Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்?: பீதியில் சிறிலங்கா படை

Featured Replies

அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை

[புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:07 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்]

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி:

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்த்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் பகுதியில் புலிகளின் இத்தகைய தாக்குதலினால் ஆறு படையினருக்கு மூசுத்திணறல் ஏற்பட்டது.

அக்கராயன்குளத்தில் 57 ஆவது படையணியினர் மீதும் இதேமாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தாக்குதலில் பத்து படையினர் மூச்சுத்திணறலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கண்ணீர்புகைக் குண்டுகளை ஒத்ததான ஒரு வகை "வாயு"வை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விடுதலைப் புலிகள், "விசவாயு" தாக்குதலை நடத்தக்கூடும் என்று சிறிலங்கா படையினர் பீதியடைந்துள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் மேலதிகமான மருத்துவ வசதிகளை வடபோர்முனைக்கு அனுப்பி வைக்குமாறு சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சிறிலங்கா படைத்தரப்பினரும் பங்கேற்றனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

"வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களது இயலாமையை மறைக்க ஸ்ரீலங்கா அரசு இப்படியான கதைகளை விட்டு வெளிநாட்டு அனுதாபத்தை தேடுவது வழமை .

இராணுவத்தினர்க்கு , அக்கராயனில் பயத்தில் தான் பின்னாலை வாயு வெளியேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

:D சிறி,

இதில் ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறது அரசு.

ஒன்று புலிகளுக்கு இன்னும் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை ஏற்படுத்துவது, மற்றையது எதிர்காலத்தில் தான் பாவிக்க உத்தேசித்திருக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவிப்பதற்கான நியாயப்படுத்தலாகவும் இதைக் கொள்ளலாம்.

ரசாயன ஆயுதங்களை அருகருகே நின்று போரிடும் களங்களில் பாவிக்கும் போது அது பாவிப்பவரையும் பாதிக்கலாம். ஆகவே தகுந்த நடை முறைகள் இல்லாமல் புலிகள் அதைச் செய்வார்களா என்பது சந்தேகமே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் அணுகுண்டும் பயன்படுத்தினார்கள் என்று சொல்லுவாங்கள் போல எல்லாம் பயப்பீதியில உளறுறதுதான் ஆனால் புலிகள் அடிக்கிற அடியில எல்லாரும் வாயுவாக போறிங்கள் என்பது உண்மை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களது இயலாமையை மறைக்க ஸ்ரீலங்கா அரசு இப்படியான கதைகளை விட்டு வெளிநாட்டு அனுதாபத்தை தேடுவது வழமை .

இராணுவத்தினர்க்கு , அக்கராயனில் பயத்தில் தான் பின்னாலை வாயு வெளியேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கும் .

:D:unsure::lol::):(

  • தொடங்கியவர்

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.