Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையும் கானமும்!!

Featured Replies

  • தொடங்கியவர்

மிகவும் நன்றி. :(

இயற்கை சிரிக்கிறது அழைத்துக் களிக்கிறது

உலகின் பசுமையில் உள்ளம் திளைக்கிறது

வாழ்க்கையின் அடிப்படை கிளர்ந்து எழுகிறது

சுகங்களின் முகிழ்ப்பிற்கு உலகுதலை சாய்க்கிறது!!

http://www.esnips.com/doc/22838983-90a3-48...haku-Vilaiyaada

  • Replies 99
  • Views 10k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வசதிகள் இருந்தென்ன

வாய்ப்புகள் இருந்தென்ன

அமைதியாக இருந்தாலும்

உணர்வில்லா மரமென்று ஆயிடுமா?

உணர்வுகளைப் பகிர்ந்தளிக்க

உற்றதுணை எவருண்டு

சாற்றிவிட்டால் சந்தியிலே

உள்ளத்தையே குத்திடாரா?

http://www.esnips.com/doc/46d8262c-d220-4b...alum-Vedkamadaa

  • தொடங்கியவர்

என் அன்பில் கலந்தவளே

என் உயிரும் உன்னிடத்தில்தானே

என் அமைதியில் உலாவும் நிலவும் நீதானே

இன்னும் ஏன் கேள்வி.. என்னைப் புரிந்துகொள்!!

http://www.esnips.com/doc/b6a82466-0e9e-4c...pil-Kalanthaayo

பழைய பாடல்கள் எவ்வளவு ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை, கவிச்சுவை மிகுந்தனவும் கூட! ஏன் இப்போதய கவிஞர்கள் இப்படியெல்லாம் அழகான பாடல்களை எழுதுவதில்லை? முன்னைய கவிஞர்கள் மிச்சமில்லாமல் எல்லாத்தையும், எல்லா விதமாகவும் பாடி முடித்துவிட்டார்களா?!

:rolleyes::(

  • தொடங்கியவர்

நன்றி மல்லிகை வாசம்! :rolleyes:

பாவையே!

எத்தனை கோலங்கள் உன் கண்களில்

அத்தனைக்கும் அர்த்தம் நானா?

சொன்னால் என்ன தேனாய்?

கோதையே!

செல்லரிப்பாய் உன் நினைவுகள்

எதனால் இன்னமும் பிரிவுகள்

தேக்கிய ஆசைக்கு கதவுகளை திறந்துவிடு!!

http://www.esnips.com/doc/997660fd-488f-4e...ukkul-Eththanai

  • தொடங்கியவர்

மனிதா!

தேடித் தேடிப் படித்தாயே

ஓடி ஓடி உழைத்தாயே

போதும் போதுமென பெயர் பெற்றாயே!

உனக்கென ஒரு மணம்

உனக்கென ஒரு குடும்பம்

இன்றேல்..

நீ ஓடி என்ன? தேடி என்ன?

http://www.esnips.com/doc/eadc63cb-d94c-40...aanam-Kalyaanam

  • தொடங்கியவர்

மலரென்றல்லவா நினைத்தேன்

பூங்கொத்தென நினைத்தேனா

கிட்ட வந்தபோதுதானே தெரிகிறது

பூங்கொத்தல்ல பூஞ்சோலையென!!

அடி பெண்ணே!

இத்தனை சுகங்களையும் உள்ளடக்கி

அமைதியாக வலம்வர

உன்னால்மட்டும் எப்படி முடிகிறது?!

http://www.esnips.com/doc/baaab888-54ba-40...ththanai-Azhaku

மலரென்றல்லவா நினைத்தேன்

பூங்கொத்தென நினைத்தேனா

கிட்ட வந்தபோதுதானே தெரிகிறது

பூங்கொத்தல்ல பூஞ்சோலையென!!

கொடுத்து வைத்தவர் நீங்கள். பொதுவா அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்ற பழமொழி போல, தூரத்தில் நின்று பார்க்க நன்றாக இருக்கும். கிட்ட போய் பார்த்தால் ஓ... இவ்வளவு தானா என்றது போல இருக்கும். (நண்பர்கள் சொன்னார்கள். இது என் அனுபவமல்ல.):wub:

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்

கொடுத்து வைத்தவர் நீங்கள். பொதுவா அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்ற பழமொழி போல, தூரத்தில் நின்று பார்க்க நன்றாக இருக்கும். கிட்ட போய் பார்த்தால் ஓ... இவ்வளவு தானா என்றது போல இருக்கும். (நண்பர்கள் சொன்னார்கள். இது என் அனுபவமல்ல.):lol:

நண்பர்கள் சொல்லுறதை எல்லாம் கேட்டுக் கொண்டு எட்ட நிக்காதீங்க.. :)

  • தொடங்கியவர்

மனிதா!

நீ கற்றவை பல

அறிந்தவை பல

சாதித்தவை பல - செய்த

சாகசங்களும் பல!

விஞ்ஞானத்திலும்

அஞ்ஞானத்திலும்

விஞ்சிநிற்கும் மனிதா - உனக்கு

மனிதனாக வாழத்தெரியவில்லையே!

http://www.esnips.com/doc/27cb16ac-3596-42...herinthukondaan

  • தொடங்கியவர்

என்னவளே!

சிந்தையில் நின்று சதிராடுபவளே

விந்தைசெய்வ தென்ன?

நினைவை அழித்தாலும்

மனதில் மறையாதவளே

நீகாட்டும் மாயமென்ன?

http://www.esnips.com/doc/93050189-0a18-4e...m-Thiranthaalum

  • தொடங்கியவர்

என் உணர்வுகளின் அறுவடையே

என் உதிரத்தில் உதித்தவனே

என் உதயகாலம் நீயல்லவா

என் உதயசூரியனும் நீயல்லவா?

நீ உதைத்த மார்பும்

உனைச் சுமந்த தோளும்

உன் உயர்விலல்லவா

தம் வலி மறந்து சிரிக்கும்!!

http://www.esnips.com/doc/40e5400d-24bb-4a...-Arumpu-Malarum

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாடிகள் கட்டி கோடிகள் கொண்டு

கோட்டையில் வாழவில்லை

கொட்டில்கள் என்றாலும்

கோவிலாய் தானிருந்தோம்!

கொள்ளிவைக்க வந்தான்

கொழுத்திய கொட்டில்களுக்குள்

மண்ணாகிப் போனது கனவு

கனவாகிப் போனது வாழ்வு...

http://www.esnips.com/doc/9c737f5e-1954-4d...-Mannaakippomaa

Edited by Paravaikal

  • தொடங்கியவர்

மாடிகள் கட்டி கோடிகள் கொண்டு

கோட்டையில் வாழவில்லை

கொட்டில்கள் என்றாலும்

கோவிலாய் தானிருந்தோம்!

கொள்ளிவைக்க வந்தான்

கொழுத்திய கொட்டில்களுக்குள்

மண்ணாகிப் போனது கனவு

கனவாகிப் போனது வாழ்வு...

http://www.esnips.com/doc/9c737f5e-1954-4d...-Mannaakippomaa

பாராட்டுக்கள் பறவைகள்!

இந்தப் பகுதியில் பங்குபெற விரும்புபவர்கள், தேவையாயின் கீழுள்ள இணைப்பில் இருந்தும் பாடல்களைத் தெரிவுசெய்து இணைக்கலாம். :rolleyes:

http://www.esnips.com/user/tamilamutham

'சின்ன அரும்பு மலரும்....' பாடல் வரிகளும், இசையும் இனிமை...

  • தொடங்கியவர்

பெண்ணே!

காயில் கவர்ந்து

கனியில் களையும்

காளையரென

நினைத்தாயோ?

வீண்

போட்டியை விடுத்து

வாட்டுவதை நிறுத்து!!

http://www.esnips.com/doc/7b511a43-3417-40...le-Inippathenna

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன அரும்பு மலரும்

சிரிப்பில் சிந்தை மகிலும்

எங்கிருந்த போதும்

இதயம் உன்னை வாழ்த்து .......

..அருமையான பாடல் இதயங்கள் வாழ்த்துவதால் தான் நாம்

வாழ்கிறோம் ,நம் வாழ்வும் மலர்கிறது பாடல் பதிவுக்கு நன்றி l.

  • தொடங்கியவர்

சின்ன அரும்பு மலரும்

சிரிப்பில் சிந்தை மகிலும்

எங்கிருந்த போதும்

இதயம் உன்னை வாழ்த்து .......

..அருமையான பாடல் இதயங்கள் வாழ்த்துவதால் தான் நாம்

வாழ்கிறோம் ,நம் வாழ்வும் மலர்கிறது பாடல் பதிவுக்கு நன்றி l.

மிகவும் நன்றி! அடிக்கடி இந்தப் பக்கம் எட்டிப் பாருங்க!! :rolleyes:

மாடிகள் கட்டி கோடிகள் கொண்டு

கோட்டையில் வாழவில்லை

கொட்டில்கள் என்றாலும்

கோவிலாய் தானிருந்தோம்!

கொள்ளிவைக்க வந்தான்

கொழுத்திய கொட்டில்களுக்குள்

மண்ணாகிப் போனது கனவு

கனவாகிப் போனது வாழ்வு...

http://www.esnips.com/doc/9c737f5e-1954-4d...-Mannaakippomaa

நன்றி பறவைகள். இந்த பாடலை நெடுநாட்களுக்கு பிறகு கேட்கிறேன்.

  • தொடங்கியவர்

'சின்ன அரும்பு மலரும்....' பாடல் வரிகளும், இசையும் இனிமை...

என்ன இன்று மல்லிகை வாசத்தை காணேலை எண்டு பாத்தன்.. இருக்கிறீங்களா? நன்றி.

  • தொடங்கியவர்

அம்மா அம்மா

என்றரற்றும் என் ஓலம்

உன் காதில் விழலையோ?

பாவியெனை நீங்கி

போதுமிவ் வாழ்வென

எங்கே நீ சென்றாயோ?!

http://www.esnips.com/doc/9880c687-e650-4f...mmaa-Ammaa-Enum

பழைய முத்தான பாடல்களை எல்லாம் தேடித் தொகுத்து தருகிறீர்கள். வராமல் போயிடுவனா என்ன...?

மற்றது பாடகர்கள் ஜிக்கியும், ராஜாவும் நிஜ வாழ்வில் தம்பதிகள் என்று அறிந்தேன். உண்மையா? காயிலே இனிப்பதென்ன பாடலும் அருமை.

நன்றிகள்

  • தொடங்கியவர்

பழைய முத்தான பாடல்களை எல்லாம் தேடித் தொகுத்து தருகிறீர்கள். வராமல் போயிடுவனா என்ன...?

மற்றது பாடகர்கள் ஜிக்கியும், ராஜாவும் நிஜ வாழ்வில் தம்பதிகள் என்று அறிந்தேன். உண்மையா? காயிலே இனிப்பதென்ன பாடலும் அருமை.

நன்றிகள்

உண்மைதான். ராஜாவும் ஜிக்கியும் தம்பதிகள்தான்.

இது ஒரு உலகில் பிரபலமாக இன்றும் பலமொழிகளில் ஒலிக்கும் பாடல். கேட்டுப் பாருங்கள் அந்தத் தம்பதிகளின் குரலில்..

அன்று நான்

அன்னையைக் கேட்டேன்

எண்ணக்கோட்டைகள்

நிலைக்குமா என?

உன் எண்ணங்கள்

ஈடேறும் என்றாளே

தன் அன்பாலே

என்னை வாழ்த்தினாளே!

http://www.esnips.com/doc/8c4ffb67-64bc-46...Pennaanapothile

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவுக்கு ஒரு சபாஷ் ............

சின்ன பெண்ணான .........தமிழ் ,ஆங்கிலம் ,இன்னும் சில மொழிகளில் கேட்டு இருக்கிறேன்.

இதனால் தான் (old is gold ) என்பார்களோ .?

  • தொடங்கியவர்

நன்றி சகோதரி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.