Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெகலியவின் அதிபுத்திசாலித்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது உண்மை எங்கே, எப்படி என்று எவரும் கேட்கக் கூடாது!

இது அமைச்சர் கெஹலியவின் விளக்கம்

வுவனியா இராணுவ முகாமைத் தாக்க வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை என்றும் அது எப்படித் தாக்கியழிக்கப்பட்டது, எங்கு வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது என்ற கேள்வியெல்லாம் எவரும் கேட்கக்கூடாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உøயாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

வவுனியா இராணுவ முகாம்மீது புலிகளால் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

புலிகளின் இரண்டு விமானங்கள் வந்து இத்தாக்குதலை நடத்தின. அப்போது விமானப்படையினர் 12 பேரும் பொலிஸ் ஒருவரும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

அதிகாலை 3.28 இற்கும், 3.52 இற்கும் இடையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எமது இரண்டு விமானங்கள் புலிகளின் இரண்டு விமானங்களையும் விரட்டித் தாக்கின.

புலிகளின் அந்த இரண்டு விமானங்களுள் ஒன்று அழிக்கப்பட்டது. முகாமைத் தாக்கவந்த 10 புலிகளும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள்10 பேரின் சடலங்களைப் புலிகளிடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை. ஆனால், எங்கு தாக்கப்பட்டது, எப்படித் தாக்கப்பட்டது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கக்கூடாது.

அப்படிக் கேட்பது எமது படையினரை அவமதிக்கும் செயலாகும். நாம் புலிகளின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என்றார் (த07)

சுடரொளி.

நகைச்சுவைப் பக்கத்தில் பிரசுரிக்கவேண்டியது பலர் பார்ப்பதற்காக ஊர்ப் புதினத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது உண்மை எங்கே, எப்படி என்று எவரும் கேட்கக் கூடாது!

இது அமைச்சர் கெஹலியவின் விளக்கம்

வுவனியா இராணுவ முகாமைத் தாக்க வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை என்றும் அது எப்படித் தாக்கியழிக்கப்பட்டது, எங்கு வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது என்ற கேள்வியெல்லாம் எவரும் கேட்கக்கூடாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

உங்களிட்டை யாரப்பா கேள்விகேட்டது ?

அதுகும் உங்களிட்டை கேள்வி கேக்கிறவன் , சுத்த பைத்தியக்காரனாகத்தான் இருப்பான் .

சிறி எவ் 7 ல் காணொளியில் பதிவு செய்யும் வசதி கூட இல்லையா?

சிறி எவ் 7 ல் காணொளியில் பதிவு செய்யும் வசதி கூட இல்லையா?

இப்படி எல்லாம் கதைச்சா

உள்ள தூக்கி போட்டுடுவாங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமீழ விடுதலைப் புலிகளின் விமானம் தாக்கப்பட்ட விதமும் விமானம் வீழ்ந்த இடமும் இங்கு முக்கியமானதல்ல. வவுனியா இராணுவ முகாம்மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய இரு விமானங்களில் ஒன்றை விமானப்படையினரின் இருதாக்குதல் விமானங்கள் சுட்டுவீழ்த்தியுள்ளன என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறியதாவது: கிழக்கினை மீட்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருந்த பொழுதும் ஐக்கிய தேசியக்கட்சி இதேபோன்றுதான் விமர்சித்தது.

சூசை என்றால் ஜெனரல் பற்றன் என்று கருதினார்கள். கரும்புலிகள், கடற்புலிகள் என்றால் மிகவும் வல்லமை மிக்கவர்கள் என்ற எண்ணம் முன்னர் நிலவிவந்தது.

பயங்கரவாதிகளின் வீரசாகசங்களை விளம்பரப்படுத்தி வெளிநாடுகளில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்கு சிலர் உதவி வருகின்றனர்.

25 வருடங்களாக எந்த அரசியல் தலைவராலும் முடியாத ஈழக்கனவை சிதைத்தல் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கருத்திட்டத்தில் அரசாங்கம் கைவைத்துள்ளது.

காவற்துறையினர், சிவிலியன் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தவந்த 10 பேரின் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகாலமாக விடுதலைப்புலிகள் தமது விமானத்தின் மூலம் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய, சிங்கள மக்களின் ஐன்ஸ்டைன். :lol:

சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

யாரிந்த சிவிலியன்? நேற்று மாலை கட்நாயக்கா விமான நிலையத்திலிருந்து ஒரு சவபெட்டி மிகப்பாதுகாப்பு மத்தியில் இந்தியா செல்லும் விமானத்தில் ஏற்றியதாக ஒரு கொழும்புத்தகவல்! அப்படியாயின் இறந்தவர் இந்தியரா?? :o

265 இராணுவ பொறியலாளர் வடக்கு கிழக்கிலாம்!! குறைந்தது 15 அல்லது 20 பேராவது வவுனியாவில் இருந்திருப்பார்கள்!! உண்மைகள் வர வாட்கள் எடுக்கும். :lol:

யாரிந்த சிவிலியன்? நேற்று மாலை கட்நாயக்கா விமான நிலையத்திலிருந்து ஒரு சவபெட்டி மிகப்பாதுகாப்பு மத்தியில் இந்தியா செல்லும் விமானத்தில் ஏற்றியதாக ஒரு கொழும்புத்தகவல்! அப்படியாயின் இறந்தவர் இந்தியரா?? :o

265 இராணுவ பொறியலாளர் வடக்கு கிழக்கிலாம்!! குறைந்தது 15 அல்லது 20 பேராவது வவுனியாவில் இருந்திருப்பார்கள்!! உண்மைகள் வர வாட்கள் எடுக்கும். :lol:

இது தொடர்பான செய்தி உள்ள இணைப்பை நேற்று வெட்டி வந்து ஒட்டினேன். நிர்வாக லல்லுனர்கள் தூக்கி விட்டார்கள்.

http://www.orunews.com/?p=1916

இது தொடர்பான செய்தி உள்ள இணைப்பை நேற்று வெட்டி வந்து ஒட்டினேன். நிர்வாக லல்லுனர்கள் தூக்கி விட்டார்கள்.

http://www.orunews.com/?p=1916

நீங்கள் இணைத்த செய்தி களத்தில்தான் உள்ளது. சிலவேளை நீங்கள் தனித்தலைப்பாக இணைக்க அது பின்னர் ஒரு தலைப்பின் கீழ் ஒன்றாக்கப்பட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.