Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காயமடைந்த படையினரை அனுமதிக்க இடமில்லை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது குட்டிபையா?

இன்னுமா முகமாலையில் சண்டை?

அம்பாந் தோட்டையில் இடமிருக்கும் அங்கு கொண்டுபோய் அனுமதிக்கலாம். இதையும் நாங்களே சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு.

காயமடைந்த படையினரை அனுமதிக்க இடம் இன்றி சிகிச்சை பெறும் பொதுமக்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்: தயாசிறி:

முகமாலை மற்றும் கிளாலி மோதல்களில் படுகாயமடைந்த படையினரை அனுமதிப்பதற்காக கொழும்பு மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டததாக ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முகமாலை மற்றும் கிளாலியில் ஏற்பட்ட மோதல்களில் 250க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வாரம் மோதல்களில் உயிரிழந்த 48 படையினரின் சடலங்கள் குருணாகலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாகவும் அவற்றில் பல மரண வீடுகளுக்கு தான் சென்றதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். குருணாகலையில் மாத்திரம் இத்தனை சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, ஏனைய இடங்களில் எத்தனை சடலங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்த தகவல்கள் இல்லை.

யுத்தத்தில் வெற்றிபோல் தோல்விகளும் ஏற்படும். படையினர் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து படையதிகாரிகளிடம் இருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. போர்க் களத்தின் சரியான தகவல்களை வெளியிடாமை காரணமாக,தவறான தகவல்கள் எதிரியை சென்றடையும் எனவும் இந்த தகவல்களுக்கு சர்வதேச ரீதியிலும் சாதகமான நிலைமை காணப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

குரும்பட்டி விமானங்கள் மூலம் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்கள் இலங்கை ஊடகங்களில் வெளியாகாத போதிலும் அல்.ஜசீரா, சீ.என்.என் போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. எதிரிக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவ ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது. யுத்தத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடந்த அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில், காயமடைந்த படையினர் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை. இவை நாடாளுமன்றத்திற்கு மறைக்கப்பட்டால், எங்கிருந்து அவற்றை அறிந்து கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் சமாதான முனைப்புகளை மேற்கொண்ட போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வீ.பீயும் கீழ்த்தரமான அரசியல் ஈடுபட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி, போர் திசைத் திருப்பும் முனைப்புகளை மேற்கொள்ளாது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி ஹூ... சத்தமிடும் தொலைவில் இருப்பதாக அரசாங்கம்; கூறினாலும் அந்த ஹூ... சத்தமிடும் தூரத்தை பிடிக்க இரண்டு மாதங்கள் சென்றுள்ளதாகவும் தற்போது அதனை கைவிட்டு,திசை நோக்கிச் செல்வதாகவும் கிளிநொச்சியை விற்க மற்றுமொரு தேர்தல் வரவேண்டும் எனவும் அரசாங்கம் அப்பாவி இராணுவத்தினரின் சடலத்தின் மத்தியில் அதிகாரத்தை பெற முயற்சிப்பதாகவும் தயாசிறி குற்றம்சுமத்தியுள்ளார்.

இதேவேளை அமைச்சர்கள் எதனைக் கூறினாலும் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இது குறித்து நாளை அல்லது நாளை மறுதினம் அறிந்து கொள்ள முடியும். ஜனாதிபதிக்கு தற்போது விற்பனை செய்ய கிளிநொச்சி மாத்திரமே இருக்கிறது, கிளிநொச்சியை கைப்பற்ற வேண்டுமானால் தனக்கு வாக்களிக்குமாறு ஜனாதிபதி மக்களை கோருவார்.

கிளிநொச்சியை காண்பித்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல உள்ளது. அரசாங்கத்தினால் யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்

http://www.globaltamilnews.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.