Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்கா அரசு தயாராகி வருகிறது: மங்கள சமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடெல்லி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்கா அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான தருணத்தை அதிபர் ராஜபக்ச எதிர்பார்த்த வண்ணமிருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கூறியுள்ளார்.

யுத்தத்தில் அரசு பெரும் பின்னடைவைக் கண்டு வருவதாகவும் போர்முனையின் உண்மைத் தகவல்களை வெளியிடுவதை அரசு தடுத்து வருவதாகவும் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

நேற்று வியாழக்கிழமை கொழும்பு ரொஸ்மிட் பிளேஸிலுள்ள மங்கள சமரவீரவின் புதிய அமைப்பான பாதுகாப்புப் பணியகத்தின் இரண்டாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

பூநகரி படையினர் வசமானதை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதன் பெருமை எமது படையினருக்கு உரியது. ஆனால், பூநகரி கைப்பற்றப்பட்டது இது முதற் தடவையல்ல. 15 வருடங்களுக்கு முன் 1993 இல் இதே நவம்பர் 15 ஆம் திகதியும் புலிகளிடமிருந்து பூநகரி கைப்பற்றப்பட்டது. அப்போதும் புலிகள் தப்பியோடுவதாக அரச ஊடகங்கள் பெரிதாக ஆர்ப்பரித்தன. பின்னர் என்ன நடந்தது. அடுத்தடுத்து பெரும் இழப்புகளை அரச படையினர் எதிர்கொண்டனர். இன்னும் எவ்வளவு தூரம் படையினர் முன்னேறினாலும் கூட இந்த யுத்தத்தில் முழுமையான வெற்றியை பெற முடியாது. இதனை மகிந்த ராஜபக்ஷ உணர்ந்தே இருக்கின்றார்.

பூநகரி வெற்றியை தமது அரசியல் இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கான உத்தியாக மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்தப் போகின்றார். டிசம்பர் 9 ஆம் திகதிக்குப் பின்னர் எந்த வேளையும் பாராளுமன்றம் கலைக்கப்படும். இதனை நான் உறுதியாகக் கூறுகின்றேன். ஆளும் தரப்பிலிருந்து பலர் வெளியேறவிருக்கின்றனர். யுத்தத்தைக் காட்டி அடுத்த தேர்தலில் மக்களாணையை கோரும் ஒரு நாடகத்தை அரசு மேடையேற்றவிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவும் இந்தியாவுக்கு சென்று பேசிய உண்மையான தகவல்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. அரசு புதுடில்லியின் அழுத்தம் காரணமாக மிக விரைவில் போர்நிறுத்தத்துக்கு தயாராகிவருகின்றது. ஜனாதிபதி அதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்த வண்ணமிருக்கின்றார்.

போர் நிறுத்தம் செய்யப்படுவதை நாம் ஒருபோதும் எதிர்க்கமாட்டோம். அதை வரவேற்கின்றோம். யுத்தத்தின் மூலம் எதுவித பயனையும் அடைய முடியாது. போர்நிறுத்தத்தை செய்து அடுத்த பணியாக சமகாலத்தில் அரசியல் தீர்வு யோசனையை அரசு முன்வைக்க வேண்டும்.

யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவே முடியாது. யுத்தத்தின் மூலம் புலிகளை முற்று முழுதாக தோற்கடிக்கவும் முடியாது. இந்த யதார்த்தத்தை அரசு உணர்ந்து செயற்பட வேண்டும்.

இந்த வாரத்தில் மட்டும் போர் முனையில் கொல்லப்பட்ட 250 படைவீரர்களின் உடல்கள் ஜயரட்ண மலர்ச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. காயமடைந்த படைவீரர்களில் 235 பேர் தேசிய வைத்தியசாலையிலும் 85 பேர் களுபோவில வைத்தியசாலையிலும், 90 பேர் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மைத் தகவல்களை பாதுகாப்பு தரப்பு வெளியிடாமல் மறைத்து வருகின்றது.

நாட்டு மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். யுத்த மாயையில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு பகீரதப் பிரயத்தனத்தில் அரசு ஈடுபாடு காட்டி வருகின்றது. ஆனால், அதில் வெற்றிகாண முடியாது என்பதை உணர்ந்த நிலையில் தான் யுத்தத்தையே காரணமாக வைத்து பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

டிசம்பர் 9 ஆம் திகதிக்குப் பின்னர் எந்தநேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். பொதுத் தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறு ஜனாதிபதியே ஆளும் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றார். ஜனவரி மாதத்துக்குப் பின்னர் பெரும் சவாலை அரசு எதிர்கொள்ளவிருக்கின்றது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டே பொதுத் தேர்தலுக்கு செல்லத் தயாராகி வருகின்றது எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

http://tamilwin.com/view.php?22OpDcc3nW34d...9E2e2ILL3b37Gue

எல்லாம் உண்மைதான் ...

ஆனால் இந்தியா மத்திய அரசின் அழுத்தம் அல்ல நான் முன்னர் குறிப்பட்டபடி பெரும் இழப்புகள் அல்லது பிடித்த இடங்கள் இழப்பு ஆகியனவை மாத்திரமே துரிதமாக போலி, தற்காலிக, போர் நிருத்த அறிவிப்புகளுக்கு காரணமாகலாம்?

எல்லாம் உண்மைதான் ...

ஆனால் இந்தியா மத்திய அரசின் அழுத்தம் அல்ல நான் முன்னர் குறிப்பட்டபடி பெரும் இழப்புகள் அல்லது பிடித்த இடங்கள் இழப்பு ஆகியனவை மாத்திரமே துரிதமாக போலி, தற்காலிக, போர் நிருத்த அறிவிப்புகளுக்கு காரணமாகலாம்?

ஆனாலும் நிபந்தனைகள் இருக்கும். எந்த அடிப்படையில் யுத்த நிறுத்தம் என அரசு தெரிவிக்கும். ஆயுதங்களைக் கைவிடல், என்ற நிலையேற்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தயாராக மாட்டார்கள். மூன்றாந் தரப்ப யார் என்பதில் குழப்பம். நோர்வேயை இந்தியா இனி மேல் அனுமதிக்குமா? அல்லது தடையை நீக்கி இந்தியா உள்வருமா? இப்படி நிறைய விடயங்களுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் எப்போதுமே தாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயாரென்று ஏற்கனவே அறிவித்தல் விடுத்தாயிற்று. இனி சிங்கள அரசு தான் விரும்பிய வேளையில் போர் நிறுத்தமொன்றை ஒரு மூன்றாம் தரப்பின் ஒத்தாசையுடன் கொண்டு வந்து புலிகள் மீது திணிக்க முயற்சிக்கலாம். தருணம் வரும்போது பேரம் பேச தமிழர் வசம் ஏதாவது இருந்தாலொழிய எந்தப் போர் நிறுத்தமும் தமிழருக்கு நன்மை எதனையும் கொண்டுவரப் போவதில்லை. நோர்வேயின் அனுசரணையை மீள தொடங்குவது பற்றி கலைஞர் சில வாரங்களுக்கு முன் பிரஸ்த்தாபித்திருந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. இது தவிர இந்தியா நேரடியாக புலிகளுடன் பேசவேண்டிய அல்லது உறவுகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்குடன் எதுவித தலையீடுகளையும் தான் முன்னின்று செய்யாமல் மூன்றாத்தரப்பின் அனுசரணையுடன் செய்யும் என்றும் எதிர்பார்க்கலாம்.

நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் நிகழ்ந்த தொலைக்காட்சி விவாதமேடையொன்றில் ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டின் உள்நாட்டு யுத்தம் பற்றி பேசுகையில் ஒரு நாட்டின் அமைதியைப் பேணும் முக்கிய பொறுப்பு அதன் அண்டை நாடுகளுக்குத்தான் அதிகம் உண்டு என்று பேசினார். நோர்வேயின் இந்த நிலைப்பாடு ஆபிரிக்காவுக்கு மட்டும்தானா அல்லது மற்றைய கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இது போன்ற ஒரு விவாதமேடையில் இப்படியாக அண்டை நாட்டின் பொறுப்பு பற்றிப் பேச்சு எடுக்கப்பட்டபோது நோர்வே அரச தரப்பிலிருந்து பெரிய எதிர்ப்பலைகள் கிளம்பி பல மாதங்கள் நீடித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஏனெனில் நோர்வேயின் அயல் நாடு கம்யூனிச சோவியத் இரசியா. ஐரோப்பிய நாடுகள் இப்படி ஒவ்வொருக்குமென்று வேறுவேறான அரசியல் சமையல் குறிப்புகள் வைத்திருக்கும் உண்மை தமிழர் தரப்புக்கும் தெரியாததொன்றல்ல. தமிழர் தரப்பு நோர்வேயின் நம்பகத்தன்மையையும் மீளாய்வு செய்யவேண்டிய காலம் தொலைவிலில்லை.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.