Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம்

Featured Replies

தமிழக நோக்கு -ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் :

ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா :

ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் என தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகியது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழக ஆளுநர் இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அனுபவித்து வரும் துயரங்களை நீக்கி, அங்கு நடைபெறும் போர், பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை இந்திய பேரரசு வலியுறுத்தி வருகிறது.

இந்திய அரசு பேச்சு வார்த்தை போன்ற உரிய வழிமுறையின் ஊடாக இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாழ்த்த கூடாது, நாளுக்கு நாள் அல்லலுறும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு உரிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது என சுர்ஜித் சிங் பர்னாலா கூறியுள்ளார்.

ஈழத்தமிழர் ஆதரவு - தமிழக முதல்வரின் புதிய நிலைப்பாட்டால் பின்னடைவு ஏற்படாது – சீமான் :

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் புதிய நிலைப்பாட்டால் பின்னடைவு ஏற்படாது என திரைப்பட இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். இந்திய மததிய அரசாங்கம் இலங்கையின் போரை நிறுத்த தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறல்ல எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். கோவை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர்கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலர் பெ.மணியரசன் ஆகியோர் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீமான் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து கோவை சிறையில் இருந்து இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலர் பெ.மணியரசன் ஆகியோர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை பிரசசினையில் ஒன்றிணையாவிட்டால் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்படும் - ஆர். நல்லகண்ணு :

இலங்கை பிரசசி;னையில் ஒன்றிணையாவிட்டால் எதிர்காலத்தில் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் நேற்று (20) நடைபெற்ற விழாவில், 'ஜீவா விருதை' பெற்றுக் கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனது இறுதிக் காலம் வரை சொத்துகள் ஏதும் சேர்க்காமல் வாழ்ந்த தலைவர்களில் ஒருவர் ஜீவானந்தம். நாட்டுப் பற்று, மொழிப் பற்றுடன் வாழ்ந்த ஜீவாவின் வாழ்க்கை நமக்கு உதாரணமாகும். யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்திற்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. அங்கு உரிமைக்காகப் போராடுபவர்கள் பூர்வீக மக்கள். அவர்கள் நம் முகம். அவர்களைப் பற்றி பேசாமல் நாம் யாரைப் பற்றி பேசுவது?.

இலங்கையில் தமிழர்கள் அழிந்து கொண்டு இருக்கின்றனர். அங்குள்ள மக்கள் ஆங்காங்கே சிதறி வாழ்ந்து வருகின்றனர். தமிழன் எப்படி இருக்கிறான் என்பதற்கு தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்தாலே போதும். தமிழன் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு உதவி செய்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகளை இழிவாகப் பேசிய இலங்கை ராணுவத் தளபதியை சிறந்தவர் என இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் பாராட்டியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்காக குரல் கொடுப்பவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில்லை.

இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தி வருவோர் தனுஷ்கோடி வரை அல்லது அதையும் தாண்டி பாம்பன் பாலம் வரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கைத் தமிழர் பிரசசி;னையில் நாம் ஒன்றுபட்ட உணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், பிற்காலத்தில் பெரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கருணாநிதி விரைவில் தீர்மானிக்க வேண்டும் - ராமதாஸ் :

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் தீர்மானிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பா.ம.க. சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் நேற்று (20) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ராமதாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசு தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி எத்தனையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. ஆனால் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் வெறும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையிலேயே மேற்கொண்டு என்ன செய்வது என்பதை ஆராயவே பெரியார் திடல் சென்று, தி.க. தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் விவாதித்தோம்.

அதன் பின்னர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினோம். இதன் போது பேசிய தமிழக முதல்வர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுமாறு எம்மிடம் தெரிவித்தார். வேண்டுமானால் தான் உண்ணாவிரதம் இருக்கத் தயார் எனவும் முதல்வர் கூறினார். ஆனால் அவரது உடல் நிலை கருதி முதல்வரின் அந்த யோசனையை நாம் தடுத்து விட்டோம்.

இந்த நிலையில் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்த பந்தலில் பேசிய போது, தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு 10 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறியதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட யோசனை எனவும், முதல்வருக்கு மாற்று யோசனை இருந்தால், அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தி.மு.க. ஆட்சியைக் கலைக்கச் சதி செய்வதாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை என்னை தூக்கி வாரிப்போட்டது. ஈழப் பிரச்சினைக்காக இன்னொரு முறை தி.மு.க.வின் ஆட்சி பறிபோவதை பா.ம.க. அனுமதிக்காது. எப்பாடுபட்டாவது இந்த ஆட்சியைக் காப்பாற்றுவோம் என்பதைத் தெளிவாகக் கூறிகொள்வதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க.வும், பா.ம.க.வும் ஆதரித்து வருகின்றன. மத்திய அரசுக்கு பிரசசி;னைகள் ஏற்பட்ட போதெல்லாம் இவ்விரு கட்சிகளும் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. கூட்டணி உருவானபோது ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச செயற்திட்டத்தில், இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 5 ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய மத்திய அரசின் இந்தி நடவடிக்கைகள் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இந்தச் சூழல் நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக தீர்மானிக்க வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழர்களின் தலைவராக, தமிழக முதல்வராக அவர் உள்ளார். எனவே அவரையே ஈழத் தமிழர்களும், நாமும் நம்பியுள்ளோம். எனவே காலம் தாழ்த்தாமல் கருணாநிதி விரைவில் முடிவெடுக்க வேண்டும். அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பாமக தயாராக உள்ளது ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் - தமிழக கல்லூரி மாணவர்கள் இன்று முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் :

இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜன.21) முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தினமும் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இதனைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தில் திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தும், ஏனைய கட்சிகளுடன் இணைந்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் தற்போது மாணவர்களும் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளனர். இதனடிப்படையில் இன்று ஆரம்பமாகும் இந்த தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மாணவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, இன்று முதல் அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணிக்க உள்ளனர் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலர் இரா.திருமலை தெரிவித்துள்ளார்.

திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு செல்லவிருப்பதால் இந்த பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர சென்னையில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி பகுதிகளில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என இலங்கைப் பிரச்சினை தொடர்பில் போராடுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம், பச்சையப்பா, லயோலா, ஸ்டெல்லா மேரி, எத்திராஜ், டி.ஜி.வைஷ்ணவா, அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி உள்ளிட்ட அரசு, தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பமாகும் இந்த வகுப்பு புறக்கணிப்பில் 67 அரசுக் கல்லூரிகள், 186 உதவி பெறும் கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் முழு அளவில் கலந்துகொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொறியியல் கல்லூரி மாணவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் வெங்காடாசலம் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசைக் கண்டித்து சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ராமதாஸ், இலங்கையில் போராடும் தமிழர்களுக்கு நமது ஆதரவைத் தொடர்ந்து தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பாடசாலைகள், கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணிப்பார்கள் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை - மத்திய அரசின் போக்கு நொந்த உள்ளத்தை வேதனைப்படுத்துகிறது - கி.வீரமணி :

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் போக்கு நொந்த உள்ளத்தை வேதனைப்படுத்துகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். கொழுந்து விட்டு எரியும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பது என தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு கட்சியை தவிர ஏனைய சகல கட்சியினரும் - - கூறுகின்றனர். ஜெயலலிதாவின் அந்த ஒரே கட்சி அண்ணா பெயரை வைத்துக் கொண்டு அவரது லட்சியங்கள், கொள்கைகளுக்கு நேர் எதிராக செயற்படும்; கட்சியாகும்.

இல்லாவிட்டால் சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட கூறத் துணியாத வகையில், ஆணவத்தின் உச்சிக்கு சென்று இந்த அம்மையார், இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டும் என சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல என அங்கே கொல்லப்படும் தமிழர்களைப்பற்றி அவ்வளவு அலட்சியமாக பதில் சொல்வாரா? வெட்கம்!

ஈழப்பிரச்சினையில் தமிழக சட்டமன்ற தீர்மானம், மனித சங்கிலி என போராட்டங்களை நடத்தி, அனைத்து கட்சித்தலைவர்கள் இந்திய பிரதமரை சந்தித்து, வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தம் பற்றி பேச சொல்வதாக அளித்த வாக்குறுதி இதுவரை செயல்படவில்லையே என்ற வேதனை, அதுபற்றி இந்நாள் வரை இந்திய மத்திய அரசு எவ்வித விளக்கமோ, பதிலோ முதல்-அமைச்சருக்குக்கூட அளிக்காமல் இருப்பது தமிழர்களின் நொந்த உள்ளத்தை மேலும் நோகடிக்க செய்வதாக உள்ளது. தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் உள்ள ஆட்சியை தெரிந்தோ, தெரியாமலோ கவிழ்க்க முயற்சிப்போருக்கோ, எண்ணுவோருக்கோ அல்லது தமது சொந்த விருப்பு வெறுப்பு இவைகளால் தற்போது சுமுகமாக உள்ள தி.மு.க.- காங்கிரஸ் உறவிற்கு மாற்று தேட, அம்மையாருடன் கூட்டு சேர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக இருப்போம் என கூட்டணிக்குள்ளே குழப்பம் விளைவிக்க எண்ணுவோரின் எண்ணம் ஈடேறுவதற்கோ, தமிழத்தின் போராட்டங்களும், முயற்சிகளும் துணையாகிவிடக்கூடாது.

தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சிக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. ஈழப்பிரச்சினைக்காக 2 முறை ஆட்சியை இழந்த வரலாற்றை உடைய கட்சிதான் திமுக, தமிழர் தம் வரலாற்றில் வராது வந்த மாமணியாக செயற்கரிய செய்யும் ஆட்சி என்பதை நினைத்து எதற்கு எவ்வளவு முன்னுரிமை என்பதை யோசித்து முன்யோசனையுடன் நடந்து கொள்வது தமிழர் கடன் ஆகும் என கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=4932&cat=2

இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?

அரசியல் வாதிகள் குரல் கொடுத்து ஒய்ந்துவிட்டார்கள், இப்ப அரச அதிகாரிகள் குரல் கொடுக்கினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா கதைப்பினம் பேந்து என்ன அடக்கிடுவாங்கள் இல்லையென்டா மேனனனைமாதிரி யாரையாவது அனுப்பி இன்னும் அடிக்கச்சொல்லுறது இது வழமையப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?

அதுதானே எல்லாருமாய் சேர்ந்து ஒரு முடிவை கெதியா எடுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.