Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழர்களுக்கு வாய்க்கரிசி'-இதுதாண்ட இந்தியா

Featured Replies

கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.

· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ - இது பழமொழி அல்ல.

· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.

· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.

· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.

· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.

· ‘இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.’ -கையாலாகாத டாக்டரின் வசனம்.

· “அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்.”

பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.

· “தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்” என்று ராஜபக்சே சொல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.

இதுதாண்டா இந்தியா.

http://www.tamilseythi.com/kaddurai/india-2008-11-11.html

-- வே.மதிமாறன்

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப இந்துசமூக புத்தி.

இதுக்கு என்ன மண்ணுக்கு இந்து மதத்தை இழுக்கின்றார். தங்களுடைய தேவைகளை இதற்குள் புதைக்க மதிமாறன் போன்றவர்கள் முயல்கின்றனர். அவர்களும் நூல்களும் தங்களுடைய எரிச்சலைக் கொட்டத் தான் பயன்படுகின்றனே அன்றி, அதில் சமூக நோக்கு இருந்ததில்லை.

மதிமாறன், இதில் பிராமண சமூகத்தை குறிப்பிட்டு தூற்றவில்லை. ஒட்டு மொத்த இந்து சமயத்தினையும் வம்புக்கு இழுக்கின்றார் எக் காரணமும் இன்றி. இந்து சமய சமூகம் மட்டுமே, ஈழத்தமிழரிற்கு துரோகம் இழைப்பது போல காட்ட முயல்கின்றார். இத்தகைய அவதூறு இந்த 'தரம் கெட்ட வார்த்தை' பிரயோகங்களாலான கட்டுரையை மேலும் கேவலப்படுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தோடு உங்களுக்குப் பிரச்சனை என்றால் நேரே வாருங்கள் வாதாடிப் பார்க்கலாம். ஆனால் தமிழீழப் போராட்டத்தினுள் இந்துமதம், திராவிடம், பிராமணி, ராமசாமி எதையும் இழுக்காதீர்கள். அதற்கான காலமும் நேரமும் இதுவல்ல. எமக்குப் பகைவர்கள் தேவையில்லை. நண்பர்கள் தான் தேவை.

:( என்ன கொடுமை சரவணன்...

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்....

யாருக்கு அளவோ அவங்களே எடுத்து மாட்டிக்குங்கோ.....வரட்டா...

மம்மி....... :(:(

உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.

உண்மைதான், இப்போது புலம் பெயர்ந்த நாடுகளில் ஊரில் செத்த உறவினர்கள் திவசம் திரியை கொண்டாடுவது ஒரு விழாவாக மாறி வருகின்றது. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்டபம் வடகைக்கு எடுப்பதும் இதர செலவுகளும் என்று செலவிடும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தால் அது மனதை திருப்திப்படுத்துவதாக இருக்கும். இவ்வாறான விசேசங்களில் போட்டி நிலமைதான் மிகவும் வருந்தத்தக்கது. யார் சிறப்பாக செய்தார், யார் அதிக பணம் செலவளித்தார் என்ற அடிப்படையில் போட்டி நிலையை உருவாக்குகிறார்கள். உண்மையில் இவைகள் இறந்தவரின் ஆன்ம சாந்தி என்ற பெயரில் சுய தம்பட்டம் அடிப்பதும், ஏனைய மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதும் மிகவும் வேதனைக்குரியது.

இதன் முலம் இந்தியா என்ன சொல்ல வருகிறது என்றால் ஈழத்தமிழன் அனாதை இல்லை அவனுக்கு வாய்க்கரிசியாவது போட நான் இருக்கிறேன் என்று............

உண்மைதான், இப்போது புலம் பெயர்ந்த நாடுகளில் ஊரில் செத்த உறவினர்கள் திவசம் திரியை கொண்டாடுவது ஒரு விழாவாக மாறி வருகின்றது. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்டபம் வடகைக்கு எடுப்பதும் இதர செலவுகளும் என்று செலவிடும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தால் அது மனதை திருப்திப்படுத்துவதாக இருக்கும். இவ்வாறான விசேசங்களில் போட்டி நிலமைதான் மிகவும் வருந்தத்தக்கது. யார் சிறப்பாக செய்தார், யார் அதிக பணம் செலவளித்தார் என்ற அடிப்படையில் போட்டி நிலையை உருவாக்குகிறார்கள். உண்மையில் இவைகள் இறந்தவரின் ஆன்ம சாந்தி என்ற பெயரில் சுய தம்பட்டம் அடிப்பதும், ஏனைய மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதும் மிகவும் வேதனைக்குரியது.

அண்மையில், என் நெருங்கிய உறவில் ஒருவர் தன் 75ஆவது வயதில் இறந்தார். அவர் ஊரில் நல்ல விலாசமானவர் (கைதடி). அவரின் ஆண்டு துவசம் இங்கு, பெரிய மண்டபம் எடுத்து நிறைய பேரை அழைத்து செய்தனர் . அப்படி செய்த மகன்களில் ஒருவருடன் கதைக்கும் போது கேட்டேன், 'ஊரில் நல்ல உதவிகள் எல்லாம் நிறைய பேருக்கு இவர் செய்த படியால், இவ்வாறு திவசம் என்று ஒவ்வொரு வருடமும் எல்லாமே இருக்கும் நபர்களுக்கு கூப்பிட்டு உணவு கொடுப்பதனை விட ஒரு அறக் கட்டளை தாபித்து, ஈழத்தில் அனைத்தையும் இழந்த குழந்தைகளுக்கு உதவலாமே" என்று.... அவர் என்னை ஒரு முறை முறைத்து விட்டு ஒன்றும் பேசாமல் போய் விட்டார். திவசம் மட்டுமல்ல, பூ புனித நீராட்டு விழா, கல்யாண வரவேற்பு என்றும் எவ்வளவு கூத்து.. இவற்றை தவிர்க நினைத்து போகாமல் விட்டால் தனிமை படுத்தியே வெறுப்பேத்துவர். இதில் இந்துக்கள் மட்டும் அல்ல, எனைய மதத்தினரும் அடக்கம். (இசுலாமியர்கள் மிக குறைவாக இப்படி செய்பார்கள்)

Edited by NIZHALI

உங்கள் நண்பர், துவசத்துக்கு செலவளிச்ச காசை விட பலமடங்கு காசை ஈழ முன்னேற்றத்துக்கு அளித்துகொண்டிறுக்கலாம். உங்களுக்கு எப்படித்தெரியும்? நீங்கள் என் நன்பராய் இருந்து, அப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால், கழுத்தை புடித்து வெளியே தள்ளியிருப்பேன். உங்களுக்கு ஏன் உந்த மந்தபுத்தி? போனமா திண்டமா வந்தமா எண்டு இருக்காம, ஏன் உந்த போறாமை? உங்களை போன்ற தட்டினகேசுக்களால்தான், தனிமனிதசுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் எண்டு உங்களுக்கு கெட்டபேர்.

சனியன்கள்! :lol:

அண்மையில், என் நெருங்கிய உறவில் ஒருவர் தன் 75ஆவது வயதில் இறந்தார். அவர் ஊரில் நல்ல விலாசமானவர் (கைதடி). அவரின் ஆண்டு துவசம் இங்கு, பெரிய மண்டபம் எடுத்து நிறைய பேரை அழைத்து செய்தனர் . அப்படி செய்த மகன்களில் ஒருவருடன் கதைக்கும் போது கேட்டேன், 'ஊரில் நல்ல உதவிகள் எல்லாம் நிறைய பேருக்கு இவர் செய்த படியால், இவ்வாறு திவசம் என்று ஒவ்வொரு வருடமும் எல்லாமே இருக்கும் நபர்களுக்கு கூப்பிட்டு உணவு கொடுப்பதனை விட ஒரு அறக் கட்டளை தாபித்து, ஈழத்தில் அனைத்தையும் இழந்த குழந்தைகளுக்கு உதவலாமே" என்று.... அவர் என்னை ஒரு முறை முறைத்து விட்டு ஒன்றும் பேசாமல் போய் விட்டார். திவசம் மட்டுமல்ல, பூ புனித நீராட்டு விழா, கல்யாண வரவேற்பு என்றும் எவ்வளவு கூத்து.. இவற்றை தவிர்க நினைத்து போகாமல் விட்டால் தனிமை படுத்தியே வெறுப்பேத்துவர். இதில் இந்துக்கள் மட்டும் அல்ல, எனைய மதத்தினரும் அடக்கம். (இசுலாமியர்கள் மிக குறைவாக இப்படி செய்பார்கள்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.