Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கத் தூதுவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்-வீரவன்ச கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சுத ந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக உள்ள பொது மக்கள் தப்பி வரும்போது அவர்களை சுட்டுக் கொள்கின்றனர். இது தொடர்பில் மனித உரிமை அமைப்புகளோ வெளிநாட்டுத் தூதுவர்களோ வாய் திறக்காமல் மௌனமாகவுள்ளனர்.

ஆனால், இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மீறப்படுகிறது, ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் மேற்கண்ட கருத்துகள் ராஜதந்திர எல்லையை மீறிய செயற்பாடாகும். எமது உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை வெளியிடவோ அறிக்கைகளை வெளியிடவோ அதிகாரம் அவருக்கு கிடையாது. அவ்வாறு தூதுவர் செயற்பட விரும்பினால் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு வெளிநாட்டவர்களை தமது அரசியல் கட்சியில் இணைத்துக் கொள்ளக்கூடிய கட்சியில் இணைந்து செயற்பட வேண்டும்.

தான் தூதுவராக கடமை புரியும் நாட்டுக்குள் பிரச்சினைகள் இருக்குமானால் அந்நாட்டு வெளிநாட்டமைச்சரை சந்தித்து கலந்துரையாட வேண்டும். அதைவிடுத்து பகிரங்மாக கருத்துகளை வெளியிடவோ, அறிக்கைகளை வெளியிடவோ அதிகாரமில்லை. எனவே வெளிநாட்டமைச்சு அமெரிக்கத் தூதுவரை அழைத்து ராஜதந்திரியின் கடமைகள் என்ன என்பது தொடர்பில் கற்பிக்க வேண்டும். அதனையும் மீறிச் செயற்பட்டால் தூதுவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து எமது வெளிநாட்டமைச்சு அமைதி காத்தலாகாது.

கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு அம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்தில் இல்லை. விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகளே வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின

பிளெகின்ர கொள்கையில ஓட்டையில்லை கொள்கையே ஓட்டை... அதான் ஆருக்காக பேசுறாரோ அவங்களே மொங்கிறாங்கள். உறைக்குமா மரமண்டைதலையனுக்கு.... ?

சர்வதேச அளவில் இருந்து தங்களுக்கு சாதகமான முறையில் வராத குரல்களுக்காக எப்படி தங்களது எதிர்ப்பை காட்டுகிறார்கள்...

சீனா, இந்தியா தலையீட்டுகளால் அமெரிக்காவும் அடங்கித்தான் இலங்கையில் போக வேண்டும் என்பது விதி...

அமரிக்கா அடங்கித்தான் போகனுமெண்ட பிளேக்கும் அடக்கி வாசிக்கவேணும். விட்டாரா அவர் நல்லா நீட்டி முழங்கினவரில்லோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.