Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள்!

Featured Replies

வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள்!

வன்னியிலிருந்து ஐ.நா.நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியயேற வேண்டாம் எனக்கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாகத் திரண்டனர்.

இன்று காலை 6.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனப்பணிமனை மற்றும். உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பணிமனை ஆகியவற்றின் முன்பாக திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தற்போது நடைபெறும் படைநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும் ஏனைய பொதுமக்களுமாக உன்று திரண்ட பொது மக்கள் ஐ.நா.வின் வெளிநாட்டப்பிரதிநிதிகளிடம் தங்களில் அவல நிலையைக்கூறி அழுத காட்சினையும் காணமுடிந்தது. இடமபெயாந்த மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வது மட்டுமல்லாது சிறிலங்காப்படையினரால் மக்களுக்கு ஏற்படும் அழிவுகள் பாதுகாப்புக்கள் என்பனவற்றின் சாட்சிகளாகவும் இந்நிறுவனங்களே இருப்பதால் வன்னியிலிருந்து இந்நிறுவனங்கள் வெளியேறினால் படையினர் பொதுமக்களாகிய தங்கள் மீது மேலும் தாக்குதல்களை அதிகரிக்கலாம் என அங்கு திரண்டிருந்து மக்கள் ஐ.நா.பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.

சில முதிய பெண்கள் வாய்விட்டு அழுத காடசயினையும் காணமுடிந்தது. தங்களின் தலைப்பீடத்துடன்தொடர்பு கொண்டு மக்களின் கருத்தக்களை தெரியப்படுத்துவதாக உலக உணவுத்திட்டம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழ் வின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின் அவலங்களை வெறும் 100 பேர் மட்டும் தான் பார்த்திருக்கறார்கள் இதேநேரம் இளந்திரயன்ர செய்தி 1000 என்டு காட்டுது. புலம் பெயர் தமிழர்களே உங்களுக்கு வெட்கமில்லையா அவர்களும் எங்கட இரத்த உறவுகள் தான. சிங்களவனை அழிச்சா மட்டும் விடுதலையில்ல எங்கட மக்கள் நின்மதியா வாழத்தான் இ.ந்த போராட்டம். இங்க இருந்துகொண்டு நின்மதியா இருக்கறமே (நானும் தான்) ஒரு நிமிசம் வெயிலில மரத்துக்கு கீழ சாப்பாடு இல்லாம ஒருநாள் இருந்தா எப்படி இருக்குமு; அவர்கள் எத்தனையோ நாள் இருக்கிறார்களே. எங்கட மக்கள் நின்மதியா வாழவேண்டும் அதுக்கு நாங்கள் தான் உதவவேண்டும்

நீங்கள் எப்பிடிக்கூப்பிட்டாலும் எங்கட சனம் வராதுகள்... வாறதுகளோடதான் தையிரியமா எதையவது செய்யவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்பிடிக்கூப்பிட்டாலும் எங்கட சனம் வராதுகள்... வாறதுகளோடதான் தையிரியமா எதையவது செய்யவேணும்.

சூறாவளி கவலையாக்கிடக்கு

மனசே மரத்துப் போச்சு.

வெளியே வந்தவன் தான் வாழ்ந்தா போதும் என்று நினைக்கிறான்.

நெதர்லாந்து பாராளுமன்றத்தின் முன் கூடிய காட்சியை ஐரோப்பா தொலைக்காட்சியில் பார்த்தேன். சீ..என்றது மனசு. என்ன கொடுமை. குத்தாட்டம் போடுற கூட்டத்தில பாதியாவது போயிருந்தா உலகமும் எங்களை பார்க்கும். சிங்களவர்களும் சில உருப்படாத மனிதர்களும் தமிழர் விடிவுக்கு எதிராக போராட தலைப்பட்டிருக்கிறாங்க. என்ன கொடுமை. எதை செய்ய வேணுமோ அதைவிட்டுட்டு, எது தேவையில்லையோ அதை செய்துகள்..உம்..

சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டாயப் பணிப்பின் பேரில் வன்னியிலிருந்து அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் இன்று வெளியேறும் நிலையில் மக்கள் அவர்களை முற்றுகையிட்டு தடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மக்களினை காப்பாற்ற நாம் உதவிக் கொண்டிருந்தால், ஐநாவின் கையை நாடத் தேவையில்லை. அதை நாம் புரிந்து கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

சூடான் அரசின் உத்தரவையும் மீறி உதவி செய்யப் போகும் ஐநா.. சிறீலங்காவில் சிங்களப் பேரினவாத அரசுக்கு அடங்கிப் போவதும் ஏனோ..??!

எல்லாம்.. அமெரிக்கா என்ற பெரியண்ணன் செய்யுறது. அவர் விரும்பினா... ஐநா நிற்கும். அவர் விரும்பல்லைன்னா ஐநா போகும்.

இவர்கள் உலகை ஏய்த்துக் கொண்டிருப்பதிலும்.. மக்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதிலும்.. போகட்டும்.

மக்கள் இன்னொரு தெரிவை.. தேர்த்தெடுக்க நிச்சயம் தூண்டப்படுவார்கள்..! அது எதிரிக்கு மட்டுமல்ல.. இவ்வாறான இரட்டை வேடம் போடும் மனிதாபிமான அமைப்புக்கள் என்ற போர்வையில் வல்லரசுகளின் தலையாட்டிப் பொம்மைகளாக உலகில் வலம் வரும் அமைப்புக்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும்..! :wub::wub:

Edited by nedukkalapoovan

சூறாவளி கவலையாக்கிடக்கு

கவலைப்பட ஒணுமில்லை... போறவன் போகட்டும் நாம் முடிந்தவரை செய்வோம்....

இறுதிவரை செய்வோம்.... நாம் வாழும்போதுதான் எங்கட சங்களே திரும்பிப்பாக்கும்....

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.