Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. விக்கிரமபாகு சீற்றம்.

Featured Replies

கிளிநொச்சி பிடித்துவிட்ட களிப்பில் அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போது இங்கு தென்னிலங்கையில் மக்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி களியாட்டம் ஆடுகின்றனர். நாட்டு மக்களோ பசி பட்டினியாலும் பொருளாதார சீரழிவினாலும் அல்லல் படுகின்றமையை மறந்துவிட்டது.

தமிழ்மக்கள் ஏன் கிளர்ந்து எழுந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரியாத நிலைலே உள்ளது. ஏழைகள் ஒவ்வொரு வித்திலும் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மோசமான பட்டினியில் தமது நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கையில் இவர்கள் சிங்கக் கொடியை ஏந்திக் குதூகலிக்கின்றனர்.

மக்கள் இவ்வளவு மோசமான நிலயிலிருக்கும் போது அதிகாரத் தரப்பினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ்கின்றனர். இன்று இந்த நாட்டில் தமிழ் மக்கள் பயத்துடனும், பீதியுடனும், விரக்தியுடனும் வாழ்கின்றனர்.

ஆனால் இவர்களோ போதையில் குதூகலிக்கினறனர். இதற்கு முன் ஜே.வி.பியின் கிளாச்சியை ஒடுக்குவதற்கு இத்தகைய ஒடுக்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சிறிமா, ஜேவிபி கிறளாச்சியாளரை அழித்து அதன் எழுச்சியை நசுக்கினார்.ஆனால் அவா மக்களை தெருக்களில் நடனமாடி உல்லாச விடுதிகளில் மதுபானங்களை அருந்திக் களிக்குமாறு கூறவில்லை.

பிரேமதாஸா 88 காலப்பகுதியில் ஏற்பட்ட எழுச்சியை ஒடுக்கினார். இதற்கு ஆயுத வன்முறையை ஆறிமுகப்படுத்தினார். ஆhனல் நடனமாடவோ, விருந்துகளை நடத்துமாறோ கூறவில்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.இவர்களால் இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா?

இன்றையகாட்டுமிராண்டிச் சமூக சூழ்நிலையில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் கூட பீதியுடனேயே வாழ்கின்றனர். முஸ்லிம் மதகுருமாரும், கத்தோலிக்க மதகுருமாரும் வீதியி;ல் இறங்கிப் போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.

இந்த நாட்டில் பல காலகட்டங்களில் வாழ்ந்த தலைவர்கள் இனவாதிகளாக நாமம் சூட்டப்ட்டுள்ளனர். பண்டாரநாயக்கா மீதும் இனவாதியென்று நாமம் சூட்டப்பட்டது. ஆனால் இவர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் இனவாத அறிக்கைகளைத் தெரிவிக்கவில்லை. இவர்களின் மந்திரிசபைகளில், அதிகாரிகள் மட்டத்தில், இராணுவ உயர் பதவிகளில் உள்ளவர்கள் இனவாத அறிக்கைகளை விட அனுமதிக்கவும் இல்லை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவோ அல்லது பிரேமதாஸாவோ கூட இந்த நிலையை அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று எல்லாம் அநாகரிகமான முறையில் தலைகீழாக நடைபெறுகின்றன.

பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாட சமூகத்தில் காட்டுமிராண்டித்தனம் மேலோங்கி நிற்கிறது. அதனாலேயே. இன்று யாவற்றிற்கும் எதிராக காலம் எம்மை ஒன்றிணைந்து போரட வைத்துள்ளது. என்று இடதுசாரி முன்னணித் தலைலவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண சென்ற புதன்கிழமை அரசுக்கு எதிரான ஐ.தே.க, ஸ்ரீ.சு.க.மக்கள் பிரிவு, முஸ்லிம் காங்., மேலக மக்கள்முன்னணி மற்றும் இடது சார முன்னணி ஆகியன ஒன்றிணைந்து கொழும்பு ஹைட்பாக்கில் நடத்திய பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது சீற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

நன்றி : சுடர் ஒளி

உலகத் தமிழர் தலைவன் என தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பச்சோந்தித் தமிழரின் பின்னால் செல்வதை விடுத்து காட்டுமிராண்டிச் சமூத்தைச் சேர்ந்தவராயினும் தமிழருக்காக வேதனைப்படும் இவர் போன்றவாகளின் பின்னாலாவது அணிதிரண்டிருந்தால் ஏதாவது சிறிதளவாவது தமிழருக்கு நன்மை கிட்டியிருக்கும்.

இவரைப் போல் இன்னும் பல நூற்றுக் கணக்கான... ஏன் ஆயிரக் கணக்கானவர்கள் சிங்கள சமூகத்தில் உண்டு. ஆனால் அவர்களின் குரல்கள் ஒரு போதுமே வெளி வருவது இல்லை. இவர்கள் அரசியலில் கோமாளிகளாக்கப் பட்டு விட்டார்கள். யுத்தம் வேண்டாம் தமிழ் மக்களிற்கு தீர்வே வேண்டும் என வலியுறுத்தி சிங்கள இசை குழு ஒன்று கூட இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பிடித்துவிட்ட களிப்பில் அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போது இங்கு தென்னிலங்கையில் மக்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி களியாட்டம் ஆடுகின்றனர். நாட்டு மக்களோ பசி பட்டினியாலும் பொருளாதார சீரழிவினாலும் அல்லல் படுகின்றமையை மறந்துவிட்டது.

தமிழ்மக்கள் ஏன் கிளர்ந்து எழுந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரியாத நிலைலே உள்ளது. ஏழைகள் ஒவ்வொரு வித்திலும் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மோசமான பட்டினியில் தமது நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கையில் இவர்கள் சிங்கக் கொடியை ஏந்திக் குதூகலிக்கின்றனர்.

மக்கள் இவ்வளவு மோசமான நிலயிலிருக்கும் போது அதிகாரத் தரப்பினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ்கின்றனர். இன்று இந்த நாட்டில் தமிழ் மக்கள் பயத்துடனும், பீதியுடனும், விரக்தியுடனும் வாழ்கின்றனர்.

இதற்கு மேல் என்னத்தை சொல்ல முடியும் ..........

அண்ணா ! சீறாதேயுங்கோ, ஆட்டத்தை மகிந்த முடித்து வைத்துவிடுவார்.

மகிந்தவின்ர ஆட்டம் இப்பத்தான் நடுவளில நிக்குது... என்னும் சூடுபிடிக்ககிடக்கு, அப்ப இன்னும் பல அறிவுஜீவுகள் தோன்றுவார்கள்.

இவரைப் போல் இன்னும் பல நூற்றுக் கணக்கான... ஏன் ஆயிரக் கணக்கானவர்கள் சிங்கள சமூகத்தில் உண்டு. ஆனால் அவர்களின் குரல்கள் ஒரு போதுமே வெளி வருவது இல்லை. இவர்கள் அரசியலில் கோமாளிகளாக்கப் பட்டு விட்டார்கள். யுத்தம் வேண்டாம் தமிழ் மக்களிற்கு தீர்வே வேண்டும் என வலியுறுத்தி சிங்கள இசை குழு ஒன்று கூட இருந்தது.

இருந்து என்ன பயன். நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்ப பயங்கரவாததத் தடைச் சட்டத்தை கொண்டு வந்து எவரையும் பேசவிடாமல் பண்ணிட்டாங்கள். லசந்த விக்கிரமதுங்க போன்றவர்களது கொலை ஆங்கிலத்தில் உலகுக்கு உண்மைகளை சொன்னால் கிடைக்கும் தண்டனை என்றாகிவிட்டது. இனி வழிக்கறிஞர்களும் யாரையும் காப்பாற்ற கோட்டுக்கு போக மாட்டார்கள். கையில இருந்ததையும் வழிச்சிட்டு நிக்கிறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.