Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை: கருணாநிக்கு , இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உறுதி .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கக் கோரி பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புமாறு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து இன்றுகாலை முதல்வர் கருணாநிதியை, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து முதல்வர் கருணாநிதி, பிரதமரிடம் புகார் கூறினார். இலங்கை ராணுவத்தின் தாக்குதலிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத் தடுத்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்டுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் தெரிவித்த அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

இலங்கையில் இடம்பெற்றுவரும் இராணுவத் தாக்குதலிலிருந்து இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவேண்டுமென வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகளை அனுப்புமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நேற்று கோரிக்கை விடுத்திரந்தார்.

இதனையடுத்து, இன்று காலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியிருந்தார். இதன்போது இராணுவத்தினர் நடத்திவரும் இனப்படுகொலை குறித்து முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரிடம் புகார் கூறியதுடன், இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட கருணாநிதி, இதனைத் தடுத்து நிறுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், புடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவரை அழைத்துக் கண்டனம் தெரிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் கருணாநிதி தெரிவித்த அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு உறுதியளித்தார்.

http://www.tamilseythi.com/tamilnaadu/manm...2008-10-06.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நிறைவேற்று அதிகாரங்கொண்ட மத்திய அரசின் அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டு பூர்வாங்க வேலைத்திட்டங்களும் தொடக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா திடீரென்று தமிழக அரசினதும் ஏனைய கட்சிகளினதும் நெருக்குவாரத்தினால் ஆரம்பித்த வேலைத்திட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திப்போட முயல்வது தமிழரல்லாத இந்திய மத்திய புலனாய்யுத்துறை, கொள்கை வகுப்பு அதிகாரிகளினிடத்தில் எரிச்சலையும் முணுமுணுப்பையும் உண்டாக்கியுள்ளதாக அறியவருகின்றது.

இது தொடர்பாக சில அதிகாரிகள் தாம் தொடக்கிய வேலையில் தடங்கல்கள் ஏற்படுமானால் இராஜினாமாச் செய்யவும் தயாராயிருப்பாதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசினால் தமிழரல்லாத இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவந்த சுகபோக வசதிகளுக்கு மாற்றீடாக தாம் இலங்கையில் தமிழினப் படுகொலையை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்து தருவோம் என்று இவர்கள் வாக்குக் கொடுத்துவிட்டதால் இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று இவர்கள் அடம்பிடிப்பதாகவும் தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

காலம்காலமாக அந்தந்த சூழ்நிலைகளில் பதட்டங்களைத் தவிர்க்க, இப்படியான வாக்குறுதிகள் வழங்குவதும், பின்னர் அதைக் கைவிடுவதும் மத்திய அரசில் இருந்து நாம் பெற்ற உண்மைகள். கொடுக்கின்ற வாக்குறுதிகளை எழுத்தில் பெறுங்கள். அது தான் ஒரளவாவது பலனளிக்கும்.

அடுத்த முறை சிங்கள அரசுக்கு உதவுவது பிடிபடும் வரை, உங்கள் உணர்வுகள் இந்த வாக்குறுதியால் முடக்க நினைத்துள்ளது மத்திய அரசு.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தின் பக்கம் வருமா புதுடில்லி? - புதுடில்லி காட்டும் ?பம்மாத்து? நடவடிக்கை!!

ஜ வியாழக்கிழமைஇ 9 ஒக்ரேபர் 2008 ஸ ஜ உதயன்(ஆசிரியர் தலையங்கம்)

தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.சுய கட்டுப்பாட்டுடன் இலங்கை அரசு நடந்துகொள்ள வேண்டும்.தமிழர்களிடையே அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற மனநிலைக்குத் தீர்வு காண ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.- இவ்வாறெல்லாம் இலங்கை அரசை வற்புறுத்தியிருக்கின்றது இந்தியா.புதுடில்லியில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவரை கடந்த திங்களன்று அழைத்து இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மேற்படி இந்தியாவின் கருத்து நிலைப்பாட்டைக் காட்டமான வார்த்தைகளில் எடுத்துரைத்தார் என இந்தியாவில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் இந்தச் சீற்றத்திற்கு இலங்கையில் பதில் - அல்லது சமாளிப்பு - என்னவென்பது இப்பத்தி எழுதப்படும் வரை தெரியவரவில்லை; வெளியாகவில்லை.இலங்கை அரசின் நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர்,அதன் பிரதிபலிப்பு இந்தியாவுக்குக் கோடிகாட்டப்படும் எனநேற்றுஎதிர்பார்க்கப்பட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.