Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?

தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்? 42 members have voted

  1. 1.

    • 3) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்
      9
    • 2) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்
      24
    • 1) சாதகம் பார்த்து
      4
    • 4) வேறு வழிகளில்
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

பெரும்பாலும் அன்புத் தேவைக்காகத்தான் பலரும் துணை தேடுகிறார்கள்.. அந்த வகையில் கணவன் - மனைவி ஆனால் தான் அது கிடைக்கும் என்பது எப்போதும் சரியாக அமைவதில்லையே... கண்வன் - மனைவிக்குள் அமைதியின்மை வந்து உள்ள அன்பும் பரிமாறப்படாதபோது... அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அன்பைக் கொடுக்க ஒரு இடமாக ஏன் ஒரு சமூக சேவை நிலையம் இல்லை....??! இப்படியான பலர் "சிங்கிள் மதர், பாதர்" என்று இங்கு மேற்கிலையே இருக்கிறார்கள்... இப்போ சுனாமியால் பலர் தங்கள் துணையை இழந்துள்ளார்கள்...இவர்களுக்க

  • Replies 144
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சாதகம் பார்த்து திருமணம் செய்யிற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. காதலித்துச் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் என்பது நல்ல திட்டம் தான் ஆனால் இது நடைமுறையில் சாத்தியப் படாத மற்றும் எங்கள் கலாச்சாரத்துக்கு ஒத்துவராத விடயம். அதால சிறந்த வழி காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்.

சாதகம் பார்த்துதான் இப்போதும் பெரும்பாலான திருமணங்கள் ஈழ தமிழரிடையே நடக்கின்றன. ஆணா பெண்னோ ஒருவர் சாதகம் பார்க்காமல் திருமணம் செய்ய விரும்பினாலும் மறுதரப்பு அப்படி செய்ய ஒத்துழைக்க வேண்டுமே.

காதலித்து திருமணம் செய்து வாழ்தல் நல்ல வழிதான் ஆனால் காதலிப்பத்தற்கு ஒருவரை தெரிந்திருக்க வேண்டும் புரிந்துணர்வு வேண்டும் இதற்கு ஆண் பெண் பேசி பழக சமுகம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லையே?

  • தொடங்கியவர்

இதெல்லா வழிகளிலும் நடந்தே

சரிவராததுகளும் இருக்கு

சரி வந்ததும் இருக்கு

எல்லாம் விதி?

அப்படியும் நடக்கின்றதுதான் ஆனால் அதற்காக விதியே என்று இருந்து விட முடியுமா? ஒருவர் தலைகவசம் (கெல்மட்) அணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது விபத்தில் தலையில் காயமடைந்து இறந்து விடுகின்றார். அந்த சம்பவத்தை வைத்து தலை கவசம் அணிந்தால் என்ன அணியாவிட்டால் என்ன என்ற முடிவிற்கு வர முடியுமா? நம்மால் முயன்ற வரை கவசம் அணிந்து விபத்தின் பாதிப்புகளை தவிர்த்து கொள்ளலாம் அல்லவா? அது போல் திருமணம் செய்ய முன்பு வாழ்க்கை துணை பொருத்தமானவரா என்று அறிந்து கொள்வது நல்லது. சாதகம் பார்ப்பதில் இதை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்

இதென்ன மதன் புதிசாய் இருக்கு..?? :wink:

உண்மையிலே தெரியாதா தமிழினி? பலர் அதற்கு வாக்களித்திருக்கின்றார்கள். மேற்குலகில் இது நடப்பது தானே? Living Together Before Marriage என்று சொல்வார்களே?

  • தொடங்கியவர்

வாழ்க்கைக்கு துணை...அதாவது நீங்க கருதிற... பெடியனுக்கு பெட்டை... பெட்டைக்கு பெடி... அவசியம் தானா... ஏன் ஒரு மனிதன் தனித்து இந்த உலகி வளமாக தொந்தரவுகள் இல்லாம வாழுறது கஸ்டமா...இல்ல உங்களுக்குப் பிடிக்கவில்லையா... சின்னனில இருந்து என்ன துணையாவா வந்தம் பூமிக்கு வாழ...தனியத்தனியத் தானே வந்தம்...! இடை நடுவில... ஏன் இந்தத் துணை என்று சுமையை ஏத்துறீங்க... அது அவசியம் தானா சொல்லுங்க...! :wink: :P :idea:

தனித்தும் வாழலாம் அதற்கு நல்ல மன உறுதி வேண்டும். அத்துடன் தனித்து வாழ்வதில் நமது சமுதாயத்தில் பல சிரமங்கள் இருக்கின்றன, சேர்ந்து வாழ்வதில் சுமையேதும் இல்லை என்பது என் கருத்து.

சாதகம் பார்த்துதான் இப்போதும் பெரும்பாலான திருமணங்கள் ஈழ தமிழரிடையே நடக்கின்றன. ஆணா பெண்னோ ஒருவர் சாதகம் பார்க்காமல் திருமணம் செய்ய விரும்பினாலும் மறுதரப்பு அப்படி செய்ய ஒத்துழைக்க வேண்டுமே.

காதலித்து திருமணம் செய்து வாழ்தல் நல்ல வழிதான் ஆனால் காதலிப்பத்தற்கு ஒருவரை தெரிந்திருக்க வேண்டும் புரிந்துணர்வு வேண்டும் இதற்கு ஆண் பெண் பேசி பழக சமுகம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லையே?

சிலர் இப்பவும் பழமைவாதம் பேசிக்கொண்டிருந்தாலும் காலப்போக்கில அவர்கள் எல்லாம் மாறிவிடுவார்கள். இப்போது ஆண்பெண் கதைத்து பழகிறத தப்பாய் யாரும் எடுப்பதில்லை. ஆனால் காதல் என்று வரும்போதுதான் பிரச்சினையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள. இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு இதெல்லாம் மாறிவிடும் என்று நம்புகிறேன். எப்ப இந்த மூடநம்பிக்கைகளும் சாதியமும் இல்லாமற் போகுதோ அப்பத்தான் காதற் திருமணத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்.

இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு....அது மேற்கில் இருந்து கிழக்கு வரை இருக்கு... அதையும் போக்கினால் நல்லது...கதைக்கிறதால கற்புப் போயிடும் என்ற சனங்கள் இருக்கத்தான் செய்யுதுகள்..கற்பென்பது தனி நபர் ஒழுக்கம்...ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது...அதுவும் ஆறறிவு படைத்த மனிதனை மனிதனாக காட்ட அவசியமும் கூட...! அது சாதாரணமாக ஆணும் பெண்ணும் கதைப்பதால் பறிபோயிடாது...அவரவர் தங்கள் தங்கள் ஒழுக்கதுக்கான எல்லைகளை மீறாத வரை...! சிலர் அப்படி எல்லை மீற எண்ணுவோரையும் மீறாமல் வழி நடத்தக் கூடிய பக்குவத்தில் இருப்பார்கள்...சிலர் அதைக் கடந்து இருப்பார்கள்...! எனவே தனி நபர்தான் தீர்மானிக்க வேண்டும்...தனது எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை...!

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் இருவரும் மனதால் தம்மைத் தாமே புரிந்து கொண்டு காதலித்து... திருமணம் ஆகிய பந்தததுள் வந்து இல்லறத்தை நடத்துவதே பாதுகாப்பானதும் சிறந்ததும் ஆகும்....! :idea:

இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு....அது மேற்கில் இருந்து கிழக்கு வரை இருக்கு... அதையும் போக்கினால் நல்லது...கதைக்கிறதால கற்புப் போயிடும் என்ற சனங்கள் இருக்கத்தான் செய்யுதுகள்..கற்பென்பது தனி நபர் ஒழுக்கம்...ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது...அதுவும் ஆறறிவு படைத்த மனிதனை மனிதனாக காட்ட அவசியமும் கூட...! அது சாதாரணமாக ஆணும் பெண்ணும் கதைப்பதால் பறிபோயிடாது...அவரவர் தங்கள் தங்கள் ஒழுக்கதுக்கான எல்லைகளை மீறாத வரை...! சிலர் அப்படி எல்லை மீற எண்ணுவோரையும் மீறாமல் வழி நடத்தக் கூடிய பக்குவத்தில் இருப்பார்கள்...சிலர் அதைக் கடந்து இருப்பார்கள்...! எனவே தனி நபர்தான் தீர்மானிக்க வேண்டும்...தனது எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை...!

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் இருவரும் மனதால் தம்மைத் தாமும் ஒருவரை ஒருவரும் புரிந்து கொண்டு காதலித்து... திருமணம் ஆகிய பந்தததுள் வந்து இல்லறத்தை நடத்துவதே பாதுகாப்பானதும் நீடித்து நிலைக்ககூடிய அன்பைப் பெற சிறந்ததும் ஆகும்....! :idea:

  • தொடங்கியவர்

எப்ப இந்த மூடநம்பிக்கைகளும் சாதியமும் இல்லாமற் போகுதோ அப்பத்தான் காதற் திருமணத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்.

சாதகம் போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிந்தாலே போதும். சாதீயம் இலைமறைகாயாக தான் இருக்கின்றது. ஈழத்தமிழைடையே இந்தியா அளவுக்கு வர்க்க பேதம் ஏதும் இல்லை.

  • தொடங்கியவர்

இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு

என்னை கேட்டால் ஆண் பெண் சாதாரணமாக பேசி பழகும் அளவிற்கு நமது சமூகம் பக்குவமடையவில்லை என்றே சொல்வேன். பெற்றோர் வற்புறுத்தலால் சாதகம் பார்த்து மணம் புரியும் இளையோர்கள் கூட திருமணத்தின் பின் சந்தேகப்படுவதாக தெரியவில்லை, பழமைவாத கருத்துக்களில் ஊறி இருப்போரும் பொருந்தா திருமணம் செய்வோரும்தான் பெரும்பாலும் சந்தேகப்படுகின்றார்கள்.

  • தொடங்கியவர்

ஓஅப்ப அவைவேற்றுகிரக வாசிகளா என்ன கணறாவியோ நினைத்தாலே அருவருப்பா இருக்கு நான் வேலை செய்யிற இடத்திலை ஒருத்தர் என்னை காதலித்து தர்ம அடி வாங்கினவர்.அப்பமற்றவர்கள் பிடித்துவிட்டார்கள் பின்னர் உனக்கு விருப்பமில்லாட்டி நாகரீகமாக மறுத்திருக்கலாமே ஏன்காட்டான்மாதிரி அடித்தனி என்றனர் நான் சொன்னேன் எங்கள் சமுகத்தில் உப்பிடி கேட்பதே அனாகரீகம் அதில் பிறகென்ன நாகரீகம் வேண்டி கிடக்கு ஊராய் இருந்தால் நடக்கிறதே வேறை என்று.அன்றிலிருந்து அந்த வெள்ளை எட்நின்றுதான் வணக்கம் சொல்லுவார் :P

அவரை மறுத்துவிட்டு விஷயத்தை முடித்திருக்கலாம் அடிப்பது அளவுக்கு மீறியது என்பது எனது கருத்து. அவர் அதனையும் கேட்காமல் விட்டிருந்தால் புகார் செய்திருக்கலாம். அடிவாங்கியவர் சட்ட ரீதியாக அதை எதிர் கொண்டிருந்தால் பிரைச்சனைக்குள் மாட்டியிருப்பீர்கள்.

சாதகம் போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிந்தாலே போதும். சாதீயம் இலைமறைகாயாக தான் இருக்கின்றது. ஈழத்தமிழைடையே இந்தியா அளவுக்கு வர்க்க பேதம் ஏதும் இல்லை.

இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும் சாதகத்தை விட சாதியத்தில் எமது சமூகம் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவே எண்ணுகிறேன். காதலித்திருந்தால் சாதகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆனால் சாதி ரொம்ப முக்கியம் இன்று பலர் கதைப்பதை இன்றும் என்னாற் கேட்க முடிகிறது.

"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

  • 1 month later...
  • தொடங்கியவர்

மண மாக்கட்

"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே.

என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது என்பது எளிதில் இயலாத காரியம் (?) . ஆனால் அதுவெல்லாம் இப்போ அக்கறைப் படத்தேவை இல்லாத விடயம்.

அதைவிட மேல் எழுதியவற்றிற்கும் இனி வரப் போவதற்கும் சம்பந்தமே இல்லை. "பிறகேன் எழுதுகிறாய்'' என்று கேட்பீர்கள். வேறொன்றும் இல்லை "எங்கள்" திருமணம் குறித்து மிகவும் குளம்பிப்போய் உள்ளதால் உங்களையும் ஒரு "குளப்பு" குளப்பி விடுவோமே என்பதே என் நோக்கம். குளப்பம் என்னவெனில் எங்கள் திருமணங்கள் "மலிவானதாகப்" போய்க்கொண்டு இருக்கிறதா என்பதுதான்.

திருமணம் என்பது இரண்டு முறைகளின் ஊடாகத்தான் நடைபெறுகிறது. முதலாவது காதல் இரண்டாவது காதல் அல்லாதது (டேய். . .டேய். . . ) காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர) காதல் அல்லாத திருமணங்கள் இருக்கிறதல்லவா அதில் தான் பெரும் சிக்கல் இருக்கிறது. அதாவது மாப்பிள்ளையினைத் தெரிவு செய்யும் முறை அல்லது பொம்பிளையை தெரிவு செய்யும் முறை. இதில் அனேகமாக பெற்றோரினது தலையீடு மட்டுமே காணப்படும் ஆனால் பிள்ளைக்கு புகைப்படம் காண்பிக்கப் படும் வாய்ப்பும் உண்டு.

மாப்பிள்ளை வெளிநாடா, உள்ளுரா, என்ன வேலை செய்கிறார் என்பதுதான் முதற் கட்டக் கேள்விகளாக இருக்கும். பின் பெற்றோர் யார்? என்ன சாதி? என்ன செய்யினம்? இப்படிக் கேள்விகள் வரும்.

ஆக குறிப்பிட்ட வயது வர ஒன்றைப் பிடித்துக் கட்டிக் கொடுத்து அவர்கள் தார்மீகக் கடமைகளை முடித்து விடவேண்டும். என்பதில் தான் அக்கறை உண்டு அவர்களுக்கு. தனிப்பட்ட அந்த இருவர் தொடர்பான அக்கறை இன்றி, சரி பேசினோம், கட்டிக் கொடுத்தோம் என்ற போக்கில் இப்போ பல திருமணங்கள் நடந்தேறுகின்றன.

எனக்குத் தெரிய திருமண நாள்வரை மாப்பிள்ளையின் முகம் தெரியாது இருந்த ஒரு பெண்ணும் இருக்கிறாள். (இப்படியானவர்கள் மிக அரிதுதான்) ஏன் என்று திருமணப் பேச்சு வார்த்தைக் காலத்திலேயே பெண்ணின் தந்தையிடம் கேட்டேன். ( பெண் நாட்டில் இருந்தவேளை) அவள் "நீங்கள் பாருங்கோ அப்பா! நான் இல்லை எண்டோ சொல்லப் போறன்'' என்று சொன்னதாகச் சொல்லி மகளைக் குறித்துப் பெருமைப்பட்டார். நான் கவலைப்பட்டேன்.

இன்று எத்தனைபேர் திருமணம் குறித்து "அக்கறையாக'' இருக்கிறார்கள். போன வாரம் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார். "இஞ்ச! ஊரில ஒரு பிள்ளை இருக்கிது எக்கவுன்ஸ் டிபாற்மென்ட் ஒண்டில வேலை செய்யுது. ஆரும் கேட்டாச் சொல்லும், இங்க வந்தாலும் வேலை செய்யிறதுக்குப் பிரச்சனை இருக்காது" என்று.

இதை அவர் சொன்னபோது நான் ஏதோ கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். அதனால் "எப்பயாவது Offerல வரேக்க சொல்லுங்கோ அப்ப பாக்கிறன்'' என்று சிரித்து விட்டு வந்தேன் (அந்தப் பெண் அவருக்கு மூன்றாவது நபராக இருந்தபடியால் நான் அப்படிப் பேசியது கோபத்தினை ஏற்படுத்தவில்லை). அவர் எனக்குப் பின்னால் வந்தவரிடம் இது பற்றிப்பேசிக் கொண்டு இருந்தார். அவர் இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் ஒரு சங்கடத்தினை எனக்கு அது ஏற்படுத்தியது.

பெண்ணோ ஆணோ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் அல்லவா அந்த உணர்வுகள் ஒன்று சேர இருக்கும் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போக வேண்டும் அல்லவா! இதை எல்லாம் குறித்து அக்கறைப் படாமல், வெறுமனே லண்டன் என்று திருமணத்திற்காக ஒரு பெண் அல்லது ஆண் இங்கு வருகிறார் ஆயின், அவர் காதல் யார் மீது? எனக்கேதோ லண்டன் மீது என்றே படுகிறது.

வாழ்க்கை வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டதா?

மனித உணர்வுகளுக்கு இருந்த மரியாதை மரணித்து விட்டதா?

இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா?

இது எங்களுக்கு மட்டும்தானா?

இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா?

இதற்கெல்லாம் பதில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீங்களும் நான் இவ்வளவு நேரமும் கூறிய அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் யோசிங்க! முடிந்தால் எனக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள்

நன்றி எல்லாளன்

  • தொடங்கியவர்

தமிழர்கள் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்? தற்போதைய திருமண முறை சரியானதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். காதலிச்சு பெற்றோர் சம்மதம் இன்றி செய்து பிறகு திண்டாடி கஸ்டப்படுறவையும் இருக்கினம். பெற்றோர் செய்து வைச்சு காதல் இல்லாமல் கடமைக்காக வாழுறவையும் இருக்கினம். :mrgreen: :mrgreen: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா முறையும் சரி எப்படியோ

இரு மனங்கள் ஒத்து

திருமணத்தில் முடிந்தால்

வினா ஏது !

விடை ஏது!

காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். :mrgreen: :mrgreen: :wink:

இது பேச்சுக்கு நன்றாகத்தான் இருக்கு ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.

  • தொடங்கியவர்

எல்லா முறையும் சரி எப்படியோ

இரு மனங்கள் ஒத்து

திருமணத்தில் முடிந்தால்

வினா ஏது !

விடை ஏது!

அதில் தான் பிரைச்சனையே இது மனம் ஒத்தது என்பதை கண்டு பிடிப்பது அனைத்து முறையிலும் முடியுமா?

இது பேச்சுக்கு நன்றாகத்தான் இருக்கு ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.

உலகம் பூராவும் இது சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கு...! தமிழ்ப் பிள்ளைகள் போல பெற்றோரும் பிள்ளைகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத்தயாரானால்..இது சாத்தியமே...! பல பெற்றோர் அப்படித்தான் இருக்கிறாங்க இன்றைய உலகில்...! பிள்ளைகளும் பெற்றோருக்கு மதிப்பளித்தல் அவசியம்... காரணம் இவர்களும் நாளைய பெற்றோர் என்பதை காதலிக்கும் போதே மனதில் இருத்த வேண்டும்... என்ன இதெல்லாம் ரைம் பாஸிங் சுத்தலுக்கு அவசியமில்ல... உண்மையா உள்ளத்தில் காதல் இருந்தால் அதோட இதுகளையும் உணர்ந்து கொள்ளுவது நல்லது...! :wink: :P :idea:

அதில் தான் பிரைச்சனையே இது மனம் ஒத்தது என்பதை கண்டு பிடிப்பது அனைத்து முறையிலும் முடியுமா?

கொஞ்சம் தியாகத்துக்கும் தயாராக வேண்டும்... மனங்களைப் புரிஞ்சு கொள்ள.....! அது ஒன்றும் இலகுவான விடயமாகத் தெரியல்ல....! :wink: :P :D :idea:

  • தொடங்கியவர்

காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். காதலிச்சு பெற்றோர் சம்மதம் இன்றி செய்து பிறகு திண்டாடி கஸ்டப்படுறவையும் இருக்கினம். பெற்றோர் செய்து வைச்சு காதல் இல்லாமல் கடமைக்காக வாழுறவையும் இருக்கினம். :mrgreen: :mrgreen: :wink:

இது காதல் திருமணத்திற்கு கீழேயே வரும். சரியான வாழ்க்கை துணையை பிள்ளைகள் தெரிவு செய்யும் போது நிச்சயமாக பெற்றோர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோம் சம்மதமும் மிக முக்கியம். வளர்த்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர்களை புறக்கணிப்பது சரியல்ல

  • தொடங்கியவர்

உலகம் பூராவும் இது சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கு...! தமிழ்ப் பிள்ளைகள் போல பெற்றோரும் பிள்ளைகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத்தயாரானால்..இது சாத்தியமே...! பல பெற்றோர் அப்படித்தான் இருக்கிறாங்க இன்றைய உலகில்...! பிள்ளைகளும் பெற்றோருக்கு மதிப்பளித்தல் அவசியம்... காரணம் இவர்களும் நாளைய பெற்றோர் என்பதை காதலிக்கும் போதே மனதில் இருத்த வேண்டும்... என்ன இதெல்லாம் ரைம் பாஸிங் சுத்தலுக்கு அவசியமில்ல... உண்மையா உள்ளத்தில் காதல் இருந்தால் அதோட இதுகளையும் உணர்ந்து கொள்ளுவது நல்லது...! :wink: :P :idea:

ரைம் பாசிங் காதலுக்கு கீழேயே வராதே .... அது வேறு வகை, நீங்கள் குறிப்பிட்ட உண்மையான காதல்தான் திருமணத்திற்கு சரியான வழி

  • தொடங்கியவர்

கொஞ்சம் தியாகத்துக்கும் தயாராக வேண்டும்... மனங்களைப் புரிஞ்சு கொள்ள.....! அது ஒன்றும் இலகுவான விடயமாகத் தெரியல்ல....! :wink: :P :D :idea:

என்ன தியாகம்? மனங்களை புரிந்து கொள்வதை விட கடினமானது உலகத்தில் வேறு இல்லை, ஆனா அது அவசியமானது

பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள் வாழ்க்கை ஆகோ ஓகோதான்.

:D:D:lol::lol:

நான் எண்டால் சொல்லுவேன் பெற்றோர் பேசி செய்யிற கலியாணம்தான் திறம்.ஏனெண்டால் {அப்பதான் எங்கடை கொமிசன் வெட்டஏலும்}

சரி இப்ப காதலிக்கிற பிள்ளைக்கு ஒரு அட்வைஸ் தயவுசெய்து லவ் பண்ணும் போது உண்மையை மட்டும் கூறுங்கள் உங்கடை இஸடத்துக்கு அள்ளி விட்டீங்கள் எண்டால் பிறகு கஸ்டம் கலியாணம் செய்தபின் யாரிடம் போய்ச் சொல்லுவியள் நீ தானே தேடி எடுத்தனி சமாளிச்சுப் போ எண்டு சொல்லுவினம்

இப்ப பேசிச் செய்யிற கலியாணங்களிலை நாங்களும் பொய் சொல்லுவம் ஆன அதிலை ஒரு ரெக்னிக் இருக்கும்

லண்டன் மாப்பிளை எண்டால் நான் போய் பெண் வீட்டுக்காரரிடம் சொல்லுவன் மாப்பிளை லண்டனிலை பாங்கிலை வேலை எண்டு ஆன என்ன வேலை எண்டு சொல்லமாட்டன் (அவர் கூட்டிற வேலை செய்பவராகக் கூட இருக்கலாம் இப்பிடி புரோக்கர்மாராலை நாசமான எத்தினயோ குடும்பங்கள் இருக்கு) இதிலை பெற்றோர் லண்டன எண்டவுடனை வாயை பிளக்காமல் தாங்களும் கொஞ்சம் விசாரிக்கவேண்டும்

ஆன இப்ப ஒரு கொடுமை என்னவெண்டால் யாழ்ப்பாணத்திலை இந்த லவ் பண்ணிற பெட்டையள் வெளிநாட்டு மாப்பிளையை கண்டவுடன் என்னமா "டாடா" காட்டிப் போறளவை. லவ் ஒரு டைம்பாஸ் ஆக மாறிக் கொண்டு வருவது கவலைகுரியது

இதையெல்லாம் விட்டுட்டு வசம்பு சொன்ன மாதிரி பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள். எல்லோருக்கும் நல்லது (எங்கடை காட்டிலும் அப்பதான் மழை பெய்யும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.