Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்மித்து வரும் மாவீரர் நாளால் சிறிலங்கா படைத்தரப்பு கலக்கம்: "சண்டே ரைம்ஸ்"

Featured Replies

அண்மித்து வரும் மாவீரர் நாளால் சிறிலங்கா படைத்தரப்பு கலக்கம்: "சண்டே ரைம்ஸ்"

[ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 06:15 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

மாவீரர் நாள் நெருங்கி வருவதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் போரை தொடங்கலாம் என்ற கலகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடா்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது போர்முனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிப்பது என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டம் இரண்டாவது தடவையாக கடந்த வாரமும் வெற்றி பெறவில்லை.

நிதியமைச்சரும், படைகளின் பிரதம தளபதியும் அவரே.

கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் போது களமுனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் முகமாலையில் படை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படடிருந்தது.

எனினும் அது வெற்றி பெறவில்லை.

இராணுவம் தற்போது மூன்று முனைகளில் தீவிரமான நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றது.

57 ஆவது படையணி கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் நகர்வில் ஈடுபட்டு வருகின்றது.

58 ஆவது படையணி பூநகரி நோக்கிய நகர்வில் ஈடுபட்டு வருகின்றது. அது தற்போது பூநகரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மூன்றாவது களமுனையாக மணலாறு களமுனை உள்ளது.

இந்த வாரத்தில் பூநகரி அல்லது கிளிநொச்சி படையினரிடம் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

தற்காப்பு போர் மூலம் அவர்கள் இறுதி வெற்றியை இந்த வாரம் தடுத்திருந்தால், அது ஒரு பெரிய மாற்றம். அவர்கள் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்க போகின்றனர் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இது எதிர்வரும் மாவீரர் நாள் தொடர்பான அச்சங்களை அதிகரித்துள்ளன. இந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 54 ஆவது பிறந்த நாளாகும்.

மாவீரர் நாளின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொள்கை விளக்க உரையினை ஆற்றுவது உண்டு. இதன் போது விடுதலைப் புலிகள் அமைப்பு ஆற்றிய சாதனைகளையும் அவர் தெரிவிப்பதுண்டு.

அரசும் அனைத்துலக இராஜதந்திரிகளும் இந்த உரையினை உன்னிப்பாக அவதானித்து வருவது உண்டு.

மாவீரர் நாள் அண்மித்து வருவது படைத்தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு களமுனைகளுக்கு அப்பாலும் பாதுகாப்பை அதிகரித்து வருகின்றது.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. படையினரின் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பல பகுதிகள் தரை மற்றும் வான் தாக்குதல் ஆபத்துக்களில் இருப்பதாக அரசு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள முக்கிய பகுதிகளின் பாதுகாப்புக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கறுப்பு உடை தரித்த விடுதலைப் புலிகளின் அணி ஒன்று பனாமா காட்டுப்பகுதியில் தரையிறங்கி உள்ளதாக படைத்தரப்புக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

விடுதலைப் புலிகளின் இந்த அணியினரை அப்பகுதி கிராம மக்கள் அவதானித்துள்ளனர்.

மாவீரர் நாளுக்கு முன்னராக ஒரு வெற்றியை பெறும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் உத்திக்கு மாறலாம் என இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 18 நாட்களும் மிகவும் அதிக பாதுகாப்பு கொண்ட நாட்களாகவே இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

எல்லாரும் மாவீரர் நாள் வருகுதெண்டு கலங்கிப் போச்சினம் போல கிடக்கு. பூநகரி எண்டு ஒரு ஊடகம் சொல்லுது, கிளிநொச்சி யெண்டு ஒரு ஊடகம் சொல்லுது, முல்லைத்தீவைப் பிடிக்கிறம் எண்டு இன்னொரு ஊடகம் சொல்லுது. எல்லாத்திற்கும் புலிகளின்ர மௌனம்தான் காரணம்.

பூநகரி எண்டு ஒரு ஊடகம் சொல்லுது, கிளிநொச்சி யெண்டு ஒரு ஊடகம் சொல்லுது, முல்லைத்தீவைப் பிடிக்கிறம் எண்டு இன்னொரு ஊடகம் சொல்லுது.

இப்பிடி உடகங்கள்தான் சொல்லுதுகள்... ஆனால் ஆமிக்காரங்கள் சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான் நிங்கிறாங்கள் போலகிடக்கு.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி உடகங்கள்தான் சொல்லுதுகள்... ஆனால் ஆமிக்காரங்கள் சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான் நிங்கிறாங்கள் போலகிடக்கு.

சூறாவளி என்ட கொல்லைக்குள்ள உவங்கள் யாரும் இல்லை, :unsure:

இந்த முறை தலைவரின் மாவீரர்தின உரையை எல்லோரும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்திட்டு இருக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே,

ராணுவம் சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள இல்லை. மன்னாரிலிருந்து வெளிக்கிட்டு 70 கிலோ மீட்டர் கடந்து பூநகரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கிறார்கள்.

நிலமையின் தீவிரத்தை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன். பரந்தன் பிடிபட்டால் புலிகளின் வடமுனை அணிகள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு முல்லைத்தீவுக்கு வரவேண்டியதுதான்.

160,000 பேரைக் கொண்ட பலமான ராணுவத்துடன் தான் எமது போராளிகள் களமாடிக்கொண்டிருக்கிறார்கள

சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லையிலை நிக்கும் படையினர்.

map1.gif

இலங்கையில் "அடுத்த 18 நாட்கள்" பாதுகாப்பு அச்சம் மிகுந்த நாட்களாக இருக்கும்: இக்பால் அத்தாஸ் ஆய்வு

அடுத்த 18 நாட்கள் இலங்கையின் பாதுகாப்பில் முக்கிய நாட்களாக இருக்கும் என சண்டே டைம்ஸின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மாவீரர் தினத்திற்கு முன்னதாக முக்கிய வெற்றி ஒன்றை எதிர்ப்பார்ப்பர் என்ற அடிப்படையிலும் அதற்கு முன்னர் இந்த வாரத்தில் பூநகரி அல்லது கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஒன்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என படைத்தரப்பினர் நினைப்பதுமே இந்த நாட்களின் முக்கியத்துவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் படையினரால் கொல்லப்பட்ட சங்கர் என்ற சத்தியநாதனின் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளால் "மாவீரர் தினம்" அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

முதலாவது "மாவீரர் தினம்" தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால், முல்லைத்தீவு நித்தியக்குளம் வனப்பகுதியில் வைத்து அனுஷ்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்தத் தடவை மாவீரர் தினத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் தென்பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்துவர் என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பாணம பகுதிக்கு படகு மூலம் பெருமளவான தமிழீழ விடுதலைப் புலிகள் கறுப்பு ஆடைகளுடன் வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தாக்குதல்களை அதிகரிக்கப் போகிறார்கள் என்பதற்கான எதிர்வு என இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யால வனப்பகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளை விஸ்தரிக்கப்போவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த 18 நாட்கள் இலங்கையின் பாதுகாப்பில் முக்கிய நாட்களாக இருக்கப் போவதாக இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.