Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் - அது சுவராசியமானது.

img1081031058_1_1.jpg

அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், “தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தான். ஒரு முரு‌ங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில் சுமந்துகொண்டு இறங்கியபோது, அதற்குள் இருந்த வேதாளம் லக்க லக்கவென்று சிரித்தது.

ஏன் சிரிக்கிறாய் வேதாளமே? என்று விக்கிரமாதித்தன் கேட்க, ஏற்றுக்கொண்ட முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தா, இப்படித்தான் அன்றொரு நாள்.. என்று கூறி, ஒரு கதையை சொல்லத் துவங்கும். வேதாளத்தின் கதையைக் கேட்டு முடித்த விக்கிரமாதித்தனிடம் அந்த வேதாளம் சில கேள்விகளை கேட்கும். அந்தக் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதிலை கூறாவிட்டால் அவனுடைய தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று எச்சரிக்கும்.

கதையை நன்கு புரிந்துகொண்டு கேட்ட விக்கிரமாதித்தன், வேதாளத்தின் கேள்விகளுக்கு சரியான பதிலைத் தருவான். அவனுடைய பதிலைக் கேட்டு அசந்துபோகும் வேதாளம் அவனை பாராட்டிவிட்டு தான் குடிகொண்டிருந்த அந்த உடலை விட்டு வெளியேறி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும்... இப்படி முடியும் அந்தக் கதை.

இந்தக் கதைக்கு இன்றைக்கு என்ன அவசியம் வந்தது என்று கேட்கத் தோன்றுகிறதா? இப்படிப்பட்ட கதைகளுக்கு அடிப்படை உள்ளதா? வேதாளம் எப்படி பேசும்? என்றெல்லாம் அறிவுப்பூர்வமான கேள்விகளை எழுப்பினால் இந்தக் கதை இனிக்காது, கேள்விகளைக் கேட்காமல், அதில் கூறப்படுவதையெல்லாம் நம்பி, படித்துக்கொண்டே வந்தால் மட்டுமே சுவராசியமாக இருக்கும்.

எனவே, சொல்லுவதையெல்லாம், கதைகளையெல்லாம் நம்பும் ‘மன பக்குவம்’ உள்ள நிலையிலேயே இதையெல்லாம் படித்து நாமும் வளர்ந்துள்ளோம் என்றாலும், இன்றைக்கு நாம் இந்தக் கதைகளையெல்லாம் படித்து நமது அறிவு நிலையை உயர்த்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால், இப்படிப்பட்ட கதைகளை நம்பும் மனோ நிலை அல்லது முதிர்ச்சி இருந்தால் மட்டுமே இன்றைய உலகில் நடக்கும் பல விடயங்களை நம்மால் ‘உண்மை’யென்று நம்பி ஏற்றுக் கொள்ள முடியும்.

இராஜ தந்திரம் என்றும், பத்திரிக்கை தர்மம் என்றும் கூறிக்கொண்டு நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்திகளையும், பேட்டிகளையும் படிக்கும்போது, விக்கிரமாதித்தன் கதை படிக்கும் சிறுவர்கள் என்று நம்மை இவர்கள் நினைக்கின்றனரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

img1081031058_1_2.jpg

நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிக்கை சிறிலங்க அதிபர் ராசபக்சயை சந்தித்து, மிகுந்த சிரத்தையுடன் பேட்டி கண்டு அதனை வெளியிட்டிருப்பதைப் படிக்கும் போது வேதாளமும், விக்கிரமாதித்தனும் நடத்திய உரையாடலைப் படிக்கும் 'ஃபீலிங்' நமக்கு ஏற்பட்டது. அந்த அளவிற்கு அந்தப் பேட்டியில் ‘உண்மை’ குறட்டை ‌வி‌ட்டுக்கொண்டு உறங்கியது (தூங்கும் எதனையும் தமிழர்கள் எழுப்ப மாட்டார்கள், அது உண்மையாக இருந்தாலும் என்ற அதீத நம்பிக்கையுடன்) இருவர் நடத்திய உரையாடல் இங்குள்ளவர்களால் சிரத்தையுடன் விவாதிக்கப்பட்ட போது நமக்கு மூடில்லாமலேயே சிரிப்பு வந்தது.

http://tamil.webdunia.com/newsworld/news/c...081031058_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

"தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் மரத்திலிந்து இறங்கி அதனைச் சுமந்து கொண்டு செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து மன்னனே...." இப்பிடித்தான் அம்புலிமாமாவில் அந்தக் கதை ஆரம்பிக்கிறதாக ஞாபகம்.

"எனது கேள்விக்கு நீ தெரிந்திருந்தும் சரியான பதிலைக் கூறாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்" என்று வேதாளம் கேட்கும்.

விக்கிரமனின் இந்தச் சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

சின்ன வயதில் இக்கதையை வாசித்ததால் முருங்கைக்காய் சாப்பிட எனக்குச் சரியான பயம், வயிற்றுக்குள் முருங்கைக்காயோடு வேதாளமும் புகுந்து விடுமோவென்று. இப்போது உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு இலங்கை ஜனாதிபதியை நினைக்கும் போது வேதாளத்தின் நினைவு வந்து மிரட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.