Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின் சிதைந்த அழகுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் சிதைந்த அழகுகள்.....

கவிதை......

சிதறிடும் சில்லறைபோல்

சிரிக்குமெங்கள் மழலைகள்; இன்று

மிக்’ குகளின் இரைச்சலிலே

சிரிப்பெல்லாம் இழந்து; பிஞ்சுகளின்

முகமெல்லாம் விறைத்து

தாயின் முகம்பார்த்து

விக்கி விக்கி அழுதிடுமே.....

அதைப் பார்த்து;நம்

மூச்செல்லாம் நின்றிடுமே.....

இது நாம் இன்றுகாணும்

உயிர் வாட்டும் துன்பம்

எமது ஈழத்தின் விடியல்வரை

நாமிழந்துவிட்ட இன்பம்....!

வெள்ளை ஆடைகளுக்கு

திருஸ்ரிப் பொட்டு வைச்சால் போல்

தங்கள் கறுப்பு முகங்களிலே

முத்துப்போல் பல் காட்டி

வெக்கத்துடன் சிரித்திடும்; எங்கள்

கருப்பு எலிசபத்துக்களின்

கண்களெல்லாம் ஒளியிழந்து

கருவாட்டுக் கண்களுடன்

தங்கள் கற்பும் அழிந்துபோகும்....

மறைத்து வைத்த

அழகுகளும் சிதைந்து போகும்.....

தங்கள் மரணிக்கும் உடல்கள் மட்டும்

காக்கைகளுக்கு உணவாகும் ; என்று.....

என் நாளும் பயந்தவண்ணம்

கடமைக்காய் கல்விகற்க

பாடசாலை சென்றுவரும்

எங்கள் கருப்புத் தேவதைகளின்

கவலைகொண்ட முகங்களை பார்.....

எங்கள் ஈழத்தில் சிதைந்துவிட்ட

சித்திரங்களின் சுவடைப் பார்......!

காய்ந்த தலைமயிரை

கன்னவுச்சி பிரித்திளுத்து

கண்ணாடியில் முகம்பார்த்து

கன்னிபின்னால் வலம்வரும்

நம் வீட்டு வாலிபங்கள்

ஆமியின் வரவுகண்டு

அடுக்களையில் பதுங்குவதும்.....

வெள்ளைவானின் தூக்கல்களில்

உயிர்கள் போய்;பின்

நாய்களுக்கு உணவாக

நடுவீதியில் கிடப்பதும்.....

இவையெல்லாம் நாம்

இன்றைக்கு இழந்துவிட்ட

தமிழ் ஈழத்தின் சந்தோசம்......

எப்போதோ ஒலிக்க மறுத்துவிட்ட

ஈழத்தின் பூபாளம்.....!

வலங்கள் பலவந்த; எங்கள்

வல்லிபுர ஆழ்வாரும்

பேச்சுத்துணைக்குஇன்று

தன் பக்தர்களைத்தேடுகின்றார்.....

காத்திருந்து காத்திருந்து

கண்ணுறக்கம் கொண்டுவிட்டார்......

தேரேறியன்று கோடிசனம்

பார்த்த கந்தன்; திரும்பவும்

தேரேறும் நாள்பார்த்து

தெருனோக்கி நிற்கின்றார்......

சிவதலங்கள் எல்லாம்

சிங்கத்தின் வதிவிடங்கள்.....

அவங்கள் தின்றுவிட்டு

குப்பைகொட்டும் எங்கள்

ஈழத்தின் மறைவிடங்கள்......

அன்னதானம் கொடுத்த கந்தன்

அரைவயிறு கிடந்துவிட்டு

அள்ளி ஒருமுடறு; தண்ணி

தொண்டமனாற்றில் குடிக்கின்றார்.....

மடுமாதாவும் இன்று

மகிழ்வற்று வாழுகின்றார்.......

அவரை மகிழ்வித்த மக்களின்

மரண ஒலத்தையும் கேட்கின்றார்.....

இந்தக் கலாச்சாரச் சின்னங்கள்

இன்றிருக்கும் நிலையைப் பார்......

எங்கள் ஈழத்தின் அழகெல்லாம்

சிதைந்திருக்கும் வடிவைப் பார்......!

அதிகாலைச் சந்தையிலே

அம்மாக்களின் வியாபாரம்......

அதையடுத்து மாலையிலே

அப்பாக்கள் சென்றிடுவார்

தவறணைக்கு நெடுந்தூரம்......

அண்ணாக்களின் சிகரட்டு

அதைப் பார்த்தும்

ரசித்திடுவார் சில சிட்டு.....

அக்காக்கள் மேக்கப்பு

அதைப் பார்த்து; உடைத்திடுவார்

தெருக்களிலே சியிக்கிள் ‘’வீல் கப்’’ பு.....

இத்தனை அழகுகளும்; ஏன்

இனும் சொல்லா

பல அழகுகளும்.....

சிதைந்திருக்க நாங்கள்

சிரித்தா வாழ்ந்திடுவோம்.....

இல்லை இல்லை

நாம் சிந்தித்து செயல்பட்டு

நம் உரிமைமீட்கப் புறப்பட்டு

ஒன்றாக உழைத்திடுவோம்

நம் உரிமைகளை மீட்டிடுவோம்......

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிந்தித்து செயல்பட்டு

நம் உரிமைமீட்கப் புறப்பட்டு

ஒன்றாக உழைத்திடுவோம்

நம் உரிமைகளை மீட்டிடுவோம்......

தமிழீழத்தின் சிதைந்த அழகுகள்.....மீண்டும் மலர வேண்டும்.

கவிதை அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு

தமிழ் மக்கள் எல்லோரினதும் ஒரே லட்சியம் தமிழீழம் கிடைக்கப் பெற்று எல்லா மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே...

கவிதையை ரசித்ததற்கு மிக்க நன்றி...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளங்கவி ..... நாளுக்கு நாள் உங்கள் கவி வளம் பெற்று வருகிறது. தாயக இன்பங்கள் எல்லாம்

,சீர் குலைந்து போவதை அழகாக கவி சொன்ன இளங்கவிக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்று இளங்கவி வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

கவிதையை ரசித்து கருத்துச் சொன்னதற்கு முதலில் நன்றிகள்.....

என் கவி நாளுக்கு நாள் வளம் பெறுவதாகச்சொல்லி வாழ்த்தியதற்கும் எனது நன்றிகள்.....

இளங்கவி

முனிவருக்கு

என் கவிதையை ரசித்ததற்கு மிக்க நன்றிகள்.....

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி, யதார்த்தத்தை கவி வடிவில் செதுக்கியமைக்கு நன்றி. என்ன இருந்தாலும் கடவுளை நொந்த வரிகள் எனக்கு பிடித்தவை.

வலங்கள் பலவந்த; எங்கள்

வல்லிபுர ஆழ்வாரும்

பேச்சுத்துணைக்குஇன்று

தன் பக்தர்களைத்தேடுகின்றார்.....

காத்திருந்து காத்திருந்து

கண்ணுறக்கம் கொண்டுவிட்டார்......

தேரேறியன்று கோடிசனம்

பார்த்த கந்தன்; திரும்பவும்

தேரேறும் நாள்பார்த்து

தெருனோக்கி நிற்கின்றார்......

சிவதலங்கள் எல்லாம்

சிங்கத்தின் வதிவிடங்கள்.....

அவங்கள் தின்றுவிட்டு

குப்பைகொட்டும் எங்கள்

ஈழத்தின் மறைவிடங்கள்......

அன்னதானம் கொடுத்த கந்தன்

அரைவயிறு கிடந்துவிட்டு

அள்ளி ஒருமுடறு; தண்ணி

தொண்டமனாற்றில் குடிக்கின்றார்.....

மடுமாதாவும் இன்று

மகிழ்வற்று வாழுகின்றார்.......

அவரை மகிழ்வித்த மக்களின்

மரண ஒலத்தையும் கேட்கின்றார்.....

இந்தக் கலாச்சாரச் சின்னங்கள்

இன்றிருக்கும் நிலையைப் பார்......

எங்கள் ஈழத்தின் அழகெல்லாம்

சிதைந்திருக்கும் வடிவைப் பார்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

என் கவிதையை ரசித்ததற்கும் கருத்துச் சொன்னதற்கும் மிக்க நன்றிகள்...

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.