Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி வரவேற்புப் பலகையை ஊடகங்களில் காட்டிவிட வேண்டும் என படையினருக்கு உத்தரவு: மங்கள சமரவீர

Featured Replies

கிளிநொச்சியின் வரவேற்புப் பலகையையாவது ஊடகங்களில் காட்டிவிட வேண்டும் என யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:-

தேர்தல்களை இலக்கு வைத்து படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், முன்னர் எப்போதும் இல்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வன்னிக் களமுனையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் காயமடைந்த பெருந்தொகையான படைவீரர்கள் தெற்கின் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் 160 பேரும், களுபோவில வைத்தியசாலையில் 65 பேரும்இ ராகம வைத்தியசாலையில் 90 பேரும், தேசியவைத்தியசாலையில் 250 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 700 பேரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் 700 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைவிட ஹோமாகம வைத்தியசாலையில் படைவீரர்களுக்கு சிகிச்சையளிக்கவென தனிப் பிரிவு ஒன்று ஒதுக்கப்படவுள்ளதுஇ கண்டி மற்றும் பேராதனையிலும் படையினர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்த படையினரில் பலர் பார்வைக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும், இவர்கள் கண்ணிவெடி தாக்குதல்களின் காரணமாகவே தமது கண்களை இழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவர்கள் எவ்வித முக கவசங்களும் இன்றி கண்ணிவெடி அகற்றலுக்கு பயன்படுத்தப்பட்டமை காரணமாகவே படைவீரர்கள் தமது கண் பார்வையை இழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னரும் கோத்தபாய ராஜபக்ச, இதுவே பிரபாகரன் கொண்டாடும் இறுதி பிறந்த நாள் என்று தெரிவித்திருந்தார். எனினும் இன்று இந்த கருத்து தெரிவிக்கப்பட்டு ஒருவருடமாகியும் இன்று பிரபாகரன் இன்று வழமையாகவே தமது மாவீரர் உரையை ஆற்றவுள்ளார்.

அதேநேரம் யுத்தம் தொடர்கிறது. பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். நாட்டின் பெறுமதியான் இராணுவ வீரர்களின் உயிர் காவுகொள்ளப்படுகிறது. பல வீரர்கள் அங்கவீனர்களாகக் காட்சி தருகின்றனர்.

மறுபக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பிலும் பலர் கொல்லப்படுகின்றனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும் எல்லா இடங்களிலும் பரவியுள்ளனர். அத்துடன் அவர்கள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் வான் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலிகள் - படையினர் என்ற இரு தரப்பினருக்குமிடையில் சிக்கி வடக்கு, கிழக்கு மக்களில் பெருந்தொகையானோர் நிர்க்கதியான நிலையில் தவித்து நிற்கின்றனர்.

அண்மையில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்து ஒன்றில், பிரபாகரன், நீரிழிவு நோயினால் இறப்பார் என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவே கருதவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வடமத்திய மாகாண தேர்தலின் போது கிளிநொச்சியை படையினர் பார்க்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரையில் கிளிநொச்சி கைப்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 8 ஆம் திகதி ஆம் திகதி அளவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற கதைகளுக்கு மத்தியிலேயே கிளிநொச்சியின் வரவேற்பு பலகையையாவது காட்டிவிடவேண்டும் என்ற அளவில் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காப்புறுதி நிறுவனம் ஒன்று படையினருக்கு காப்புறுதி செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து படையினருக்கு காப்புறுதி கிடைக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி பூநகரி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டபோதும் நல்லூர் அக்கரைக்குளம், குஞ்சுப்பரந்தன் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 24 ஆம் ஒரு படை அதிகாரியும் மூன்று வீரர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த படைவீரர்களை விடுதலை செய்ய அரசாங்கம் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்ஒன்றை மட்டும் உங்களிடம் கூறி வைக்கின்றேன். என்றாவது ஒரு நாள் நானும் அரச வெள்ளை வான் மூலம் கடத்தப்படலாம். கொலை செய்யப்படலாம். என மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 8 ஆம் திகதி ஆம் திகதி அளவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற கதைகளுக்கு மத்தியிலேயே கிளிநொச்சியின் வரவேற்பு பலகையையாவது காட்டிவிடவேண்டும் என்ற அளவில் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்பகுதியில் ஆக்கள் இல்லாத இடமாகப் பார்த்து கிளிநொச்சியின் பெயர்ப்பலகை ஒன்றை வைத்து புகைப்படம் எடுத்துக் காட்டலாம் தானே.

நல்ல ஐடியா கந்தப்பு!!

எல்லாவற்றையும் காட்டலாம். ஆனால்,

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

மாவீரர்தின உரையில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.