Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம்!- ராஜபக்சே அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம்!- ராஜபக்சே அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008

கொழும்பு: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு விடுதலைப் புலிகள் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.

இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது:

பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. அவர் விரைவில் பிடிபடுவார். விடுதலைப் புலிகள் அதன்பிறகு தாங்களாகவே சரணடைவார்கள்.

இதற்கு முன்பு பிரபாகரனே ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும்.

ஏற்கனவே கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம். இதைப் போர் என்றுகூட நான் கூற மாட்டேன். ராணுவ நடவடிக்கைதான். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறோம்.

ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதை எங்களால் மறக்க முடியாது. பிரபாகரன் பிடிபட்டதும், இந்தியா விரும்பினால் அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம்.

விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை நெருங்கிவிட்டோம். அதேபோல், கிழக்கில் முல்லைத்தீவைப் பிடிப்பதற்கு முன்னேறி வருகிறோம். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மெதுவாக முன்னேறி வருகிறோம். போர் நிறுத்தம் செய்யும்போது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்வது வழக்கம். இம்முறை அப்படி நடக்கவிட மாட்டோம்.

எனவே போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் நிச்சயம் மதிக்க மாட்டார்கள். அவர்கள் முதலில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையட்டும். நாங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கிறோம்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியபோது, போர் நிறுத்தம் செய்யும்படி கோரவில்லை. அப்பாவி தமிழர்கள் நிலை பற்றித்தான் அவர் கவலை தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன், என்றார் ராஜபக்சே.

http://thatstamil

இந்தியா பின்பக்கத்தால் சிரிக்கப் போகிறது, இவரது கதையைக் கேட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு ரெண்டு தேசிக்காய் தலையில தேய்க்கணும் இல்லாவிட்டால் இன்னும் போக போக தாங்கேலாது :icon_mrgreen::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: இதில் இந்தியா சிரிப்பதற்கு எதுவுமேயில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய செய்ய விரும்பியதை சிங்கள ராணுவத்தைக் கொண்டு செய்விக்கிறது. புலிகளும் அதன் தலமையும் அழிக்கப்பட வேண்டும் என்பதும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டிருப்ப

இந்தியா பின்பக்கத்தால் சிரிக்கப் போகிறது, இவரது கதையைக் கேட்டு.

அவன் சிரிக்க போகிறான் இவன் சிரிக்க போகிறான் என்று நக்கலோடு காலம் போய்க்கொண்டு இருக்கிரது மாவிலாரில் இருந்து மன்னாரில் இருந்து இதை தானே செய்கிறோம்............

Edited by I.V.Sasi

பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. அவர் விரைவில் பிடிபடுவார்.

விடுதலைப் புலிகள் அதன்பிறகு தாங்களாகவே சரணடைவார்கள்.

அதுவரை பொறுத்திருக்காமல் ஏன் இந்த அவசர அறிக்கை?

எங்க வந்து சரணடைய வேணும் என்று சொன்னால் நல்லா இருக்கும். அரளி மாளிகை பங்கருக்குள் வந்த சரணடையலாமா?

ஜானா

மகிந்தரிற்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறன் ஏதோ கனவு கண்டு ஏதோ களவு போகப்போகுது என்டு ஒ போனாலும் பரவாயில்லை தோளிலை கிடக்கிறதை பாவிப்பன் என்டுறீங்களோ பரவாயில்லை

:wub: இதில் இந்தியா சிரிப்பதற்கு எதுவுமேயில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய செய்ய விரும்பியதை சிங்கள ராணுவத்தைக் கொண்டு செய்விக்கிறது. புலிகளும் அதன் தலமையும் அழிக்கப்பட வேண்டும் என்பதும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டிருப்ப

மகிந்தரிற்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறன் ஏதோ கனவு கண்டு ஏதோ களவு போகப்போகுது என்டு ஒ போனாலும் பரவாயில்லை தோளிலை கிடக்கிறதை பாவிப்பன் என்டுறீங்களோ பரவாயில்லை

:):lol::):):)

இனி, எல்லாத்திற்கும் சேர்த்துப் பதிலடிகள் கிடைக்கும். பொறுத்திருப்போம். :(:D

மகிந்த கோவணத்தோட கொழும்பு ரோட்டில ஓடினால் புலிகள் சரணடைவதாக அறிவித்திருக்கிறார்களாம்..!!

ஆயுதங்களை களையாவிட்டால் யுத்தத்தின் மூலம் புலிகளை மண்டியிடச் செய்வேன் - மஹிந்த ராஜபக்ஷ

ஆயுதங்களை களையாவிட்டால் யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மண்டியிடச் செய்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட அறிமுக உரையில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனாதிபதி சாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்து மாதங்களுக்குள் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தி இலங்கை குறித்து சர்வதேச ரீதியில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அமைப்புக்கள் தேசத்துரோக சக்திகளாக கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளர்.

மேலும், யுத்த நிறுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை இயன்றளவு வலுப்படுத்திக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.