Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சிக் கனவில் தடுமாறும் அரசு - இதயச்சந்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக் கனவில் தடுமாறும் அரசு - இதயச்சந்திரன்.

கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு - சி.இதயச்சந்திரன்

ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 16:56 மணி தமிழீழம் []

வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு தடைசெய்யப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டு விட்டன.83இலும் 98 இலும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87இல், 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் புலிகள் மீதான தடையை அரை மனதோடு நீக்கியது அரசு.ஆனாலும், இம்முறை மேற்கொள்ள உத்தேசித்துள்ள "தடை' நகர்வில், பிராந்திய அரசியல் நகர்வொன்று பின்னிப் பிணைந்துள்ளது.தமிழ்நாட்டு அழுத்தத்தால், கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜி ஊடாக, புதிய காய்நகர்த்தல்கள் ஏதேனும் மேற்கொள்ளப்படலாமென ஊகிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமோ அல்லது பேச்சுவார்த்தையோ ஏற்பட வேண்டுமென்ற கருத்து நிலையோடு சர்வதேச நாடுகள் சில, இருப்பதாகக் கருதும் அரசு, அதற்கான எதிர்கால களச் சூழல் உருவாகாமல் தடுக்க, முன்கூட்டியே விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் உத்தியை கையாள முயல்வது போல் தெரிகிறது.

உலக நாடுகளை, மிகத் தந்திரமாக கையாளும், நயவஞ்சகமான இராஜதந்திர அரசியல் பொறி முறையில், சிங்களத் தலைமைகள் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளதை, இனிமேல்தான் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் உணரப்போகிறார்கள்.அரசின் மீது வீசப்படும் அம்புகளை, மிக இலாவகமாக தட்டித் திருப்பிவிடும் அரசியல் சாணக்கியத்தை விடுதலைப் புலிகள் மீது மூன்றாவது முறையாக விதிக்கப்படவிருக்கும் தடை ஊடாகவும் புரிந்து கொள்ளலாம்.

அரசுமேற்கொள்ளவிருக்கும் இத்தடை நாடகத்தால், தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் புலிகளோ புதிய பாதிப்புக்கள் எதனையும் பிரத்தியேகமாக முகம் கொள்ளப்போவதில்லை.அதேவேளை, மஹிந்த ஜனாதிபதியாக ஆட்சியில் பொறுப்பேற்ற காலம் முதல் இற்றைவரை மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்ட அரசின் செயற்பாடுகளை நோக்க வேண்டும்.மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்து, கிழக்கு மாகாண கைப்பற்றலோடு சர்வதேசம் உருவாக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு முறித்துக் கொண்டது. நோர்வே அனுசரணையோடு இயங்கிய கண்காணிப்புக்குழுவை வெளியேற்றியது.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவி மேற்குலகம் முன்னெடுத்த நகர்வுகளை, இந்திய உதவியுடன் முறியடித்தது. ஜோன் ஹோம்ஸ், லூயிஸ் ஆபர் அம்மையார் விடுத்த அறிக்கைகளும் ஆட்சியாளர்களின் போர் நிலைப்பாட்டில், மாற்றத்தினை ஏற்படுத்தத் தவறிவிட்டன.தமது இருப்பினைத் தக்க வைக்க, மேற்குலகம் முன்னெடுத்த அழுத்த நகர்வுகள் யாவற்றையும், பிராந்திய ஆதிக்க கனவில் மூழ்கியுள்ள இந்தியத் துணையோடு எதிர்கொண்ட அரசு தற்போது இந்தியாவின் இராஜதந்திர ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தயாராகிறது.

ஆயுதக் கொள்வனவிற்காக, சீனா,பாகிஸ்தான் ஆகிய நாடு களை நாடி, இலங்கை செல்லக் கூடாதென்கிற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கூற்று, முன்னாள் இராணுவ தளபதிகள் மத்தியில் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.அரசின் புலி அழி ப்பு நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கும் இந்தியா, தனது கட்டுப்பாட்டிற்குள் இலங்கை இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதே, இராணுவ மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள் ளதெனலாம்.1988 1991 வரை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் ஹமில்டன் வனசிங்க, மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக போன்றோர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அச்சுறுத்தலை கடுமையாக எதிர்த்ததோடு, எங்கும் சென்று ஆயுதம் வாங்கும் சுதந்திரம் இலங்கைக்கு உண்டெனப் பிரகடனம் செய்து ள்ளனர்.நீண்டகால நிர ந்தர நட்புச் சக்தி நாடுகளான சீனா, பாகிஸ்தானை ஒதுக்கி இந்தியாவுடன் உறவு கொண்டாடுவது தவறான இராஜதந்திரமென்பதே இவர்கள் கூறும் கனமான செய்தியின் அர்த்தமாகும்.

விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தால் பிரணாப் முகர்ஜியின் பயண வாய்ப்புக்கள் அற்றுப் போகும். அதேவேளை, அரசின் இராணுவத் தீர்வினை ஆதரிக்கும் ஒரு வழிப் பாதையிலேயே, மல்லாவிக் களமுனைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஏழு நாடுகளும் பயணிக்க நிர்ப்பந்திக்கப்படும்.வீட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.