Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரந்தன் சமரில் 200 படையினர் பலி; 53 பேரை காணவில்லை: பாதுகாப்பு இணையத்தளம்

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திதான் இது ஆனால் உண்மை ?????????? ஏதாவது ஒரு மடங்கில் இருக்கும் போல

இறந்தவர்களின் எண்ணிக்கை = பாதுகாப்பமைச்சு இணையத்தள தரவு x ...........................

இந்தகணக்கிற்கு யாருக்காவது விடை தெரியுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரந்தன் சமரில் 200 படையினர் பலி; 53 பேரை காணவில்லை: பாதுகாப்பு இணையத்தளம்

[திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 09:05 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 படையினரின் உடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

பரந்தன் பகுதியில் உள்ள "எல்" வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போதே இம்மோதல்கள் வெடித்திருந்தன.

சில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடிகளாக உள்ளன. அங்கு விடுதலைப் புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர்.

மண் அணைகளுக்கு முன்பாக அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவை நீரால் நிரம்பியுள்ளன. செங்குத்தாக மேல் உயரும் மண் அணைகளை தாண்டுவது கடினமானது.

தொடர்ச்சியான மழை மேலதிக பாதிப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலை ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை தொடரலாம்.

மண் அணைகளை படையினர் அண்மிக்கும் வரை காத்திருக்கும் விடுதலைப் புலிகள் பின்னர் கனரக துப்பாக்கிகளை கொண்டு அவர்களை தாக்கி அழிக்கின்றனர்.

இந்நடவடிக்கைகளில் படையினரின் பல குழுக்கள் அழிவை சந்தித்துள்ளன. பரந்தன் மற்றும் நீவில் பகுதிகள் பரந்த வெளிகளை கொண்டது. எனவே அங்கு நகர்வது கடினமானது.

நாளாந்தம் இந்த மண் அணைகளை கைப்பற்றும் முயற்சியாக படைத்தரப்பு 10-15 தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. வான்படையும் நாளாந்தம் 10-15 வரையிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் எவ்வாறு பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான விடை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்ச்சியாக ஆயுத விநியோகங்களை பெற்று வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற வேளை அந்த கப்பலில் இருந்த கணிசமான ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டு விட்டது.

ஜெயரட்ன மலர்ச்சாலையில் படையினரின் 400 உடலங்கள்

அதேவேளை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நடைபெற்ற இரு நாள் மோதல்களில் கொல்லப்பட்ட 400 படையினரின் உடலங்கள் பொரளையில் உள்ள ஜெயரட்ன மலர்ச்சாலைக்கு கடந்த வியாழக்கிழமை (18.12.08) கொண்டு வரப்பட்டதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி பாதுகாப்பு இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது

puthinam

எத்தினையைப்போட்டாலும் வந்தேயாவேனெண்டு நிக்கிறான்....

எவளவு இளப்பு வந்தாப்பிறகு நிப்பாட்டுவான் மகிந்த..????

இனவாதம் எவளவு அழிவைக்கொண்டுவரும் என்டிறதுக்கு இப்ப சிறிலங்கா அரசு நல்ல உதாரணம்...

இந்த வருத்தத்துக்கு தலைவரிட்டை தான் மருந்து இருக்கு...ம்ம்ம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.