Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலூர் : ஈழத்தமிழர்களுக்காக செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக கடலூர் இளைஞர் தற்கொலை முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2009, 14:49 [iST]

கடலூர்: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதாகும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடந்து வந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அங்கிருந்த ரிலையன்ஸ் செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார் தீன தயாளன்.

அப்போது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

thatstamil

கடலூர் : ஈழத்தமிழர்களுக்காக செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டபடியே செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் கை உடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளராக இருப்பவர் தீனதயாளன். 21 வயதான தீனதயாளன், இன்று காலை 7 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடியே ஆலப்பாக்கத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர் மீது ஏறியிருக்கிறார்.

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட அந்த டவரின் பெரும்பகுதியை கடந்த நிலையில் ஊரில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து அவரின் தற்கொலை முயற்சியை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர். தீனதயாளனின் நண்பர்களும் அவரை கீழே இறங்கி வரும்படி கூறியிருக்கிறார்கள். சிலர் அவரைக் காப்பாற்ற அந்த டவரின் மீது ஏறியிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த தீனதயாளன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், புலிகளுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியபடியே கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதில் தீனதயாளனின் வலது கை உடைந்துவிட்டதாக அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த காயமடைந்த தீனதயாளன் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

thanks

nakheeran

மற்றொரு இளைஞர் வேலுரில் தீக்குளித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஈழஆதரவு தலைவர்கள் உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி மேலும் இதுபோன்ற உயிரிழப்புக்கள் ஏற்படுத்தாது தடுத்து இளைஞர்களை சரியான வழியில் போராட வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்து இளைஞர்களின் உணர்வுகளை கலைஞர் போண்ற சந்தர்ப்ப வாதிகள் புரிந்து கொள்ள போவதில்லை... இளைஞர்களை சாதிக்க முயல்வதையும், செய்வதை சோகத்தோடு பார்ப்பதுதான் இண்றைக்கு தமிழனால் முடிந்தது...

யாரும் சாவதில் நாங்கள் குளிர் காய்வது சரியானது இல்லை... ஆனால் இந்த சாவுகளுக்கு எல்லாம் காரணம் கலைஞர், ஜெயா போண்ற அரசியல் வாதிகள்தான்...

முத்துக்குமாரின் முன்மாதிரி இன்று அதேவழியில் அர்ப்பணிப்பும் துணிவும் உள்ள பல இளைஞர்களை தூண்டியுள்ளது.

இவர்கள் தனித்தனியே வெறும் தற்கொலை முயற்சிகளில் தங்கள் வாழ்வை வீணடித்து வருகின்றனர்.

உண்மையில் அவர்கள் நோக்கம் நிறைவேற ஒரு நல்ல தலைமைத்துவம் தமிழகத்தில் அவசியம்!

அஞ்சலி வீரவணக்கம் நன்றி கவிதை என்பவற்றோடு நிறுத்தாது பொறுப்போடு இது போன்ற உயிரிழப்புகளை தவிர்த்து தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லும் போராட்டத்தை தீவிரப்படுத்தச் சொல்லி கேட்டிருக்கலாம்.

ஒட்டு மொத்த தமிழினத்தின் இயலமையின் உச்சம் தான் உயிராயுதம். அது இராணுவ தளத்தில் மாத்திரமல்ல அரசியல் தளத்திலும் பயன்படுத்த வேண்டிய கேவலமான நிலையில் இன்று தமிழர்கள்.

இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டாலும் மறைமுக அங்கீகாரத்திற்கு திறவுகோலாக இருக்க வேண்டியது (கூடியது) தமிழ்நாடு. இதற்காக தமிழ்நாட்டில் விழிப்புணர்வு தேவை எழுச்சி தேவை. இதற்கான எழுச்சியை தவறாக அர்த்தப்படுத்தி இந்தியாவை விட்டுவிட்டு தமிழ்நாடு பிரிந்து வந்து ஈழத்தமிழரோடு உடன்கட்டை ஏறப்போகிறது போன்ற எதிர்ப்பார்ப்புகள் அதீதமான கற்பனை மாத்திரமல்ல பாதகமானவை. எதிரிகளிற்கு தமது திட்டங்களை நிறைவேற்ற எமது சந்தர்பங்களை தட்டிவிட சாதகமானவை.

Edited by kurukaalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.