளைத் தவிர்

அதைப் பின் காலம் சொல்லும்

மிகவும் பிடித்தது... :)

நல்ல கவிதை

காயத்திரி..ரி அக்கா..கா.. "நம்பிக்கை கொண்டு நடவுங்கள்" எண்டு நம்பிக்கையால் நடக்க வைத்த கவிவரிகள் நன்றாக இருக்கிறது முதற்கண் அதற்கு வாழ்த்துகள்..ள்.. :)

அடுத்து..!!

படலைக்கு உள்ளே

தெருநாய் வருவதால்

உன் முற்றம் தொலையுதென்று

எவன் சொன்னான்?

அருமையான வரி..என்னை கவர்ந்த வரிகள்..நம்பிக்(கை) கொண்டு தொடரட்டும் உங்கள் கவி படைப்புகள்..உங்கள் சகோதரனின் வாழ்த்துகள்.. :D

என்ன பார்க்கிறியள் உங்களுக்கு என்னை யாரெண்டு தெரியா..யா ஆனா நீங்க யாரெண்டு எனக்கு தெரியுமே முடிந்தா கண்டு பிடியுங்கோ..கோ..!! :(

அப்ப நான் வரட்டா!!

இரும்புச் சிறையுடைத்து

புது மனிதனாய் வெளியே வா!

விடுதலை பற்றி

அப்போது கதைப்போம்

முணுமுணுக்கும் வாய்களை நிறுத்த சொல்லி அழகாக கவிதையை நம்பிக்கையோடு எழுதிச்சென்ற விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gayathri

மனதில் இருக்கும் விடுதலை வேட்கையை சொல்லிலே கொண்டுவரும் உங்களை போன்றோரால்தான் எங்கள் விடுதலையை நெருங்கிவிட்டோம். நன்றி

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காயத்திரி அக்கா...

அருமையான கவிதை. ஒவ்வொருவரையும் நிச்சயம் சிந்திக்க வைக்கும் கவிதை.

வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் கவிதை...

மிகவும் பிடித்தது... :D

நன்றிகள் கருத்துப்பகிர்வுக்கு மல்லிகை வாசம்

நல்ல கவிதை

நன்றிகள் தூயா

காயத்திரி..ரி அக்கா..கா.. "நம்பிக்கை கொண்டு நடவுங்கள்" எண்டு நம்பிக்கையால் நடக்க வைத்த கவிவரிகள் நன்றாக இருக்கிறது முதற்கண் அதற்கு வாழ்த்துகள்..ள்.. :)

அடுத்து..!!

அருமையான வரி..என்னை கவர்ந்த வரிகள்..நம்பிக்(கை) கொண்டு தொடரட்டும் உங்கள் கவி படைப்புகள்..உங்கள் சகோதரனின் வாழ்த்துகள்.. :D

என்ன பார்க்கிறியள் உங்களுக்கு என்னை யாரெண்டு தெரியா..யா ஆனா நீங்க யாரெண்டு எனக்கு தெரியுமே முடிந்தா கண்டு பிடியுங்கோ..கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

சகோதரனே ஜமுனா (இது ஆண்பெயரா)

நன்றிகள் உங்கள் கருத்துப்பகிர்வு.

உங்களைப் போன்றோரது கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றது. அதற்கு முதற்கண் நன்றிகள்.

எனக்கு உங்களை தெரியாதுதான். உங்களுக்கும் என்னை தெரிய வாய்ப்பில்லை ஜமுனா. ஏனெனில் ஜமுனா என எனக்கு தெரிந்த எந்த ஆணும் இல்லை

முணுமுணுக்கும் வாய்களை நிறுத்த சொல்லி அழகாக கவிதையை நம்பிக்கையோடு எழுதிச்சென்ற விதம் அருமை. வாழ்த்துக்கள்.

நீங்கள் முணுமுணுக்கிறீங்களா? வாழ்த்துக்கு நன்றி வெண்ணிலா

Gayathri

மனதில் இருக்கும் விடுதலை வேட்கையை சொல்லிலே கொண்டுவரும் உங்களை போன்றோரால்தான் எங்கள் விடுதலையை நெருங்கிவிட்டோம். நன்றி

இளங்கவி

நன்றிகள் இளங்கவி.

உங்கள் கவிகளும் பார்த்தேன். நன்றாக எழுதுறீங்க.

விடுதலையைப் பற்றி எழுதுபவர்களை விட அதை தவறாக கதைப்பவர்கள் தான் அதிகம் என்ன சொல்லுறீங்க?

காயத்திரி அக்கா...

அருமையான கவிதை. ஒவ்வொருவரையும் நிச்சயம் சிந்திக்க வைக்கும் கவிதை.

வாழ்த்துக்கள் :D

சிந்திக்க வைத்து செயற்பட்டால் நன்று என நினைக்கின்றேன்.

நன்றிகள் சாரணி

சகோதரனே ஜமுனா (இது ஆண்பெயரா)

நன்றிகள் உங்கள் கருத்துப்பகிர்வு.

உங்களைப் போன்றோரது கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றது. அதற்கு முதற்கண் நன்றிகள்.

எனக்கு உங்களை தெரியாதுதான். உங்களுக்கும் என்னை தெரிய வாய்ப்பில்லை ஜமுனா. ஏனெனில் ஜமுனா என எனக்கு தெரிந்த எந்த ஆணும் இல்லை

வணக்கம் தங்கச்சி..சி..!!

தங்களின் தம்பி நேற்றைய தினம் வீர மரணம் அடைந்து விட்ட சேதியை கேள்விபட்டேன்..(என்ன சொல்வதெண்டு எனக்கு தெரியவில்லை).. :D

உங்களு குடும்ப்பதிற்கும் உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. :D

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தங்கச்சி..சி..!!

தங்களின் தம்பி நேற்றைய தினம் வீர மரணம் அடைந்து விட்ட சேதியை கேள்விபட்டேன்..(என்ன சொல்வதெண்டு எனக்கு தெரியவில்லை).. :lol:

உங்களு குடும்ப்பதிற்கும் உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. :rolleyes:

வணக்கம் ஜமுனா,

உங்கள் ஆழ்ந்த இரங்கலுக்கு நன்றிகள்.

ஆனால் என் சொந்த தம்பி இல்லை. அன்ரியின் மகன் தான். இந்திரனின் சொந்த தம்பிதான் மாவீரர் ஆனார். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகின்றேன். :(

வீரச்சாவு அறிவித்தல்

ஆனால் என் சொந்த தம்பி இல்லை. அன்ரியின் மகன் தான். இந்திரனின் சொந்த தம்பிதான் மாவீரர் ஆனார். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகின்றேன்.

வீரச்சாவு அறிவித்தல்

மாவீரன் அகச்சுடரோனுக்கு எனதுசிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்...

அவரது உறவுகளுக்கு எனது மனம் நெகிழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பன் இந்திரனின் தம்பி அகச்சுடரோனுக்கு என் கண்ணீர் காணிக்கைகளை சமர்ப்பிக்கின்றேன்.

:lol::rolleyes::(:wub:

நண்பன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.