Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(உண்ணா நோன்பு) முதல்வர், திருமா கூட்டு நாடகம்'- ஜெயலலிதா..

Featured Replies

முதல்வர், திருமா கூட்டு நாடகம்'

Saturday, 17 January, 2009 03:33 PM

.

சென்னை,ஜன.17: இலங்கை பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் அவரும், கருணாநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

.

சென்னையில் இன்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

கே: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினர் சிபிஐ, சிபிஎம், மதிமுக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலை என்ன?

ப: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு.

இந்த உண்ணாவிரதத்தைப் பொறுத்த வரை தமிழக முதல்வரும், திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகமாகும்.

கே: இதில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? இல்லையா?

ப: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனை யில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமை களோடு இலங்கை தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்புதான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதைப்பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப் பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கே: போர் நிறுத்தத்தை வலியுறுத்து கிறார்களே?

ப: முதல்வரும், திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கே: 1983ல் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ப: அப்போது இருந்த நிலைமை வேறு; இப்போதுள்ள நிலைமை வேறு.

கே: ஈழத்தமிழர்கள் பலர் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்களே?

ப: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப் படுவார்கள். இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கே: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ப: ஆம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கே: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக்கொள்ளவில்லையே?

ப: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது.

கே: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ப: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் 7000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கே: அதிமுக கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருமா? பாமகவுக்கு அழைப்பு உண்டா?

ப: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். நாளடைவில் அதில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்று தெரியவரும்.

கே: பிஜேபி உங்கள் அணிக்கு வருமா?

ப: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கே: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை.

கே: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ப: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்பட வில்லை. எல்லா துறைகளிலும் திமுக அரசின் கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப் பட்டுக்கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம் குடும்பம் என்றும் சொல்லமாட்டேன்ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப்பதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ குன்டு பூசணிக்காய் - 10 ரூபாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது.//

அரச நில டான்சி ஊழல் வழக்கில் இவர் கூட முதலில் ஒத்து கொள்ளவில்லைதானே,

  • கருத்துக்கள உறவுகள்

எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப்பதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்

இந்த அம்மணி , இன்னும் இலக்கை அடையவில்லையா ?

அது சரி , என்ன தான் உங்கடை இலக்கு எண்டும் சொல்லுறது ......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மணி , இன்னும் இலக்கை அடையவில்லையா ?

அது சரி , என்ன தான் உங்கடை இலக்கு எண்டும் சொல்லுறது ......

உலக கோடீசுவரி வரிசையில் முதலிடம் கிடைத்தாலும்......????

காணாது என்று சொல்லும் மனம் அவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ குன்டு பூசணிக்காய் - 10 ரூபாய்

அட பூசனிக்காய் இவ்வளவு விலையேறீட்டுதா ? :D

//உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது.//

அரச நில டான்சி ஊழல் வழக்கில் இவர் கூட முதலில் ஒத்து கொள்ளவில்லைதானே,

அம்மா எப்ப தான் கொள்ளையடித்ததுகளை ஒப்புக்கொண்டவா ?

இந்த அம்மணி , இன்னும் இலக்கை அடையவில்லையா ?

அது சரி , என்ன தான் உங்கடை இலக்கு எண்டும் சொல்லுறது ......

இலக்கெண்டு ஏதாவது இருந்தாத்தானே அவா சொல்றதுக்கு ! செருப்புச் சேர்க்கிறது சொத்துச் சேர்க்கிறதைத் தவிர அவாக்கெங்கை இலக்கம் விலக்கும்

தமிழக மக்கள் பலர் இன்னமும் இவரிற்கு வாக்களிக்கின்றனர்.

வை.கோ கூட அம்மாவோடுதான் கூட்டணி வைத்திருக்கின்றார்.

அ.தி.மு.க , தி.மு.க போன்ற கட்சிகளை தமிழகம் புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்விரு கட்சிகளும் நாடகமாடியே எம்மை கவிழ்த்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வி. ஜெ. அரசியல் நடத்த சேடப்பட்டி முத்தையா போனறவர்கள் உகந்தவர்கள். ஏன் எனில் அவர் அம்மையார் கால்களில் விழுந்து வணங்கி அரசியல் நடத்தியவர்கள்.

கன்னடத்துக்காரருக்கு எப்போதுமே தமிழரில் வெறுப்பு இருந்து வந்துள்ளது. ஆனால் பொருளீட்ட தமிழகத்திற்கு வருவார்கள். அப்படி, தமிழ் சினிமாவில் நடித்து பொருளீட்ட வந்தவர்தான் சந்தியா. அதாவது ஜெயலலிதாவின் தாயார். தன்னைப்போல் மகளையும் நடிக்கவைத்தார். மக்கள் திலகத்தி;ன் படங்களில் குலுங்கிக் குலுக்கி நடிக்க வந்ததால், அவரின் ஆசைநாயகிகளில் முதல்வராக விஷமங்கள் செய்து இடம்பிடித்தவர். அதனால் புரட்சி நடிகரின் மரணத்திற்கு பிறகு அண்ணா தி.மு கவில் இருந்த கையாலாகாத, சபலம் கொண்ட தலைவர்களை அரவணைத்ததால்,செல்வி என இன்னமும் தன்னை சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதா தமிழகத்துக்கு விபத்தாக முதல்வரானவர். கன்னடியப் பிராமணரான இவர் படித்தது ஆங்கில பாடசாலையில். தமிழ் இலக்கியம் கற்காத இவர் சொல்லுகிறார் ஈழம் என்;றொரு நாடில்லையென!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் சிலை நிறுவிய நாளில் ஈழ மன்னன் கலந்து கொண்டதை நெடுஞ்செழியன் உயிரோடிருந்துபோதாவது கேட்டறிந்திருக்கலாம்.யாரிடம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.