Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்பிரச்சினைக்காக போராட மானமுள்ள தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்: ராமதாஸ் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட தொல். திருமாவளவன், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தநிலையில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

‘ஈழத்தில் தமிழ் மக்கள் அவதிப்படுவது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மானக்கேடு. தலைகுனிவு. இனியும் பொறுத்திருக்கவேண்டாம்.

ஈழப்பிரச்சினைக்காக இனி எந்த போராட்டம் என்றாலும் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து நடத்துவோம். இரு கட்சிகள் மட்டுமல்ல. பல கட்சிகள் இணைந்து போராடுவோம்.

தனித்து போராட வேண்டிய அவசியமில்லை. ஈழப்பிரச்சினைக்காக போராட மானமுள்ள தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஈழப்பிரச்சினைக்கு இந்த உண்ணாவிரதம் சரிப்பட்டு வராது. போராட்ட வடிவத்தை மாற்றுவோம். தமிழக முதல்வரும் ஈழப்பிரச்சனை தொடர்பாக என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். தயாராக இருக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

அவரிடமும் கலந்து பேசி முடிவெடுத்து போராட்டம் நடத்துவோம். அந்த போராட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போகணும். லாரி, பஸ் என்று எதுவுமே அன்றைய தினம் இயங்கக்கூடாது. அப்படி ஒரு போராட்டம் ந்டத்துவோம்’’ என்று ஆவேசப்பட்டார்.

உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு மேடையில் திருமாவளவன் பேசுகையில்,

உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை இராணுவத்தளபதி பொன்சேகாவை புகழ்ந்திருக்கிறார் ஒரு காங்கிரஸ்காரர்.

காங்கிரஸ்காரர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது. அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். உண்மையில் உலகத்திலேயே கொடூரமான அரக்கன் இலங்கை இராணுவத்தளபதிதான்.

கிளிநொச்சியை பிடிக்க முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தார்கள். வேறு வழியின்றி சிங்களப்படை பின்வாங்கியது. அந்த சமயத்தில் இந்திய அரசுதான் சிங்களப்படைக்கு இராணுவ உதவிகளை கொடுத்து கிளிநொச்சியை கைப்பற்ற வைத்தது.

இப்படி ஒரு கேடுகெட்ட செயல்களை செய்து வருகிறது காங்கிரஸ்.

ஈழப்பிரச்சனை தொடர்பாக எத்தனை போராட்டம் நடந்தாலும் காங்கிரஸ் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மறுக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தவரை முதல் எதிரி காங்கிரஸ் தான். இனி எக்காலத்திலும் அக்கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது. அதுமட்டுமல்ல, இனி காங்கிரஸ் கட்சியை புல், பூண்டு தெரியாமல் இருக்கும் இடமே தெரியாமல் அழிக்க வேண்டும். என ஆவேசமாக கூறினார்.

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b...cg2h32ccePj0q3e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.