Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் புதிய அரசியல் அணி உருவெடுப்பு ஈழத்தமிழருக்கு விமோசனம் கிடைக்குமா?

Featured Replies

இலங்கைத் தமிழர்களின் அவல நிலையை உணர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த உண்ணாவிரத நிகழ்ச்சி, புதிய அரசியல் அணி மாற்றத்துக்கு வகை செய்திருக்கிறது என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் வெளியான தகவல்கள் :

மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில். புதிய அரசியல் அணி

மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்தக் கூட்டணியிலிருந்து பா.ம.க. முதலில் விலக்கப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கசிஸ்ட் கட்சி ஆகியவை விலகின.

இந்தியக் கம்யூனிஸ்ட் ஏற்பாடு செய்த உண்ணாவிரதத்துக்கு அ.தி.மு.க., தே.மு.தி.க ஆகியவை ஆதரவு தெரிவிதன. மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகி நிற்கும் பாட்டாள் மக்கள் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலுவான மாற்று அணி உருவாக காத்திருக்கின்றனர்.

இந்த மூன்று கட்சிகளின் விலகலால் தமிழகத்தின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுவிழந்து நிற்கிறது. இப்போது இந்த அணியில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மட்டுமே பெரியதாக உள்ளன.

தங்களுக்கு எதிராகப் பிற கட்சிகள் இணைந்து அணி அமைத்துவிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதால்தான், தமிழகத்தில் மும் முனைப் போட்டி ஏற்பட வேண்டும் என்று திட்டமிட்டு தே.மு.தி.க.வைக் கடுமையாக விமர்சனம் செய்கிறது தி.மு.க.

1998 மக்களவை பொதுத்; தேர்தல் முடிவுகளை வைத்து ஆய்வு செய்தால், அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க, ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்து அணி அமைத்தால் மக்கவைப் பொதுத் தேர்தலில் கணிசமான இடங்களை அந்த அணி பெற்றுவிடும் வாய்பிருப்பது தெரிகிறது.

இந்த முறை பா.ஜ.கவை விட இடதுசாரிகளுடனான கூட்டணியைத்தான் அ.தி.மு.க தலைமை விரும்புகிறார். எனத் தெரிகிறது.

'புதிய அரசியல் அணி மாற்றத்துக்காக நாங்கள் இந்த உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்வில்லை. இலங்கையில் தமிழ் இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவது குறித்து உண்மையிலேயே மனம் வேதனைப்பட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

'இலங்கை ஜனாதிபதி புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் தமிழ் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார், இதை சர்வதேசச் சமூகம் நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசோ, தமது பக்கத்தில் உள்ள தீவில் நடக்கும் அப்பட்டமான மனித உரிமைகள் மீறலைக் கூட காணாதது போல மௌனம் சாதிக்கிறது.

'இலங்கை அரசின் மனித உரிமகள் மீறலை வெளிக்கொணரத்தான் உண்ணாவிரதப் போராட்டமே தவிர, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான உள்நோக்கம் எதுவும் இல்லை.' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டதால், தி.மு.க தன் பங்குக்கு மயிலை மாங்கொல்லையில் 6ம் திகதி பொதுக் கூட்டம் நடத்தப் போகிறது என அறிவித்திருக்கிறது.

கருணாநிதி மத்திய அரசுடன் அதுவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவுடன் நெருங்கிய அரசியல் தொடர்பு வைத்திருப்பவர்.அதைப் பயன்படுத்தி, 'இலங்கை அரசை பொறுப்போடு நடந்துகொள்ளச் சொல்லுங்கள், தமிழ் இனத்தை

அழிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று கூறினாலே போதுமானது. அதை விடுத்து, மயிலை

மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி' என்று பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கருத்து தெரிவிக்கிறார்.

மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை எதிர்கொள்ள வலுவான அரசியல் அணி

உருவாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. அந்த அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடதுசாரிகள், பா.ம.க, ம.தி.மு.க அகிய கட்சிகள் இடம் பெறும் என்று இப்போதே சொல்லிவிட முடியாது என்றாலும், வலுவான அணி ஏற்பட வேண்டு என்ற சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு இந்த உண்ணாவிரதம் வழிவகுக்கக்கூடும்.

நன்றி : சுடர் ஒளி

...இதனிடையே அதிமுகவை போன்றே மதிமுகவினரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவும் வரவில்லை.... (நன்றி : யாகூ தமிழ்)

உண்ணாநிலைப் போராட்டம் முடிவடையும் மாலை நேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.கே.சிவாஜிலி்ங்கம், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஆகியோர் கலந்து உரையாற்றினர் (நன்றி : புதினம்)

ஈழத்தமிழருக்காக தமிழக கட்சித் தலைவர்களின் முழக்கம் :

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழக கட்சிகள் ஒரே குரலில் முழங்க வேண்டும். - வீரமணி

ஈழத்தமிழருக்காக ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் ஒருநாள் பொது வேலைநிறுததம் செய் முன்வருக. - திருமாவளவன்

ஈழத் தமிழருக்கு உடன் உதவாவிட்டால் மத்திய அரசை தமிழகம் மன்னிக்காது - பண்ருட்டி ராமச்சந்திரன்

***

Edited by இணையவன்
*** செய்தி பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

***

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்? [14. Nov. 2007 - 07:11]

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்? மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது.

உதயன் வைகோவிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறது? அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா? அப்படி விலகினால் விரைவில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் கட்சிக்கு உதயன் எத்தனை தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்கும்? மதிமுக சார்பில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும்? இவைகளை உதயன் உலகத் தமிழர்களுக்கு விளக்குமா?

ஜெயலலிதா கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தூங்கும் போதும் சிந்திக்கின்ற ஒருவர். அவர் கலைஞரின் இரங்கல் கவிதையை வைத்து ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்ப முனைகிறார். இதை கலைஞர் சரியான முறையில் எதிர்கொள்வார். இதற்குள் வைகோவை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவாவது சட்டப் பிரச்சனையைத்தான் கிளப்பினார். ஆனால் கலைஞரோடு கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியனர் என்ன செய்தனர்?

கலைஞர் இரங்கல் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் விட்டார்களா? மனித குலமே வெட்கப்படக்கூடிய ஒரு ஈனச் செயலைப் புரிந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்செல்வனின் வீரச்சாவை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இவ்வாறான காட்டுமிராண்டிகளோடு கூட்டணி வைத்திருப்பதற்கு கலைஞர் உலகத் தமிழர்களுக்கு பதில் சொல்வாரா?

வேண்டாம். எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவரும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அமைக்கின்ற கூட்டணிகளுக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பலம் வாய்ந்த கூட்டணியில் தமிழீழத்திற்கு ஆதரவான ஒரு கட்சி இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. வைகோ தன்னுடைய தமிழீழ ஆதரவுக் குரலை சற்றும் தொய்வின்றி எழுப்புகின்றார். அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம்.

Thanks: sabeshan

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

த‌மிழர்க‌ள் இன‌ப்படுகொலை‌க்கு ம‌த்‌திய அரசு உதவு‌கிறது: வைகோ!

வ‌ன்‌னி‌க் காடுக‌ளி‌ல் ப‌சி, ப‌ட்டி‌‌னியா‌ல் த‌மிழர்க‌ள் செ‌த்து மடி‌‌கி‌ன்றன‌ர் எ‌ன்று‌ம் இ‌ந்த கொடுமையை தடு‌த்து ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசு மு‌ன்வர‌வி‌ல்லை எ‌ன்று‌ம் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்படுகொலை‌க்கு ம‌த்‌‌திய அரசு உத‌வு‌கிறது எ‌ன்று‌‌ம் ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ஈழ‌த் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணக்கோரி தமிழகம் முழுவதிலும் இந்திய கம்யூனிஸ்‌ட் கட்சி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ பேசுகை‌யி‌ல், ‌இல‌ங்கை‌யி‌ல் மூதாதைய‌ர்க‌ள் ‌வா‌ழ்‌ந்த ம‌ண்ணை ‌வி‌ட்டு ‌‌பி‌ரி‌ந்து த‌மிழர்க‌ள் அக‌திகளாக வா‌ழ்‌கி‌ன்றன‌ர். ‌விடிய‌ல் எ‌ன்று ‌பிற‌க்கு‌ம் எ‌ன்ற அவ‌‌ர்களி‌ன் ஏ‌க்க‌ம், உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை நோ‌க்‌கி ‌திரு‌ம்‌பி உ‌ள்ளது.

இ‌ந்த குர‌ல் செ‌விடா‌கி போன ம‌த்‌திய அர‌சி‌ன் கா‌தி‌ல் ‌விழு‌ந்தாலு‌ம் க‌ண்டு கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள். எ‌ந்த இன‌ம் அ‌ழி‌க்க‌ப்ப‌‌ட்டா‌லு‌ம், அதை கா‌க்க வே‌ண்டியது கா‌ந்‌தி ‌பிற‌ந்த இ‌ந்‌திய நா‌ட்டி‌ன் கடமை. த‌மிழ‌ர்களை ‌நிர‌ந்தரமாக அடிமை இரு‌ளி‌ல் த‌ள்ள ராஜப‌க்சே அரசு துடி‌க்‌கிறது. உலக‌த்த‌ி‌ல் அ‌ழிவு நட‌ப்பதை தடு‌க்க ஐ.நா அமை‌ப்பு‌ம் ம‌னித உ‌ரிமை ஆணையமு‌ம் உருவா‌க்க‌ப்‌ப‌ட்டன.

த‌மிழ‌ர் வாழு‌ம் பகு‌தி‌க்கு‌ள் அவ‌ர்க‌ள் செ‌ல்ல ‌சி‌றில‌ங்க அரசு மறு‌த்‌து‌வி‌ட்டது. த‌ன்னா‌ர்வ அமை‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் தொ‌ண்டு ‌‌நிறுவன‌ங்க‌ளை ‌‌மிர‌ட்டி வெ‌‌ளியே‌ற்‌றி ‌வி‌ட்டன‌ர். இதனா‌ல் வ‌ன்‌னி‌க் காடுக‌ளி‌ல் ப‌சி, ப‌ட்டி‌‌னியா‌ல் த‌மிழர்க‌ள் செ‌த்து மடி‌‌கி‌ன்றன‌ர். இ‌ந்த கொடுமையை தடு‌த்து ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசு மு‌ன்வர‌வி‌ல்லை. த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்படுகொலை‌க்கு ம‌த்‌‌திய அரசு உத‌வு‌கிறது.

த‌மிழ‌ர் பகு‌திகளு‌க்கு உணவு, மரு‌ந்து போ‌ன்றவ‌ற்றை ‌பிரதம‌ர் அனு‌ப்பாம‌ல் இரு‌ப்பத‌ற்கு, முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌திதா‌ன் காரண‌ம். பத‌வி‌க்காக ம‌த்‌திய அரசை ‌மிர‌ட்டு‌ம் அவ‌ர், ஏ‌ன் இத‌ற்காக செ‌ய்ய‌வி‌ல்லை. ‌சி‌றில‌ங்க அரசு‌க்கு உளவு சொ‌ல்லு‌ம் வேலையை இ‌ந்‌திய கட‌ற்படை செ‌ய்‌கிறது.

இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படவில்லை. ‌சி‌றில‌ங்க கடற்படையினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் இருந்து ‌சி‌றில‌ங்காவுக்கு ஆயுத‌ங்க‌ள் கொடுக்கக்கூடாது என்ற நிலையை அரசியல் கட்சிகள் உருவாக்கவேண்டும். தனது சொந்த நாட்டில்தான் இனப்படுகொலையை செய்கிறேன் என்று சி‌றில‌ங்க அதிபர் ராஜபக்சே தப்பித்துக்கொள்ள முடியாது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தும் காலம் ராஜபக்சேவுக்கு வரும். இலங்கை‌த் தமிழர்கள் கவலையில் நாங்கள் பங்கேற்போம். உங்கள் கண்ணீரை துடைக்க எங்கள் கரங்கள் நீளும். இந்த போராட்டம் ஒரு திருப்பத்தை உருவாக்கி உள்ளது. உங்கள் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக இருப்போம் எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0810/03/1081003002_1.htm

***

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.