Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை.

இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூபணமாகிறது.

பெண்களைத் தாயாக, சகோதரியாக, தெய்வமாக கருதும் தமிழ் பண்பாட்டில் வளர்ந்த எவரும் இத்தகைய ஈனச்செயலை மன்னிக்கமாட்டார்கள்.

புலம்பெயர் வாழ்மக்களே!!

மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

இலங்கையில் நடந்த சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.மன்றம் விசாரணைகளை நடத்தவேண்டும் என ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கபடுபவர்களுக்காக வழக்குகளில் வாதாட முன்வந்துள்ள வழக்குரைஞர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்சொன்ன புகார்கள் குறித்து ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஆசிய மனித உரிமை இயக்கம் ஐ.நா மன்ற தலைமைச்செயலரிடம் கோரியுள்ளன.

3012081xe6.jpg

w500.png

3012082aa2.jpg

w500.png

3012083nb9.jpg

w500.png

http://tamilwin.com/view.php?22IWnJ200jj0C...d44QQH2b02VLS3e

காங்கிரஸ்காரர்களே இதனைப் பாருங்கள், இறந்த பின்பும் இந்த பெண்பிள்ளைகள் (புலிகளாய் இருந்தாலும் இவர் பெண்பிள்ளைகளே! எனது சகோதரிகளே!) படும்பாட்டை. இரக்கம் இருந்தால் ஒருசொட்டு கண்ணீர் விடுங்கள், கோபம் வந்தால் கதறுங்கள், இல்லை காமம்தான் வந்தது என்றால் அது உங்கள்பாடு.

ஆனால் ஒரேஒரு வேண்டுகொள், இந்த ஒளிச்சித்திரத்தை மதிப்புக்குரிய அன்னை சோனியாவிடவும், அவரது மகள் பிரியங்காவிடமும் காண்பியுங்கள், முயன்றால் அந்த சிங்கள வசனத்தை நாகரீகத்துடன் மொழிபெயர்த்து அவர்களிடம் சொல்லுங்கள். பின் அவர்கள் இருவரது சொல்படி நடந்து கொள்ளுங்கள். செய்வீரா..?

இந்த ஆவணத்தை கண்டவுடன் எனக்கு அழகை வந்தது அழவில்லை. கோபம் வந்தது கொதிக்கவில்லை.

ஆனால் எனது மற்றும் எனது குடும்பத்தினரது ஒட்டுமெத்த கோபம் ஓட்டுச்சாவடியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கொட்டுவோம் அது காங்கிரஸ் கட்சிக்கு வழித்தாலும் வழிக்கும்.

****

எச்சரிக்கை;- 18 வயதுக்கு இளையவர்களும், இளகிய நெஞ்சம் படைத்தவரும் இதனை பார்க்க வேண்டாம்.

Reason for edit: **** இணைப்பு நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஏன்?

மிக அருவருப்பான செயல். உலகத்தின் கண்களுக்கு மனிதநேய அமைப்புகள் கொண்டு செல்ல வேண்டும்.

Reason for edit: **** இணைப்பு நீக்கப்பட்டுள்ளது - மோகன்

நன்றி.. நானும். பதிவு செய்ய வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் எம் சிலருக்கு நமது போராளிகள் (குறிப்பாக பெண்கள்) படும் துன்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்க்காகத்தான் இனைத்தேன்..

நீக்கியதுக்கு நன்றி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.