Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சே இந்தியா வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலைதீவு செல்லும் மஹிந்த புதன், வியாழன் புதுடில்லியில் பேச்சு - அவரோடு முக்கிய விடயங்களை ஆராய்வதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றதாம் இந்தியா

[10 நவம்பர் 2008, திங்கட்கிழமை 8:30 மு.ப இலங்கை]

மாலைதீவில் நாளை நடைபெறும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கொழும்பிலிருந்து மாலைதீவுக்குப் புறப்படும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அங்கிருந்து புதுடில்லிக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டிய பல முக்கிய விடயங்கள் குறித்து எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அவருடன் பேசித் தீர்மானங்களை எடுப்பதற்காக, இந்திய அரசியல் தலைமை, அவரது வருகைக்காகக் காத்திருக்கின்றது எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.

அண்மையில் நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமட் நஸீட் வெற்றிபெற்றார் என்பது தெரிந்ததே. நீண்ட முப்பது ஆண்டுகளாக மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கையூமிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை முகமட் நஸீட் பொறுப்பேற்கிறார்.

அவர் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிகழ்வு நாளை மாலைதீவுத் தலைநகர் மாலேயில் நடைபெறுகின்றது. அதில் பங்குபற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலைதீவுக்குப் புறப்படுகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை நாளை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து நேரடியாகப் புதுடில்லிக்குப் புறப்படுவார் என்றும் கூறப்பட்டது. ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக வங்காள விரிகுடா எத்தனங்கள்’ (b i m s t e c) உச்சி மாநாடு நாளை தொடக்கம் வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் புதுடில்லியில் நடைபெறுகின்றது.

நான்கு வருடத்துக்குப் பின்னர் நடைபெறும் இந்த இரண்டாவது b i m s t e c மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், பூட்டான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுகின்றனர்.

முதல் இரு நாட்களும் வெளிவிவகாரச் செயலாளர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலும், மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாட்டுத் தலைவர்கள் மட்டத்திலும் உச்சி மாநாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.

இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்கிறார் எனக் கூறப்பட்ட போதிலும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டிய பல முக்கிய விடயங்களை அவருடன் பேசித் தீர்மானிக்கவே அவரது வருகைக்காகப் புதுடில்லி அரசுத் தலைமை காத்திருப்பதாக விடயமறிந்த வடடாரங்கள் தெரிவித்தன.

உதயன்

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே இன்று இந்தியா வருகை-பிரமதருடன் முக்கிய பேச்சு

திங்கள்கிழமை, நவம்பர் 10, 2008

டெல்லி: 3 நாள் பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று டெல்லி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் 13ம் தேதி சந்தித்துப் பேசுகிறார். இலங்கை ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து அப்போது பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சேவிடம் பேசுவார் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடல் நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெக்கின் 3 நாள் மாநாடு டெல்லியில் 11ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உண்டாக்குவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

முதல் கட்டமாக வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று மாலை டெல்லி வருகிறார். வரும் 13 ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜபக்சே சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களையும் ராஜபக்சே சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் போரினால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், இந்தியத் தலைவர்களிடம் ராஜபக்சே விளக்குவார் எனத் தெரிகிறது.

உடனடியாக போர் நிறுத்தத்தை இலங்கை மேற்கொள்ள வேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக புலிகளும் அறிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

thatstamil.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களே உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் இந்த பேரினவாதிக்கு...........

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைகாரா பாவி அங்கை போய் நல்ல பிள்ளை ஆட்டம் நடிச்சு போட்டு .அவங்கள் எதாவது பிச்சை போடுவாங்கள் அதை வேன்டி கோன்டு வரும் :o:)

தமிழரின் குருதியில் நனைந்த சால்வையுடன் வெள்ளை வேட்டி கட்டிய அசுரன் இந்தியா வருகின்றான். நிச்சயமாக இவனின் வருகையை எதிர்த்து இந்திய உணர்வாளர்கள் கொதித்து எழுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி வந்தார் இலங்கை அதிபர்: பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா?

on 11-11-2008 16:53

தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே இன்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். பிரதமர் மன்மோகன் சிங்குடன், ராஜபக்க்ஷே நடத்தப்போகும் பேச்சுவார்த்தை ஏதும் பலன் அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழினப் ப்டுகொலையின் எதிரொலி தமிழகத்தில் உச்சக்கட்டம் அடைந்துள்ள வேளையில் இலங்கை அதிபரின் இந்திய பயணம் பல்வேறும் எதிர்பார்ப்புக்களையும் உண்டாக்கி இருக்கிறது.

பீம்டெக்ஸ்' என்று அழைக்கப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் 2-வது கூட்டமைப்பு மாநாடு, டெல்லியில் வியாழக்கிழமை நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இரவு டெல்லி வந்தார். 7 நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் நாளை இரவு விருந்து அளிக்கிறார். முன்னதாக நாளை காலை முதல் கட்டமாக 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் பங்கேற்கும் ராஜபக்சே, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இலங்கை அதிபர் மற்றும் இந்தியப் பிரதமரின் சந்திப்பில் ஈழப்பிரச்சனைக்கு முடிவு ஏதும் எட்டப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது வழக்கம்போல் சந்திப்பு, கை குலுக்கல், விருந்து, விடை பெறுதல் என்று ஆகிவிடுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.

தமிழக முதல்வரின் எம்பி.க்கள் ராஜினாமா நாடகம் போல் இதுவும் போய்விடக் கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

அதிகாலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெண்டு மூன்று சிவப்பு சால்வை வங்கி போர்த்திவிடுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.