Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர் படுகொலையை தடுக்க பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியப் பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

"இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்' என்ற வாசகத்துடன் இலட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

www.tamilwin.com

இந்தியப் பிரதமர் தலையிட வலியுறுத்தி லட்சக்கணக்கில் தந்தி: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2008, 05:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பதகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இனவெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

"இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்" என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

மன் மோகன்சிங்குக்கு அனுப்பினால் ஏதாவது செய்வார என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழ் நாட்டு மக்களே ஈழத்தமிழர்களை காப்பதென்பது உங்கள் கைகளிலேயே அதனால் இன்னும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இன்னும் வலு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடமே தாமதியாது முயற்ர்ச்சி எடுங்கள்

உண்ணாவிரதத்திற்கு சேர்ந்த கூட்டத்தைக் கண்டு கருணாவும், ஜெயாவும் கிடுகிடுத்துப் போய் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கினம் போல.

ஜானா

தமிழர் தவிப்பு தீர பிரதமருக்கு தந்திகள் குவியட்டும்! முதல்வர் கருணாநிதி அவசர அழைப்பு

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகளை குவிக்கும்படி முதல்வர் கருணாநிதி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது, அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏராளமான தமிழர்கள் உயிரிழப்பதால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.இப்பிரச்னையில், அனைத்துக் கட்சிகளும் இலங்கை அரசுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ளன. சில தினங்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு கட்சியினர், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

தேசியப் பிரச்னையாகக் கருதி : எதிர்க்கட்சியினர் இப்பிரச்னையை கையில் எடுத்தது மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கவும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க., இப்பிரச்னையை பிரதமர் மட்டத்தில் எழுப்பி ஏன் முடிவு காணக்கூடாது என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்தின் போதும், அதற்கு முன் மீனவர்கள் சுடப்பட்ட போதும் முதல்வர் கருணாநிதி தன்நிலையை வெளிப்படுத்தினார். அத்துடன் பிரதமருக்கும் அதை நேரடியாகத் தெரிவித்தார்.தற்போது, இலங்கையில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, இந்த விஷயத்தை தேசியப் பிரச்னையாகக் கருதி , மத்திய அரசு, இலங்கை அரசின் போக்கில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையாக, "தமிழர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு லட்சக்கணக்கில் அவசர தந்தி அனுப்ப வேண்டும்' என்ற அழைப்பை முதல்வர் கருணாநிதி நேற்று விடுத்துள்ளார்.

தி.மு.க., தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இடைவிடாது நடைபெறும் ராணுவ தாக்குதல்களில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தாரை பாதுகாக்க வேண்டும்.அங்கே உடனே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கை தமிழர் பிரச்னைக்கு சுமுக தீர்வு கண்டு, அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில், இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியா மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல், இந்த இனவெறி படுகொலை தொடர மேலும் மேலும் இடம் கொடுத்துவிடாத அளவுக்கு வழி காண வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும் , அபாய அறிவிப்பு போன்றதுமான இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்: இலங்கை ராணுவத் தாக்குதல் - தமிழ் இனப் படுகொலை - தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிடுமாறு வேண்டுகோள்.இவ்வாறு தி.மு.க., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலைக்குப் பிறகு இந்திய மக்கள் மத்தியிலும், மத்திய அரசின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்னையில் நேரடியாக தலையிடுவதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவம் தன் தாக்குதலில் முன்னேற்றம் கண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

திருப்தி அளிக்கவில்லையோ: அதனால், முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோளில், "தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அபாய அறிவிப்பு போன்றது' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், பலமுறை சென்னைக்கு வந்து, முதல்வரிடம் மத்திய அரசின் நிலையை விளக்கியதுண்டு. இந்த சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோள், இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு சற்று திருப்தி அளிக்கவில்லையோ என்று கருத வைத்திருக்கிறது.

ஆதாரம் தினமலர்

கலைஞரின் இந்த அறிக்கையே இந்திய மத்திய அரசுக்கு தமிழகத்தின் நிலையை மறைமுகமாக தெளிவுபடுத்தவே!! கலைஞருக்கும் பல இடர்கள் இருக்கின்றன, நாம் அதனை புரிந்து கொள்வோம்! நன்றிகள்.

கலைஞர் இதை விட ஆக்கபூர்வமாக ஈழத்தமிழர்களின் படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க முடியும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் மோகனுக்கு நாலைஞ்சு தந்தியடிக்கப்போறன் :icon_mrgreen:

யார் மோகன் என்றார் யாழ்கள நிர்வாகியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.