Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக கூறும் அரசாங்கம் பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் மூலம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறது – மங்கள சமரவீர GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி ஒலிவடிவில்:

Featured Replies

கிழக்கில் ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக கூறும் அரசாங்கம் பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் மூலம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறது – மங்கள சமரவீர GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி ஒலிவடிவில்:

http://www.globaltamilnews.net/tamil_news....=2147&cat=1

அரசாங்கம் கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களை நாளுக்கு நாள் வலுப்படுத்தி, அடுத்த தேர்தலில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வாக்குக் கொள்ளையில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு தலைவரும் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் பேச்சாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக அரசாங்கம் கூறும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் மற்றும் கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் இதுவரை எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பாதுகாப்பு அமைச்சு இந்த பயங்கரவாத குழுக்களை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் மங்கள சமரவீர குற்றம் சுமத்தினாhர். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட நாளில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.

விடுதலைப்புலி பயங்கரவாத்தை போஷிப்பதற்காக சிங்கள இனவாதம் இதுவரை பாரிய பொறுப்பினை நிறைவேற்றியுள்ளது. ராஜபக்ஷ நிர்வாகத்தில் அரசாங்கத்தின் அனுசரனையுடன் இனவாதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கத்தில் இனவாதம் அடிப்படை அரசியல் கொள்கையாக மாறியுள்ளது.

இராணுவ தளபதி சரத் பொன்சேக்காவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அடிப்படை இனவாத கருத்தை கண்டிப்பதற்கு பதிலாக அரசாங்க அமைச்சர்கள் அதனை நியாயப்படுத்தி, இராணுவ தளபதியை பாதுகாத்துள்ளனர்.

கொழும்புக்கு செல்லும் தமிழர்களை பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்புக்கு வெளியாட்கள் அதிகம் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

பல நூற்றாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த தமிழர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியாட்கள் என தெரிவித்திருந்தார். இலங்கையில் வாழும் தமிழர்களை வெளியாட்கள் என கூறும் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை பிரஜையல்ல, அவர் அமெரிக்காவில் பச்சை அட்டை பெற்ற அமெரிக்க பிரஜை எனவும் மங்கள சமவீர குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டு சிங்கள இனவாதத்தை போஷித்து வரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது முஸ்லீம் மக்களுக்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் மங்கள கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லீம் பயங்கரவாதம் ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என அண்மையில் கூறியிருந்தார்.

இதனை அரசாங்கத்தில் உள்ள எவரும் இதுவரை நிராகரிக்கவில்லை. பொறுப்பற்ற இந்த கருத்தின் மூலம் பல நூற்றாண்டுகள் சிங்கள மக்களுடன் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான கருத்துக்களினால் தமிழ் பயங்கரவாத்திற்கு மேலதிகமாக முஸ்லீம் பயங்கரவாதமும் உருவாக வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் இவ்வாறான கருத்துக்கள் சர்வதேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது.

இப்படியான கருத்துக்களினால் நாளுக்கு நாள் விடுதலைப்புலிகளே பலம் பெறுவர் எனவும் மங்கள குறிப்பிட்டுள்ளார். சிங்கள – தமிழ் இனவாத மோதலுக்கு மேலதிகமாக முஸ்லீம்- சிங்கள இனவாத மோதலை ஏற்படுத்த அரசாங்கத்தில் உள்ளோர் முயற்சிக்கின்றனர் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் செய்தால் தான் பயங்கரவாதம்........அதை அரசும் அவர்களின் செல்லப்பிள்ளைகளும் செய்தால் ஜனநாயகம் என்று மங்கள சமரவீருக்கு தெறியாது போல........

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஐனநாயகத்தை அவர் நேரேபார்த்தபின்

அவர் இருக்கமாட்டார்

அதை வெளியில் சொல்ல????????

Edited by KUGATHASAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.