Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொஞ்சமேனும் வெட்கமே கிடையாதா? என ராஜபக்ஸ கம்பனியினரிடம் கேள்வி கேட்கிறார் - மங்களசமரவீர:

Featured Replies

கொஞ்சமேனும் வெட்கமே கிடையாதா? என ராஜபக்ஸ கம்பனியினரிடம் கேள்வி கேட்கிறார் - மங்களசமரவீர:

சுயநல அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் யுத்தத்தினால் இராணுவத்தினர் பலிக்கடாக்களாக்கப்பட்டு உள்ளனர். யுத்தத்தினால் முப்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்க்கதி நிலையினை அடைந்துள்ளனர். எனவே, மக்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்பி பலிக்கடாக்களாக்காது பாதுகாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

படையினருக்காக பொதுமக்களிடமிருந்து பணம், பொருள் என்பனவற்றை அரசாங்கம் சேகரித்து வருகின்றது. இன்று இந்த அரசாங்கம் முப்படையினரையும் விற்றுப் பிழைக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

நேற்று வியாழக்கிழமை காலை அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு கண்காணிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த வாரம் நாம் நடத்திய பாதுகாப்பு கண்காணிப்பு குறித்த செய்திகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தன.

முதலில் ஊடகங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

பொதுவாக உலக நாடுகளிலெல்லாம் சடுதியாக ஏற்படும் அனர்த்தங்களை முன்னிட்டு முன்கூட்டியே அரசாங்கங்கள் பொது மக்களிடமிருந்தும் கூட நிதி சேகரிப்பது வழமை. ஆனால், இலங்கையிலோ தற்போதைய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக அல்லாமல் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு யுத்தத்துக்காக பொதுமக்களிடமிருந்தும் நிதிகளையும் பொருட்களையும் சேகரித்து வருகின்றது. இது விடயத்தில் அரசுக்கு கொஞ்சமேனும் வெட்கமே கிடையாதா என ராஜபக்ஸ கம்பனியினரிடம் தான் கேட்க விரும்புவதாக கூறினார்.

தொடரும் யுத்தத்தினால் இன்று முப்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர். கடந்த வார செய்தியாளர் சந்திப்பில் கூறியது போன்று தெற்கை நோக்கி முப்படையினரது பல சடலங்கள் வந்த வண்ணமுள்ளன.

பலர் காயப்பட்டுள்ளனர்; அங்கவீனமுற்றுள்ளனர். பார்வையிழந்துள்ளனர். இது பெரும் கவலையை தரும் விடயமாகும்.

இராணுவத்தினரது தேவைகளை அரசாங்கமே பூர்த்திசெய்து கொடுக்க வேண்டுமே தவிர, பொதுமக்களது பணத்தையோ பொருட்களையோ நாடக்கூடாது.

யுத்தத்துக்கு மட்டும் 177 பில்லியன் ரூபா இந்த அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் எழுச்சிக்கும் மக்களது வாழ்வாதார தேவைகளுக்குமே இப்படியொரு பெரும் தொகை பணம் செலவிடப்படுவது வழக்கமாகும்.

ஆனால், இவை யாவும் மக்களின் பணம் என்பதை மக்களே அறிவார்கள். எனினும், மக்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலுள்ளனர்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலி, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட முயன்றார். எனினும், அச்சந்திப்பை அவர்கள் நிராகரித்து விட்டனர். இறுதியில் பாப்பரசரையே மஹிந்தவால் சந்திக்க முடிந்தது.

ஸ்ரீலங்கா விமான சேவை மூலமாக தனக்கு வேண்டப்பட்ட எக்கச்சக்கமானவர்களை வகை தொகையின்றி மஹிந்த வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றார்.

இதற்கு மட்டும் 1 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இதுவும் இந்நாட்டு மக்களின் பணமே. இவ்வாறு வெளிநாட்டு சவாரி செய்வதால் இலங்கைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் என்ன நன்மை கிடைக்கப் போகின்றது?

இவ்வாரம் துருக்கிக்கு விஜயம் மேற் கொண்டுள்ள ஜனாதிபதி அந்நாட்டு ஜனாதிபதியுடன் விமானப் போக்குவரத்து சேவை தொடர்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் தானும் விமான போக்குவரத்து அமைச்சராக பணி புரிந்தவன்தான். எனினும் இவ்வாறான வீண் செலவு மிகுந்த ஒப்பந்தங்களில் தான் ஒருபோதுமே கைச்சாத்திடவில்லை.

பெரிய அமைச்சரவை உலகிலேயே பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவை இலங்கையிலேயே உள்ளது இதற்கு வேறு மக்களது பணம் சூறையாடப்படுகின்றது.

இராணுவத்தினருக்கு வேண்டிய சவர்க்கார வகைகள் கூட பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டே அனுப்பப்படுகின்றன.

இது மிகவும் கேவலமான செயலாகும்.

சந்திரிகாவின் ஆட்சியில் தான் ஆரம்பித்த வெண்தாமரை இயக்கம் மூலமாக இராணுவ கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

இராணுவ சிப்பாய்களது குடும்பங்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள், கல்வி வசதிகள், ஏனைய சகல உதவிகள் வழங்கப்பட்டன.

வெட்கக்கேடான நிகழ்வு அத்துடன், அன்று தேசிய இராணுவ தினம் என ஒரு நாள் ஒதுக்கப்பட்டு இராணுவத்தினரது பெற்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆனால், மஹிந்த ஆட்சி பீடமேறியதும் இவை யாவும் இல்லாது போயுள்ளது.

அன்று இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சகல வழிகளிலும் சகாயமளித்த நிலை இன்று தலைகீழாய் மாறி பொதுமக்களிடமிருந்து சவர்க்காரம், பற்பசை போன்றவற்றை இராணுவத்துக்கு வழங்கும் வெட்கக் கேடான நிகழ்வு மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெறுகிறது.

மக்களது பொருட்களைப் பெற்றுவாழ வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கும் கிடையாது. இராணுவத்தினர் பிச்சைக்காரர்களும் அல்லர். அவர்கள் நாட்டுக்காகவே தம்மை அர்ப்பணிக்கும் உத்தம வீரர்களாவர். எனினும், இன்று இந்த அரசு முப்படையினரை விற்று பிழைத்தே ஆட்சி நடத்துகின்றது.

உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை யுத்தத்தில் ஈடுபடும் முப்படையினருக்கு உரிய சிறந்த உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என கடந்த வார செய்தியாளர் சந்திப்பில் நான் கூறப்பட்டது. கண் பார்வையிழந்த ஏராளமான இராணுவ வீரர்கள் ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யுத்த களத்துக்கு அனுப்பப்படுபவர்களில் பெருவாரியானோர் 18, 19, 20 வயதுடைய புறொயிலர் கோழிக் குஞ்சுகளைப் போன்றோரேயாவர்.

இவர்களது சடலங்களே தினமும் தெற்கை நோக்கி வருகின்றன. பலர் அங்கவீனமுற்றுள்ளனர். (இவ்வேளையில் மங்கள எம்.பி.

கண்பார்வை இழந்து முகம் விகாரமுற்ற 19 வயதுடைய இராணுவ வீரரது படத்தை காட்டுகின்றார்) இராணுவத் தளபதி கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த பென்ஸ் காரினை வாங்கி பயணிக்கின்றார். வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றார். ஆனால், இங்கு தினமும் எமது இளம் வீரர்கள் செத்து மடிகின்றனர். அங்கவீனமுறுகின்றனர். எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாத கொடிய அரசாட்சி இதுவாகும்.

அண்மைய தகவல்களின்படி இராணுவத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் தப்பியோடியுள்ளனர். இவர்களில் பலரை மீண்டும் பிடித்து வெலிக்கடை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை மீண்டும் யுத்தத்துக்கு அனுப்பி பலியாக்கப் பார்க்கின்றது மஹிந்த அரசு.

கடந்த வாரம் கூறிய விடயங்களையிட்டு சரத் பொன்சேகா கலக்கமடைந்துள்ளார். இதற்கு முன்னர் பதவியிலிருந்த எந்தவொரு இராணுவத் தளபதியும் செய்யாத வரலாற்றுத் தவறை இவர் செய்துள்ளார். அரசியல் விவகாரங்களில் தலையிடும் உரிமை இராணுவத் தளபதிக்கு கிடையாது. ஆனால், சரத் பொன்சேகாவோ அரசியல் உள்விவகாரங்களில் வீணாக தலையிட்டு அரசியல்வாதிகளுக்கு பக்கவாத்தியம் மீட்டுகின்றார்.

பல்வேறு காலப் பகுதிகளில் இவர் இராணுவ ஒழுக்க விதிகளை மீறியதற்காக தண்டனை விதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட தகுதியற்ற ஒருவரையே இந்த அரசு இராணுவத் தளபதியாக நியமித்துள்ளது.

மும்பாய் தாக்குதல் கடந்த வாரம் இந்தியாவில் மும்பாய் நகரில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் பல அப்பாவி மக்களது உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை கவலையளிக்கிறது.

அவர்களுக்கு இவ்வேளையில் தான் எனது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துவதாக கூறினார்.

இங்கு ஓர் முக்கியமான விடயத்தை கூற வேண்டும். அதாவது மும்பாயில் ஏற்பட்ட அந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் உள்துறை அமைச்சர் பட்டீலும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள்.

'நான் கேட்பதென்னவென்றால், எமது நாட்டு அரசியல்வாதிகள் எவராவது இவ்வாறு இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் தமது பதவிகளை இராஜினாமாச் செய்வார்களா? ஒரு போதுமே கிடையாது. எம்மவர்க்கு தேவைப்படுவது தமது அரசியல் கதிரைகளைத் தக்கவைத்து, அதன் மூலம் பிழைப்பு நடத்துவதேயாகும்'

globaltamilnews.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்கே கிளஸ்ரர் குண்டு போடுகிறார் மகிந்த. ஐயோ பாவம் மங்கள சமர வீர .விபத்தை உருவாக்கி விடுவார்கள் மகிந்தவின் கொலைஞர் கூட்டம். தமிழ் மக்களுக்காக மங்கள சமர வீர பேசாவிட்டாலும் தனது தற்போதைய பரம எதிரியின் வண்ட வாளத்தை எடுத்து விட்டுள்ளார்.

நாத்தம் வெளில வருகுது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.