Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வு காண்பது கடினம்: அமெரிக்க தூதுவர் மீண்டும் வலியுறுத்தல்

Featured Replies

இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வு காண்பது கடினம்: அமெரிக்க தூதுவர் மீண்டும் வலியுறுத்தல்

[ புதன்கிழமை, 07 சனவரி 2009, 09:34.24 AM GMT +05:30 ]

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணவத் தீர்வைக் காண்பது மிகவும் கடினமானதாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.இலங்கை இதழியல் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியதையடுத்து அரசியல் தீர்வின் அவசியம் குறித்து அமெரிக்கா அறிக்கையொன்றை விடுத்தது இந்நிலையில் தீர்வு எவ்வாறு அமையவேண்டுமென்றோ அன்றேல் எவ்வளவு காலத்திற்குள் முன்வைக்கப்பட வேண்டுமெனவோ அமெரிக்க வலியுறுத்துமா என அமெரிக்க தூதுவரிடம் வினவியபோது அமெரிக்க தூதுவர் பதிலளிக்கையில் இலங்கையின் அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என அழுத்தம் கொடுக்க அமெரிக்காவிற்கோ அன்றேல் வேறு நாடுகளின் இராஜதந்திரிகளின் கைகளிலோ கிடையாது. மாறாக அது இலங்கை அரசியல் வாதிகள் மக்களுடைய அபிப்பிராயத்தை உள்வாங்கி செய்யவேண்டிய விடயமாகும் ஆனால் அரசியல் தீர்வை ஊக்குவிப்பது எமது அக்கறைக்குரிய விடயமாகவுள்ளது.

நாங்கள் பல தடவைகள் கூறியது போன்று இந்தப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வைக் காண்பது கடினமான காரியமாகும். தற்போதைய நிலையில் அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைப்பதானது இலங்கை மக்களுக்கு முக்கியமானதொன்றாகும். குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அது இலங்கையில் மோதல்களை முடிவிற்கு கொண்டு வரவும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு வருவதற்கு துணை புரியும்.

எம்ரிவி எம்பிசி ஊடகநிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அறிக்கையொன்றை வெளியிட்டது

அமெரிக்கா இதுபோன்று கடந்தகாலங்களிலும் அறிக்கை வெளியிட்டது அந்தவகையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் வெறுமனே அறிக்கைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுமா அன்றேல் இத்தகைய தாக்குதல்களை நிறுத்த வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமா என அமெரிக்க தூதுவரிடம் வினவியபோது ஊடகங்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக அரசாங்கமே விசாரணை நடத்தவேண்டும். நேற்றையதினம் எம்ரிவி மீது இடம்பெற்ற தாக்குதல் ஊடகவியலாளர்கள் மீதோ ஊடக நிறுவனம் மீதோ நடத்தப்படும் முதலாவது தாக்குதலல்ல. மோர்னிங் லீடர் பத்திரிகை அச்சகமும் கடந்தாண்டில் எரியூட்டப்பட்டிருந்தது. பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் சுதந்திரமானதும் சுயாதீனமான ஊடகத்தை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் வலுவான கோரிக்கை விடுக்கின்றோம். ஏனெனில் சுதந்திர ஊடகம் ஜனநாயகத்தின் மிகமுக்கியமான அம்சமாகும்.

thanks

tamil win

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வேறை தடை செய்தாய்ச்சு. இதிலை எங்கை போய் யாரோடை பேசுவது. அமெரிக்க தூதுவர் என்ன நினைத்து பேசுகிறார் என்றே விளங்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.