Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய கம்பூனிஸ்ட்டுக் கட்சியின் போர்க்குரல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கம்பூனிஸ்ட்டுக் கட்சியின் போர்க்குரல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த மூன்று நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைத் தோழகள் நல்லக்கண்ணு, த. பாண்டியன், சி.மகேந்திரனுடன் தஞ்சாவூரில் தங்கியிருந்தேன். அவர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாபெரும் செயல்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இது மறைந்த தோழர் ஜீவா வித்திட்டு வளர்த்த தமிழ் மாக்சிய அணி இன்று தோழர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் சி.மகேந்திரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமென நிழல் விருட்சங்களாக ஒங்கி உயர்ந்துள்ளதன்ீயல்பான வெளிப்பாடாகும். மகேந்திரன் IPKF மோதல் காலத்திலேயே டெல்ஹி மத்திய குழுவினரின் நிலைபாட்டுக்கு வெளியில் எமக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் புதிய பார்வையில் "தீக்குள் விரலை வைத்து" என்கிற கட்டுரைத் தொடரை எழுதியவர். பின்னர் ராஜீவ் காந்தி அவர்களுடய மரணத்துக்குப் பின்னர் தீக்குள் விரலைவத்து கட்டுரைத்தொடரை வெளியிட அச்சகங்கள் முன்வரவில்லை. 2002ல் தான் அந்தக் கட்டுரைத் தொடரை அவரால் நூலாக்க முடிந்தது. டெல்கி மத்தியகுழுவில் இடம்பெற்ற நீண்டகால உட்கட்ச்சிப் போராட்டத்தின்பின் நமது தோழர்கள் டெல்ஹி மத்திய அமைப்பில் கருத்து ரீதியாக வெற்றி பெற்றுள்ளனர். மத்திய அமைப்பில் தோழர் நல்லக்கண்ணு இடபெற்றதும் தோழர் ராஜா போன்றவர்களின் பங்களிப்பும் வரலாற்றில் பதிவுசெய்யப் படவேண்டியதாகும்.

இந்த வெற்றியின் ஆரம்பமாக நீண்டகாலமாகத் தோழமைக் கட்சியாக தொடர்புடன் இருந்த ஜே.வி.பி கம்யூணிஸ்ட் கட்ச்சி மாகா நாடுகளுக்கு அழைக்கப் படுவது நிறுத்தப் பட்டது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்ப்படை சுட்டுக்கொல்லப் படுவதை மத்திய அரசின் பங்காளிகளே காகித ராக்கட் விழையாட்டாக்கியபோது அதனை ஒரு தேசியப் பிரச்சினையாக முன்னெடுத்துச் செல்வதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்ச்சிக்கு பெரும் பங்குண்டு. இவர்கள் இலங்கைத் தமிழர் தமிழக மீனவர் பிரச்சினையை சென்னையில் நடந்த் மாநில மாநாட்டிலும் பின் ஹைத்ராபாத் மற்றும் டெல்ஹியில் நடந்த தேசிய மாநாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை இன்றைய அவர்களது தீவிர நிலைபாட்டுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சினையில் விடுதலைச் சிறுத்தைகளின் சட்ட மன்ற உறுப்பினர் திரு ரவிக்குமாரும் இந்திய கம்பூனிஸ்ட் கட்ச்சி சட்டமன்ற உறுப்பினர்களான திரு குணசேகரன் ராமசமில் எம்.எல்.ஏ போன்றவர்களும் எடுத்த இங்கு முயற்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சசி ஒழுங்குசெய்யும் அரங்கில்போராட்டத்தில் நெடுமாறன், வீரமணி, வைகோ, திருமாவளவன் உட்பட முக்கிய தமிழ் தேசிய அணியினரும் மக்க்சிய கம்பூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் சரத்பவார் பிரிவும் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். முதன்முதலாக புதிய கலாச்சாரம் போன்ற கம்யூனிஸ்ட் கட்ச்சியோடு முரண்படும் தீவிரமான இடதுசாரி அமைப்புகள்கூட மேற்படி உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் வரவேற்ப்புத் தெரிவித்துள நிலையில் மருத்துவர் இராமதாஸ் அவர்களது வரவு கம்யூனிஸ்ட்டுகளால் எதிர்பார்க்கப் பட்டுகிறது. மகத்மாகாந்தி நினைவுநாளானாகஸ்ட் இரண்டில் எல்லா மாவட்டத் தலைமையகங்களிலும் இடம்பெறவுள்ள ஊண்ணாவிரதப் போராட்டத்திலன் முக்கிய திருப்பம் ஜெயலலிதா அம்மையாரின் ஆதரவுக் கடிதமும் சகல மாவட்டங்களிலும் ஆதிமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்க்க உள்ளமையுமாகும்.

போராளிகள் மத்தியிலும் நன்றியுடனான வரவேற்ப்பை இந்த நிகழ்வுகளின் வளற்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தினமணி திருச்சி பதிப்பு நிருபர் என்னை நேர்கண்டபோது "மாற்றுக் கருத்துக்களுக்கு எதிஒராகவும் துப்பாக்கி தூக்குகிறவர்களாகவும் யாருக்கும் செவிமடுக்காமல் வெறும் இராணுவ வெற்றிகளை மட்டுமே இலக்காகக்கொண்டவர்களாகவும் போராளிகள் தொடர்ந்து இருக்கிறார்களே எல்லோருடனும் பகைத்துத் தனிமைப்படுகிறார்களே" என்பதுபோன்ற மிகக் கடினமான கேழ்விகள் முன்வைக்கப் பட்டது.

என்னுடைய நீண்டபதிலில் இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் இன்றுதான் இந்திய தேசியக் கட்சசி ஒன்று தமிழர்களின் பாதுகாப்புக்காகப் போர்க்குரல் எழுப்பியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன். இத்தனை நாட்கள் இந்திய தேசிய அரசியல் சக்திகள் பல இனக்கொலை அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்திருந்து இலங்கைத் தமிழர்கலையும் போராளிகளையும் சுவரோடு தற்க்காப்பு நிலையில் அமுக்கி வைத்திருந்தது. இந்திர அம்மையாரின் மறைவுக்குப் பின் முதன்முறையாக இன்றுதான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய சூழலில் இந்திய கம்யூஸிட்டுகள் இந்திய வன்னி மார்க்கத்தில் போராட்டத்துக்கு ஆதரவு போராளிகளுடன் விமர்சன ரீதியான நட்ப்பு என்கிற புதிய இருவழிச் சாலையைத் திறந்திருக்கிறார்கள். இது நிச்சயம் புதிய பரிமாணங்களை உருவாக்கும்" என்று தெரிவித்தேன். போராளிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகப் போராடும் அமைப்புகளின் விமர்சனங்கலையும் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்கள் தோழ்ர் மகேஸ்வரனோடு தொடர்புகொள்ளுங்கள்.

மின்னஞ்சல்:

thamarai_mahendran@yahoo.com

செல்பேசி: 00919444116087

Edited by இணையவன்
தலைப்பு தமிழில் இடப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள் போயட்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணி மேலும் சிறக்கட்டும், கவிஞரே..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜெயபாலன் அவர்களே!

அரசியல் இலாப நட்டம் பார்க்கப்படாமல் எமது விவகாரம் இந்திய கட்சிகளால் கையாளப்படுமாக இருந்தால் அது உண்மையான ஒரு பெறுமதியான திருப்பமாகவே அமையும், அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டே எமது போராட்டம் தவம் இருக்கின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜெயபாலன் அவர்களே!

அரசியல் இலாப நட்டம் பார்க்கப்படாமல் எமது விவகாரம் இந்திய கட்சிகளால் கையாளப்படுமாக இருந்தால் அது உண்மையான ஒரு பெறுமதியான திருப்பமாகவே அமையும், அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டே எமது போராட்டம் தவம் இருக்கின்றது!

அன்புக்குரிய புத்தனுக்கும் டங்குவாருக்கும் தேவனுக்கும் உங்கள் அன்பான கருத்துக்களுக்கு எனது நன்றிகள். தயவுசெய்து உங்கள் நன்றிகளையும் ஆதரவையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மகேந்திரனுக்கும் தெரிவியுங்கள்.

எத்தகைய நெருக்கடிகளை எதிர்நோக்கியபோதும் நான் எப்பவும் என்னுடைய வரலாற்றுக் கடமையைச் செய்ய இயன்றவரை போராடுவேன் என்கிற வாக்கை உங்களுக்கு தருகிறேன்.

இது எங்கள் கப்பல். காற்று ஏன் மாறுகிறது எதற்காக மாறுகிறது என்பதல்ல காற்று சாதகமாக மாறும்போது அது ஓயமுன்னம் நமது இலக்கை நோக்கி எமது கப்பலைச் செலுத்திவிடவேண்டும். காற்று எதற்க்கு மாறினாலும் நம் திசை நோக்கி வீசுவது நன்மைதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.