Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் அழகான ராட்சஷி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அழகான ராட்சஷி

கவிதை

ஆசை காட்டி மோசம் செய்த

அழகான ராட்சஷி !

அவள் அழகின் சிலையல்ல

அனாலும் என் மனதின் மொழியானாள் !

அவள் சொல் கேட்டு

நான் மகிழ்ந்திருந்தேன் !

அவள் நடை பார்த்து

நான் நெகிழ்ந்திருந்தேன் !

அவள் புன்னகை பார்த்து

நான் மலர்ந்திருந்தேன் !

இருந்தும் அவள் குணம் பார்க்க

நான் மறந்து விட்டேன்

பின்னால் அவள் மனம் பார்த்து

நான் உடைந்து விட்டேன் !

நீதான் தன் மனம் என்றாள்

நீயில்லா வாழ்வு

தனக்கு மரணமென்றாள்

அவள் சொல் கேட்டு மகிழ்ந்திருந்தேன்

என் கண்களை மழையாக்கி

காணாமல் சென்றுவிட்டாள் !

சென்ற பின்னர் ஓர் தடவை

என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் !

அவளை கண்டதுமே

என்னை பிரிந்ததற்க்கு

காரணம் கேட்டிருந்தேன்

காதலெல்லம் பொய்யென்றாள் !

உன் வார்த்தைக்கு

பதில் என்னவென்றேன் ?

பழையதெல்லாம் மறந்து விடு

புதியதொன்றை பார்த்துவிடு

நிஜத்தில் என்னை தேடாதே

உன் கனவிலும் வர மாட்டேனென்றாள் !

என் மனதில் அவளுக்காய்

நான் அமைத்த கோட்டையதை

செங் கற்களொன்றாய் பிரித்துவிட்டு

சென்று விட்டாள் நிரந்தரமாய் !

காதலென்னும் சாம்ராச்சியத்தின்

தூண்களெல்லாம் தோல்விகள்தான்

என் தேவதையும் என்னை அங்கே

ஓர் தூணாகச் சேர்த்துவிட்டாள் !

என் வாயோ காதலுக்காய்

காதல் வாழ்க ! காதல் வாழ்க !

எனும் வாசகம் சொல்லி நிற்கும்

என் கண்களோ என் காதலுக்காய்

என்றென்றும் கண்ணீர் மழை பொழிந்திருக்கும்.

இளங்கவி

தங்களின் அழகான ராட்சஷியின் உள் மனம் பத்தி அழகாக கவி வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அழகான கவி வரிகளுக்கு முதலில்..ல்..!! :D

கண்களில் இருந்து

தூறிய கண்ணீர்

துளியில்..

அடித்து சென்றது

அவள் தடங்களும்

மனதிலிருந்து..!! :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் கவியே வருக வருக !

நான் நாற்பது வரிகளில் சொன்ன கவிதை வரிகளுக்கு நாலே வரிகளில் பதில் சொன்ன அழகு சூப்பரோ சூப்பர்..ர் ! ஜமுனா . என் கவிதை வரிகளையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி.

இளங்கவி

நீதான் தன் மனம் என்றாள்

நீயில்லா வாழ்வு

தனக்கு மரணமென்றாள்

நிஜ வரிகளா இளங்கவி? அவ்வாறெனில் உங்கள் காதல் பிரிவுக்காக வருத்தம் தெரிவிக்கின்றேன். :(

சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்களை நம்பாதே னு சும்மாவா பாடிட்டு போனார்கள்? :lol:

ஹீஹீஹீஹீ எல்லா பெண்களும் இல்லையுங்கோ. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அழகான ராட்சஷி

கவிதை

என் கண்களை மழையாக்கி

காணாமல் சென்றுவிட்டாள் !

சென்ற பின்னர் ஓர் தடவை

என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் !

அவளை கண்டதுமே

என்னை பிரிந்ததற்க்கு

காரணம் கேட்டிருந்தேன்

காதலெல்லம் பொய்யென்றாள் !

உன் வார்த்தைக்கு

பதில் என்னவென்றேன் ?

பழையதெல்லாம் மறந்து விடு

புதியதொன்றை பார்த்துவிடு

நிஜத்தில் என்னை தேடாதே

உன் கனவிலும் வர மாட்டேனென்றாள் !

என் கண்களோ என் காதலுக்காய்

என்றென்றும் கண்ணீர் மழை பொழிந்திருக்கும்.

இளங்கவி

இளங்கவி கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் :( .

இது உங்கள் அனுபவமா???? :lol::rolleyes: ம் ம் இன்னொரு மறக்கத்தெரியவில்லை. பெண்களே (சில அதுவும் எங்களுக்கு என்று வந்து மாட்டும் பெண்கள்) இப்படித்தான்.

ஆண்களில் சிலபேர்தான் இப்படி ஆனால் பெண்களில் பலபேர் இப்படி போலிருக்கிறது. சரி சரி வாங்கோ கட்டிப்பிடிச்சு அழுவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவுக்கு

பெண்களில் 90% நல்லவர்களே, சில பேர் செய்யும் பிழைக்காக எல்லாரையும் குறை கூற முடியாதல்லவா ? என் கவிதையில் பெண்களைக் குறை கூற்வில்லை, ஒரு பெண்ணைமாத்திரமே கூறியுள்ளேன். என் கவியை ரசித்தமைக்கு நன்றி.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணாவிற்கு

என்ன இதுக்கெல்லாம் போய் அழுதுகொண்டு, அழுகிற நேரத்துக்கு அலுவலைப்பார்த்தா இன்னுமொன்றை அங்... அ..., விளங்குத நான் சொல்லுறது ? சரி சயிக்கிலை எடுங்கோ போவம்...

கவியை ரசித்தமைக்கு சுப்பண்ணாவிற்கு நன்றி.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளத்தில்

ஒரு பெண்ணின் விம்பம்

உதிர்த்து விட்டு

உதிர்ந்து விட்டது

காரணம் நான் அறியேன்

உன் வாசல் தேடி வந்த என்னை

ஏன் வெறுத்தாய்

சொல் கண்மணியே

புரியாத உன் சிரிப்பில்

பித்தனாக விழுந்துவிட்டேன்

தெளிந்த பின்பு

என்னை நான் தேடுகிறேன்?

ilankaviபின்னால் அவள் மனம் பார்த்து

நான் உடைந்து விட்டேன்

:lol::o:rolleyes::rolleyes::o:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவருக்கு

என் வரிகளையும் ரசித்து அதன் பின் உங்கள் கவிதையையும் தந்ததற்கு முனிவருக்கு நன்றி.

ஒரு சயிக்கிலிலை சுப்பண்ணை, நான், நீங்கள் எல்லாருமா '' வெற்றி நிச்சயம் '' என்று சொல்லிக்கொண்டு ( பழைய ஜெயசிக்குருவை முடிவை ஞாபகம் வைத்துக்கொண்டு ) புறப்படுவோம் நடக்கிறது நடக்கட்டும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணாவிற்கு

என்ன இதுக்கெல்லாம் போய் அழுதுகொண்டு, அழுகிற நேரத்துக்கு அலுவலைப்பார்த்தா இன்னுமொன்றை அங்... அ..., விளங்குத நான் சொல்லுறது ? சரி சயிக்கிலை எடுங்கோ போவம்...

கவியை ரசித்தமைக்கு சுப்பண்ணாவிற்கு நன்றி.

இளங்கவி

இளங்கவி, அழுகிற நேரத்துக்கு அலுவலை பார்த்தால் அடுத்ததை நாங்கள் அழவைக்கலாம் என்று சொல்லுறிங்களா ........ :rolleyes: .சைக்கிள் எடுத்தாச்சு ஆனால் செயின் கழன்டு இருக்குது ஒருக்கால் பூட்டி விடுங்கோ நான் முன்னுக்குத்தான் இருப்பன் நீங்கள் என்னை சைக்கிளில் ஏத்திக்கொண்டு போங்கோ சைக்கிளில் போய் ஆரியகுளத்தடி சந்தியில கொஞ்ச காகம் நிக்குதாம் ஒரு கிளை......ர் வைச்சிட்டு வருவமோ .....??? :lol::o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி, அழுகிற நேரத்துக்கு அலுவலை பார்த்தால் அடுத்ததை நாங்கள் அழவைக்கலாம் என்று சொல்லுறிங்களா ........ :rolleyes: .சைக்கிள் எடுத்தாச்சு ஆனால் செயின் கழன்டு இருக்குது ஒருக்கால் பூட்டி விடுங்கோ நான் முன்னுக்குத்தான் இருப்பன் நீங்கள் என்னை சைக்கிளில் ஏத்திக்கொண்டு போங்கோ சைக்கிளில் போய் ஆரியகுளத்தடி சந்தியில கொஞ்ச காகம் நிக்குதாம் ஒரு கிளை......ர் வைச்சிட்டு வருவமோ .....??? :lol::o:rolleyes:

சுப்பண்ணே நான் பின்னாடிதான் இருப்போன்

பின்னுக்கு இருப்பது எவ்வளவு நன்று தெரியுமே

விழுந்தால் நீங்கள் இரண்டு பேரும்

நான் தப்பி விடுவேன் :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணே நான் பின்னாடிதான் இருப்போன்

பின்னுக்கு இருப்பது எவ்வளவு நன்று தெரியுமே

விழுந்தால் நீங்கள் இரண்டு பேரும்

நான் தப்பி விடுவேன் :rolleyes::rolleyes:

முனி நீங்கள் கதை விளங்காமல் கதைக்கிறிங்கள் ஆரியகுளத்தடிக்கு போய் காகத்துக்கு கிளை..........ர் வைச்சிட்டு வரேக்க ஏதாவது பிசகினால் பின்னுக்கு இருக்கிற உங்களுக்கு தான் முதல் எல்லாம் வரும் :lol: (அதுவும் இளங்கவி சைக்கிள் வேகமாக மிதிக்கமாட்டார்) அப்புறம் இளங்கவிக்கு உங்கள் இரண்டு பேரையும் தாண்டித்தான் எனக்கு வரணும் அதுக்கிடையில நான் குளத்துக்கிள்ள குதிச்சாவது நல்லூருக்கு ஓடிடுவன்.எப்படி என்ட திட்டம் :o

  • கருத்துக்கள உறவுகள்

முனி நீங்கள் கதை விளங்காமல் கதைக்கிறிங்கள் ஆரியகுளத்தடிக்கு போய் காகத்துக்கு கிளை..........ர் வைச்சிட்டு வரேக்க ஏதாவது பிசகினால் பின்னுக்கு இருக்கிற உங்களுக்கு தான் முதல் எல்லாம் வரும் :o (அதுவும் இளங்கவி சைக்கிள் வேகமாக மிதிக்கமாட்டார்) அப்புறம் இளங்கவிக்கு உங்கள் இரண்டு பேரையும் தாண்டித்தான் எனக்கு வரணும் அதுக்கிடையில நான் குளத்துக்கிள்ள குதிச்சாவது நல்லூருக்கு ஓடிடுவன்.எப்படி என்ட திட்டம் :rolleyes:

பலே கில்லாடிதான் போங்க இருந்தாலும் நான் உங்களை விடுவனா?

விழுந்தாலும் மூன்று பேரும் தான் :rolleyes::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலே கில்லாடிதான் போங்க இருந்தாலும் நான் உங்களை விடுவனா?

விழுந்தாலும் மூன்று பேரும் தான் :lol::o:lol:

விழுந்தாலும் மூன்று பேருமா என்ன ஒரு ஒற்றுமை அதிலையும் விழுகிறதில :rolleyes::o:rolleyes:

சபா இப்பவே கண்ணைகட்டுதே முனி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா

நீங்கள் முன்னுக்கு இருந்து கொண்டு என்னை ஓ..ட்டச் சொல்லுகிறீர்கள் சயிக்கிலை, அது பரவாயில்லை ஓட்டினா போச்சு, அனால் என்ன செயினை போடச்சொல்லீட்டியள், நான் கையெல்லாம் கிறீசை பிரட்டி அது என்ர முகமெல்லாம் பூசுப்பட்டு நான் அசிங்கமாய் வர நீங்கள் மட்டும் அந்த மாதிரி முன்னுக்கு இருந்து வரப் பாக்கிறீர்களாக்கும். ஆனால் ''ம்... மவனே என்ர கையிலே இருக்கும் கிறீஸ் உங்கடை சேட்டுக்கும் மூஞ்சிக்கும் வர ஒரு நிமிசம் காணு..மடி'' பிறகு ஆரியகுளத்தில் இறங்கி கழுவதான் சரியாயிருக்கும்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயிக்கில் ஓட்டுறவன் கையிலதான் எல்லாம் இருக்கு தெரியு...மோ முனிவர். '' ஏல முனிவா, வேகமாய் சயிக்கில் போற பொழுது 'சயிக்கில் கான்டில' மெல்லமாய் திருப்பிக்கொண்டு சயிக்கில் முன் பிறேக்கை அடிச்சாய் பின்னுக்கு இருந்த முனி முன்னுக்கும் முன்னுக்கு இருந்த சுப்பண்ணை பின்னுக்குமாய் மாறிப்போயிடுவியள் தெரியுமல்லோ, இதெல்லாம் எங்ககிட்ட வச்சுகாதிங்கோ, மவனே பிறகு சட்னிதான்''.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா, சுப்பண்ணா

''குளத்தில குதிச்சு தப்பி நல்லூருக்கு ஓடும் வரைக்கும் நானும் முனியும் உம்மை விடுவோமா, கையில சயிக்கில் என்னத்துக்கு இருக்கெ...லே, உனக்கு மேலே தூக்கிப்போட்டு குளத்திலேயே வச்சு உம்மை தாட்டுடமாட்டம்''

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவா, முனிவா

ஒற்றுமை என்றால் இப்படியல்லோ இருக்கோணும். ''தமிழனைய்யா.. ''

iLangkavi

  • கருத்துக்கள உறவுகள்

சயிக்கில் ஓட்டுறவன் கையிலதான் எல்லாம் இருக்கு தெரியு...மோ முனிவர். '' ஏல முனிவா, வேகமாய் சயிக்கில் போற பொழுது 'சயிக்கில் கான்டில' மெல்லமாய் திருப்பிக்கொண்டு சயிக்கில் முன் பிறேக்கை அடிச்சாய் பின்னுக்கு இருந்த முனி முன்னுக்கும் முன்னுக்கு இருந்த சுப்பண்ணை பின்னுக்குமாய் மாறிப்போயிடுவியள் தெரியுமல்லோ, இதெல்லாம் எங்ககிட்ட வச்சுகாதிங்கோ, மவனே பிறகு சட்னிதான்''.

இளங்கவி

ஏலேய் என்கிட்டவா!!!! :lol: சாவி என்கிட்டல இருக்கு நான் திறந்தா தான் நீங்கள் ஓட்டலாம் பின்னுக்கு இருக்கும் போதே பூட்டி விடமாட்டன் முனிவரா கொக்கா அதுக்கு பிறகுதான் மற்றதெல்லாம் :D:lol::D:o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சுப்பண்ணையுடைய சயிக்கிலல்லவா சாவி உங்ககிட்டே எப்படி வந்திச்சு, சுப்பன்ணையுடைய சயிக்கிலையே சுட்டுட்டீங்களா ? அட போங்க சா..ர் நீங்க பெரி...ய கில்லாடிதான் ! . முனிவரா இருந்து கொண்டும் இந்த போடு போடுறீங்க !!!. ஆனால் முனிவரே சயிக்கில் ஓடும்போது பூட்டினானல் மூன்று பேரும் சேர்ந்துதான் ஆரியகுளத்துக்குள் போகவேணும் என்பதி மறந்துட்டீங்க...ளே !

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.