Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெற்ற வயிறு பட்டினியில் வாடுவது கண்டு அன்னையவள் பசிதீர்க்க தாம் பசியிருந்த கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணி நேர உண்ணா நோன்பு உணர்ச்சிகரமாக முடிவுற்றது. :

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுகள் தாங்கி, தாயக உறவுகளுக்காய், செப்டெம்பர் மாதம் 26ம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமான தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு 30மணித்தியாலங்கள் கழித்து சனி இரவு 10 மணிக்கு வெற்றியாகவும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் முடிவுற்றது.

வெள்ளிக்கிழமை மாலை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தி, அவரது நினைவுகள் தாங்கிய ஒளித்தடம் ஓளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து உண்ணா நோன்பிருந்த இளையவர்கள், மற்றும் பெரியவர்கள் தங்களது உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டனர்.

பல இளையவர்கள் பேசும் பொழுது தாங்கள் இந்த 30 மணித்தியாலங்கள் செய்வது ஒரு பெரியவிடயமல்ல. திலீபன் அண்ணாவின் தியாகத்தினோடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதை மிகவும் எழுச்சியாகக் கூறியிருந்தனர். இவர்களோடு தாமும் வந்திருந்து உண்ணா நோன்பு இருப்போம் என்று பல முதியவர்கள் தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர். சில பெற்றோரும் பிள்ளைகளுடன் வந்திருந்து 30 மணி நேரத்தையும் முடித்தனர். பங்குபற்றிய ஒவ்வொருவரும் தம்சொந்தக்களுக்காக தமது பங்களிப்பைச் செய்துவிட்டே உட்கார்ந்திருந்தனர்.

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக தம்மாலான உதவியை இளையவர்கள் ஒன்று சேர்ந்து வழங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காய் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ச்சியாக இந்த இளையவர்களின் உண்ணா நிலையை அனைத்து ஒலி மற்றும் ஒளிபரப்பு நிலையங்கள் எடுத்தியம்பிக்கொண்டிருக்க மக்கள் தொடர்ச்சியாக வந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தனர்.

இரவிரவாக மக்களின் ஆதரவு வந்தவண்ணமே இருந்தது. சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை உண்ணா நோன்பிருந்தவர்களை உற்சாகமூட்டும் வண்ணம் கருத்துக்களையும் தாயகப் பாடல்களையும் பாடினார்கள். சிறியவர்கள் இரவு பல மணி நேரத்திற்குப் பின்னரும் உணர்வு மேலோங்கும் தாயகப்பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமூட்டினார்கள்.

தொடர்ச்சியாக வந்தபலரும் தமது கருத்துக்களைக் கூறியதுடன், உண்ணா நோன்பிருந்த 40க்கும் மேற்பட்ட இளைவயவர்கள் தமது கருத்துக்களை எடுத்தியம்பினர். குறிப்பாக இந்த 30 மணித்தியாலங்களையும் கதைக்காமல் மௌனமாக இருவர் உண்ணா நோன்பிருந்தனர். வேறுபலரும் நீர் அருந்தாமல் உண்ணா நோன்பிருந்தனர்.

வேறு பலர் வழக்கமாக தியாகதீபம் அவர்களது நினைவாக 26 ம் திகதி உண்ணா நோன்பிருப்பவர்கள். அவர்களுக்கு இது கிட்டத்தட்ட 48 மணி நேர உண்ணா நோன்பாக இருந்தது. உண்ணா நிலையில் இருந்த ஒவ்வொரு இளையவரும் ஆரம்பத்திலிருந்து கூறிக்கொண்ட ஒரே வார்த்தை, நாங்கள் ஒரு நாள் அல்லது 2 நாள் இந்த உண்ணா நிலை செய்வது என்பது பெரிய விடயமல்ல. தொடர்ச்சியாக உண்ணாமல் பட்டினியால் வாடும் எமது மக்களின் நிலையை இந்த ஒவ்வொரு செக்கனும் எங்கள் மனத்தினுள் நினைந்து பார்த்து அழுகின்றோம் என்பது தான். தமிழ்த் தாதிமார் வந்திருந்து உண்ணா நோன்பிருந்தவர்களைப் பரிசோத்தித்தனர்.

இறுதி 5 மணி நேரமும் மக்கள் வெள்ளமாக வந்து கொண்டிருந்தனர். இது நடைபெற்ற இடம் டொரண்டோ பெரும்பாகத்திலிருந்து தொலைவில் உள்ளது. ஆயினும் தூரத்தையும், மழையையும் பொருட்படுத்தாது மக்கள் திரளாக வந்தனர். மண்டபத்தினுள் பலர் பலமணி நேரங்கள் நின்றவண்ணமும், வெளியில் பலரும் தொடர்ச்சியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

இறுதியில் வானம்பாடிகள் இசைக்குழுவினர் உணர்ச்சிகரமாக பல தாயகப்பாடல்களை இசைத்தவண்ணம் இருந்தனர். இவர்களும் தாயகமக்களின் வாழ்க்கைத்தேவைக்காக கடந்த வாரம்தான் 27 மணி நேர தொடர்ச்சியான இசைமுழக்கம் செய்து எம்மக்கள் வேதனை தீர்த்தவர்கள். ஒவ்வொரு பாடல்களுக்கும் கைகள் வலிக்கும் வண்ணம் அங்கிருந்த அனைவரும் கைகள் தட்ட அந்த இடத்தின் உணர்வலைகள் மேலோங்கிக் காணப்பட்டது.

குறிப்பாக “குத்தாட்டம் போடடா” பாடல் இசைக்கும்போது மக்கள் உற்சாகத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்றனர். இந்த மகிழ்வும், உற்சாகமும் தமிழீழம் கிடைக்கும்போது தமிழர் நாம் எவ்வளவு மகிழ்வடைவோம் என்பதை நினைத்துப்பார்க்கவைத்து நெகிழ்வூட்டியது.

கடைசி இருமணித்தியாலங்கள் பங்குபற்றிய இளையவர்கள் தமது உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டனர். பசியென்றால் என்ன என்பது ஒவ்வொருவருக்கும் விளங்கிய போது தாயக உறவுகளைப்பற்றி நினைத்துப்பார்த்தோம், நீங்கள் எதற்கும் யோசிக்காதீர்கள்: நாங்கள் இருக்கிறோம், மாறுபாடுகள் தவிர்த்து எல்லோரும் ஒன்றுபடவேண்டும், எமது நாட்டின் விடிவிற்காய் எல்லோரும் சேர்ந்து உழைக்கவேண்டும், எமது மக்களுக்கு வெளியிலிருந்து யாரும் வரப் போவது இல்லை: நாங்கள் மட்டும் தான் இருக்கிறம், நாட்டுக்கு சென்ற போது ஏற்பட்ட உணர்வுகள், தமிழீழம் என்ற குடும்பத்தை இங்கு எங்கள் கண்முன்னே பார்க்கிறோம்: சந்தோசப்படுகிறோம் என்ற கருத்துக்கள்பட ஒவ்வொரு இளையவரும் உணர்ச்சிபொங்கப் பேசியிருந்தனர்.

உண்ணா நோன்பு இவர்கள்தான் இருந்தார்களா என்று வியக்கும் வண்ணம் அவர்களிடத்தில் உற்சாகம் மேலோங்கியிருந்தது. ஒவ்வொருவரிடத்திலும் நாட்டுக்காக உழைக்கும் கடமை உள்ளம் காணப்பட்டது. வந்திருந்தபலரும் கண்கள் கலங்கிடக் காணப்பட்டனர். சிலர் அழுதும் விட்டனர். இதுவரைக்கும் இதுபோன்றதொரு உணர்வு மேலோங்கிடத்தாம் இருந்ததில்லை என்று பலரும் கூறினர்.

தமது தாயக உறவுகளுக்காகத் தொடர்ச்சியாக உதவிவரும் மக்கள் இந்த நிகழ்விலும் தம்மாலான பங்களிப்பை, தமது பையில் எவ்வளவு காசு மிகுதியாக இருந்ததோ, அத்தனையையும் தமது தாயக உறவுகளின் பசிதிர்க்க வழங்கிவிட்டே சென்றனர். போட்டிருந்த நகைகளைக்கூட ஒரு குடும்பம் கொடுத்துவிட்டுச் சென்றது. வீடுசெல்லும் போது தம்மிடம் எந்தப்பணமும் இல்லாமலே பலர் சென்றனர்.

தியாகதீபம் திலீபன் அண்ணா ஒரு இலட்சிய நெருப்பாக இருந்து எம்முள் அந்த இலட்சியத்தின் நெருப்பை ஏற்றிவிட்டுள்ளார் என்பது அந்த 40க்கும் மேற்பட்ட இளையவர்களின் முகங்களில் சாட்சியாக ஓளி விட்டது. இது முடிவல்ல இதுவே தான் நமது தமிழீழ தேசம் விடுதலையடையவும், தொடர்ந்து அதைக்கட்டியெழுப்பவும் நாம் ஒன்றிணைந்து செயற்படவைக்கப்போகும் உந்துசக்தி என்று உறுதிபூண்டு இளையவர் தமது உண்ணா நோன்பை 30 மணித்தியால்ங்கள் கழித்து முடித்துவைத்தனர்.

“நீங்க எல்லாரும் தான் இனி எங்களுக்கு.....” என்று ஒரு பெரியவர் இளையவரிடம் சொல்லக்கேட்கக்கூடியதாய் இருந்தது. கனடாவாழ் தமிழீழமக்களுக்கு நம்பிக்கையொளியாய் காணப்பட்டனர் அந்த இளையவர்கள்.

http://seithy.com/breifNews.php?newsID=741...egory=TamilNews

உண்மை உணர்வோடு பங்கெடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்

நன்றி உறவுகளே.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு மிக்க தமிழ் சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் உணர்வுபூர்வமான செயற்பாடாக தங்களை அதில் பங்களித்திருந்த இளையோர் சமுதாயத்துக்கு வாழ்த்துக்கள்.

நன்றி உறவுகளே!

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் எந்த சமுதாயமோ?

கலியாண ஆசை வந்திட்டுது... அது தான்.... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதத்தில் பங்குபற்றிய கனேடியத் தமிழ் இளையோருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

உண்ணாவிரத்தில் பங்குபற்றிய, நேரில் சென்று ஆதரவளித்த எமது மக்களுக்கு எமது நன்றியை

மனதார தெரிவிக்கிறோம்...

புலம் பெயர்ந்த மக்களிற்கு ஒரு விதமான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளீர்கள்...

இந் நிகழ்வுகள் மற்றைய நாடுகளிலும் சுழற்சிமுறையாக தொடரவேண்டும்.... நிச்சயம் ஈழம் மலறும்....

பெரும் மாற்றத்தை இந் நிகழ்வுகள் கொண்டுவரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே நாள் பல்வேறு இடங்களிலும் நிதிசேகரிப்புக்காக கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

'தியாகி திலீபன் அண்ணாவினது ஒரே ஆசை, ஒவ்வோர் தமிழ் நெஞ்சமும் அண்ணன் படையின் கீழ் ஒன்றாய் நின்றெழ வேண்டும் என்பதுதான்.

ஒற்றுமை ஒற்றுமை...என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். உண்ணாநோன்பில் பங்கு பற்றிய எங்கள் உறவுகளுக்கு நன்றி.

தொடர்ந்தும் எங்கள் செயற்பாடுகளின் மூலம் கனடிய அரசுக்கு ஈழச்சமுதாயத்தின் ஒரே விடியல் தமிழீழம் ஒன்றே என்பதை உணரவைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.