Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்கத் திட்டம் - ஜே.வி.பி எதிர்ப்பு :

Featured Replies

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்கத் திட்டம் - ஜே.வி.பி எதிர்ப்பு :

www.globaltamilnews.com

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த பல்கலைக்கழகங்கள் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வியைத் தொடர வெளிநாடு செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதன் மூலம் பாரியளவு நிதி வெளிச் செல்வதாகவும், வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கக் கூடிய வகையிலான திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

ஜே.வி.பி.க்கு சார்பான மாணவர் சங்கங்கள் கடந்த காலங்களில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பல்கலைக்கழங்களில் அனுமதி பெற்றுக் கொள்வதில் அதிக போட்டித்தன்மை காணப்படுவதாகவும், அனுமதி பெறுவோரில் 14 வீதமானோருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகுதியுள்ள ஏனைய மாணவர்கள் வெளிநாடுகளில் தங்களது உயர்கல்வியைத் தொடர முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறீலங்கா அரசின் இம்முடிவை ஆதரிக்கிறேன்.

பல்கலைக்கழக அனுமதிக்கு தகமை பெற்றும் சுமார் 85% மாணவர்கள் பல்கலைக்கழக வாசலின் அடையாளம் தெரியாமலே வீதியில் விடப்படுகின்றனர். மேற்கு நாடுகளில் இடைநிலை.. உயர்தரப் பரீட்சைகளில் சித்தியெய்தாமலே.. பல் வேறு மார்க்கங்களிலூடு பல்கலைக்கழகக் கல்வியை பெற வாய்ப்பு செய்து தரப்படுகிறது.

ஊரில் உள்ளது போன்றதல்ல மேற்குலக நாடுகளில் பல்கலைக்கழகக் கல்வி. ஊரில் பல்கலைக்கழகக் கல்வி என்பது முயற்கொம்பு. மேற்குலகில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி என்பது தாரக மந்திரம். எனவே ஊரில் உள்ளவை மேற்குலகில படிக்கிற அவையிட சொந்தக்காரரின்ர பிள்ளைகள் யுனிவேசிற்றியில கெட்டித்தனமா வெட்டி விழுத்தினம் என்று நினைக்கக் கூடாது. மேற்குலக கல்வித் திட்டம் அப்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு போட்டிப் பரீட்சைகள் என்று எதுவும் கிடையாது. எவரும் கழிவு என்று தட்டிக்கழிக்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இது பற்றி ஜே வி பிக்கு என்ன அக்கறை இருக்கிறது. எதுவும் இல்லை. அப்படி இருக்க.. அந்த 85% மாணவர்களின் சார்பாக அரசின் முடிவை வரவேற்க வேண்டும். இருப்பினும் தனியார் பல்கலைக்கழகங்கள் கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாடவிதானங்களை தயாரிப்பதும்.. பரீட்சைத்திணைக்களம்.. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.. போன்றவற்றின் கண்காணிப்பின் கீழ் பரீட்சைகள்.. பட்டங்கள் வழங்குதலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதும் அவசியம்..! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சிறீலங்கா அரசின் இம்முடிவை ஆதரிக்கிறேன்.

பல்கலைக்கழக அனுமதிக்கு தகமை பெற்றும் சுமார் 85% மாணவர்கள் பல்கலைக்கழக வாசலின் அடையாளம் தெரியாமலே வீதியில் விடப்படுகின்றனர். மேற்கு நாடுகளின் இடைநிலை.. உயர்தரப் பரீட்சைகளில் சித்தியெய்தாமலே.. பல் வேறு மார்க்கங்களிலூடு பல்கலைக்கழகக் கல்வியை பெற வாய்ப்பு செய்து தரப்படுகிறது.

ஊரில் உள்ளது போன்றதல்ல மேற்குலக நாடுகளில் பல்கலைக்கழகக் கல்வி. ஊரில் பல்கலைக்கழகக் கல்வி என்பது முயற்கொம்பு. மேற்குலகில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி என்பது தாரக மந்திரம். எனவே ஊரில் உள்ளவை மேற்குலகில படிக்கிற அவையிட சொந்தக்காரரின்ர பிள்ளைகள் யுனிவேசிற்றியில கெட்டித்தனமா வெட்டி விழுத்தினம் என்று நினைக்கக் கூடாது. மேற்குலக கல்வித் திட்டம் அப்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு போட்டிப் பரீட்சைகள் என்று எதுவும் கிடையாது. எவரும் கழிவு என்று தட்டிக்கழிக்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இது பற்றி ஜே வி பிக்கு என்ன அக்கறை இருக்கிறது. எதுவும் இல்லை. அப்படி இருக்க.. அந்த 85% மாணவர்களின் சார்பாக அரசின் முடிவை வரவேற்க வேண்டும். இருப்பினும் தனியார் பல்கலைக்கழகங்கள் கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாடவிதானங்களை தயாரிப்பதும்.. பரீட்சைத்திணைக்களம்.. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.. போன்றவற்றின் கண்காணிப்பின் கீழ் பரீட்சைகள்.. பட்டங்கள் வழங்குதலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதும் அவசியம்..! :o

நெடுக்ஸ் அண்ணா...!

எனக்கு உங்களின்ட கருத்தில உடன்பாடு இருக்கு.

இங்க இருக்கிற பல்கலைக்கழகங்களுக்கு போக கிடைக்காம தட்டுப்படுற ஆக்களுக்கு கனக்க தெரியும். நானே நிறையபேர பாத்திருக்கிறன். மொறட்டுவவுக்கு வார உந்த மோட்டு 'சி' வில 20% கூட உருப்படியா வாராது இல்லை. ஆனா, வவுனியா, கொழும்பு, யாழ்பாணம் போல கன இடத்தில எடுபட்டாம தட்டுப்படுர ஆக்கள் கொட்டை எடுக்காத புலியா இருப்பினம்...!

நெடுக்ஸ் அண்ணா...!

எனக்கு உங்களின்ட கருத்தில உடன்பாடு இருக்கு.

இங்க இருக்கிற பல்கலைக்கழகங்களுக்கு போக கிடைக்காம தட்டுப்படுற ஆக்களுக்கு கனக்க தெரியும். நானே நிறையபேர பாத்திருக்கிறன். மொறட்டுவவுக்கு வார உந்த மோட்டு 'சி' வில 20% கூட உருப்படியா வாராது இல்லை. ஆனா, வவுனியா, கொழும்பு, யாழ்பாணம் போல கன இடத்தில எடுபட்டாம தட்டுப்படுர ஆக்கள் கொட்டை எடுக்காத புலியா இருப்பினம்...!

கொட்டை எடுக்காத புலியா இருப்பினம்...!

JVP யை விடுங்கோ நீங்கள் ஏன் இப்ப பொடிவைத்து பேசுறியல்?...... கொட்டையெடுத்த புளி எண்டா காரியமில்லை, ஆனா கொட்டையெடுத்த புலி ஏண்டா கொஞ்சம் வில்லகமா இருக்கு.

இதை உண்மையான எழுத்துப்பிழயெண்டு எடுக்கலாமா?

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.