Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நலனை கருணாநிதி காற்றில் பறக்கவிட்டு விட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 9/28/2008 - சென்னை, இலங்கைத் தமிழருக்கு எதிராக மத்திய அரசு செயற்படுகின்றது. இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்ட கருணாநிதி, இனிமேலாவது தனது தவறை உணரவேண்டும் என பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சேலத்தில் பா.ஜ.க. பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன. அவற்றின் விபரம் வருமாறு:

மத்தியில் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறது. இப்பிரச்சினை குறித்து கவலைப்படாமல் தமிழக முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி; இராணுவத் தீர்வு சாத்தியமில்லை. இலங்கை இராணுவத்துக்கு உதவும் விதத்தில் இங்கிருந்து 265 இராணுவப் பொறியியலாளர்களை இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயலை, தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளதைக் கண்டிக்காமல் கருணாநிதி மௌனம் காப்பது கண்டனத்துக்குரியது.

தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்கின்ற சுயநல நோக்குடன் இலங்கைத் தமிழர் நலனை காற்றில் பறக்கவிட்ட கருணாநிதி, இனியாவது தனது தவறை உணர்ந்து அங்கிருந்து இராணுவப் பொறியியலாளர்களை திரும்ப அழைக்க மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருண்ட தமிழகமாக மாறிவிட்டது. மின்சாரத் தேவையை உணர்ந்து முன்கூட்டியே சிந்தித்து செயற்படாமல் முந்தையை அரசை குறைகூறிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருண்ட தமிழகமாக மாறிவிட்டது. மின்சாரத் தேவையை உணர்ந்து முன்கூட்டியே சிந்தித்து செயற்படாமல் முந்தையை அரசை குறைகூறிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு .

அடிக்கடி தமிழகத்தில் மின்வெட்டு நிகழ்கிறதாம். கடந்த சில ஆண்டுகளில் கோடை காலத்தில் கூட இவ்வாறு நடந்ததாக ஞாபகமில்லை. ஐயா இலங்கைத் தமிழரையும் கைவிட்டு தமிழ்நாட்டு அரசியலையும் கெடுத்துக்கொள்வார் போல இருக்கு. ஸ்டாலின் கதி அதோ கதிதான்..! :icon_idea::lol:

தனது ஒரு Son செய்யும் அட்டகாசத்தால், Sun பாதிப்பதை கலைஞர் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால், அவரின் இன்னொரு Son இன் முதலமைச்சர் கனவிற்கும் சேர்த்தே ஆப்பு வரும். இதனால் கண் கெட்ட பின்னே Sun ஐ நமஸ்காரம் செய்தும் பலனில்லாமலே போய்விடும். :icon_idea::lol:

மேலும் தற்போதய மின்பற்றாக் குறைக்கு உண்மையான காரணம் தமிழ்நாட்டில் தற்போது அதிகளவில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது தான். அதனாால் உடனடியாக அனல்மின்நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சித்த போது இராமதாஸ் ஆரம்பத்திலேயே விளைநிலங்கள் எனக் கூறி தடுப்பதிலேயே குறியாக இருந்தார். ஆனால் அவரை திமுக வெளியேற்றி விட்டதால் மீண்டும் இத்திட்டம் தற்போது விரைவாக முடுக்கி விடப்பட்டுள்ளதாம். ஏதோ திட்டமம் விரைவில் நிறைவேறி மின்பற்றாக்குறை தீர்ந்தால் எல்லோருக்கும் நல்லதே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்ருடைய நலனை அவர் காற்றில் பறக்கவிட்டதற்கான காரணம். அது துசியைபோல் சிறியதாக இருப்பதுதான். அதனை யாராலும் அசைக்கவே முடியாதபடி நாம் மாற்றி அமைத்தால்

எப்படி இந்த கிழடு காற்றில் பறக்கவிடும்??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நலனைப் பிடித்து வைத்திருந்தால்தானே அதைக் காற்றில் பறக்க விடமுடியும்!அவர்தான் ஒருநாளும் தமிழர்நலனைப் பாது காத்ததில்லையே!

அவர் தன் son நலனை நோக்கினார்!

தங்கை son நலனைத் தேக்கினார்!

தமிழ் son நலனை கைவிட்டார். இனிமேலாவது

கொஞ்சம் கண் திறப்பாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.