Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ஆளும் வர்கத்தின் முகத்திரையை கிழிப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமை.

Featured Replies

சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது.

ஆனால் உலகத் தமிழர்களுடைய இந்தப்பேரெழுச்சியையும் ஒன்றுமையும் நாம் துறை சார் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதன் மூலமே மேற்குலகை எம்மை நோக்கி திருப்ப முடியும்.

இந்தியாவின் சந்தைப் பொருளாதர நலனை தாண்டி இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு விரேதமாக மேற்குலகம் மனிதாபிமான அடிப்படையில் எமக்கு உதவுதற்கு உடனடியாக ஓடோடிவரும் என்று நாம் கனவுலகில் மிதக்கக் கூடாது.எங்களுடைய பலமும் அந்தப்பலத்ததை தக்க வைப்பக்காக நாங்கள் செய்யக் கூடிய உயாந்த பட்ச அர்ப்பணிப்பும் தான் தாயகத்திலே அல்லலுறும் உறவுகளை காபபாற்றும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உலகத் தமிழர்களுடைய முக்கியமான பணி இந்திய ஆளும் வர்க்கத்தை வர்க்கத்தை உலகமக்கள் மத்தியல் அம்பலப் படுத்துவதும் அதனுடைய அகிம்சா முகமூடியை கிழித் தெறிவதுமாக இருக்க வேண்டும்.

இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியையும் ஒன்றுமையையும் இந்தியாவுக்கு எதிரானதாக காட்டுவதற்கு சிலர் முயல்கின்றனர்.இது கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிப் பரப்புரையின் ஓரங்கமாகும்.

உலகத்தமிழர்களோ ஈழத் தமிழர்களோ இந்தியா என்ற நாட்டுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானவர்களல்ல.இந்திய ஆளும் வர்க்கமே உலகத் தமிழர்களின் எதிரிகள் என்பதை நாம் தெழிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய புனித பிம்பமாக மகாத்மா காந்தியும் அவருடைய அறவழிப்போராட்டமும் தான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.இன்றை

இயக்குனர்கள் பாரதிராஜா சீமான் அமீர் போன்றவர்கள் இணைந்து பிரமாண்டமான வகையில் உலகத் தமிழர்களின் ஆதரவோடு தீலீபலின் வரலாற்றை படமாக எடுக்க முன்வரவேண்டும்

Edited by athiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்கதக்க கருத்துகள், குறிப்பாக கருணாநிதி - சோனியா கூட்டு நாடகம், சோனியாவின் தனிப்பட்ட குரோத உணர்வு ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தை விடுதலைபுலிகளை அழிப்பது என்ற போர்வையில் இலங்கை-இந்திய கூட்டுச்சதி யாவும் மூலகாரணமாகிறது.

என்.வை.பென்மன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களுடைய முக்கியமான பணி இந்திய ஆளும் வர்க்கத்தை வர்க்கத்தை உலகமக்கள் மத்தியல் அம்பலப் படுத்துவதும் அதனுடைய அகிம்சா முகமூடியை கிழித் தெறிவதுமாக இருக்க வேண்டும்.

இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியையும் ஒன்றுமையையும் இந்தியாவுக்கு எதிரானதாக காட்டுவதற்கு சிலர் முயல்கின்றனர்.இது கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிப் பரப்புரையின் ஓரங்கமாகும்.

உலகத்தமிழர்களோ ஈழத் தமிழர்களோ இந்தியா என்ற நாட்டுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானவர்களல்ல.இந்திய ஆளும் வர்க்கமே உலகத் தமிழர்களின் எதிரிகள் என்பதை நாம் தெழிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய புனித பிம்பமாக மகாத்மா காந்தியும் அவருடைய அறவழிப்போராட்டமும் தான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.இன்றை??்கு இந்திய ஆளும் வர்க்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்றும் அகிம்மை மக்கள் நலன் மற்றும் விடுதலை உணர்வுகளை மதிக்கும் பண்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது என்றும் உலக மக்கள் மத்தியில் ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாயையை கலைத்து இந்திய ஆளும் வர்க்த்தின் அதிகார வெறியையும் மக்கள் விரோதப் போக்கையும் உலக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான் நமது உடனடிப் பணியாகும்.

..................

..................

சிவா சின்னப்பொடி

இந்தியாவின் ஆளும்வர்க்கத்துடன் மோதுவதை "உடனடி பணி" யாக முக்கியப்படுத்துவனால் போரினால் அல்லல் படும் மக்களுக்கு என்ன நன்மை விளையப்போகிறது? இந்திய ஆளும் வர்க்கம் "அதிகார வெறி கொண்டது" என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்தால் அங்கே போர் நின்று மக்களுக்கு நிம்மதியான வாழ்வு பிறக்க போகிறதா?

தாயகத்திலே எமது மக்கள் அழிக்ப்படுவதற்கும் சிறிலங்கா அரசு போhர் வெறி கொண்டு அலைவதற்கும் முழுக்காரணம் இந்திய ஆளும் வர்க்கம்தான்.தாயக மக்களுக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பதும் இந்திய அளும் வர்க்கம் தான்.இந்திய ஆளும் வர்க்கம் நினைத்தால் ஒரு நிமிட நேரத்தில் எமது தாயகத்தில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்த நிறுத்திவிட முடியும.உலக நாடுகளை எமது விடயத்தில் தலையிட்டு எமக்கு நீதி கிடைக்க விடாமல் தடுப்பதும் இந்திய ஆளும் வாக்கம் தான்.தற்போது போரை நடத்தவது இந்திய ஆளும் வர்க்கம் தான்

Edited by athiyan

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!

Sunday, February 1, 2009, 10:34 கட்டுரைகள் வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?… தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?… அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?… என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி.

“புதினம்” செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772.

அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே.

இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.

தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல.

ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை.

இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே.

இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை.

இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.

இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது.

இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும் கூட - அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி - சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.

ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா.

பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும்.

ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்.

பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக “சாஸ்திரி பவன்” முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.

தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை.

பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை.

என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.

சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா.

நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், “இப்போது எமது கையில் எதுவுமே இல்லை”, என்று.

உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!

எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம்.

உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம்.

ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.

சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.

இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.

மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி -

ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது.

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்.

“வெள்ளை மாளிகை” முன்றலிலும், “டவுணிங் ஸ்ட்றீட்”டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.

எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும்.

மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல.

எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும்.

இப்போது -

எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும்.

உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் -

அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது.

அந்த சரியான இலக்கு - இந்தியா.

என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.

விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை.

இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும்.

தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும்.

லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும்.

தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும்.

எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும்.

தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.

தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும்.

ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.

அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும்.

உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை:

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும்.

படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

நாம் தெளிவாக இருப்போம் -

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும்.

ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

ஓவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும், எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது.

செயற்படுவோம், இப்போதே!

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Sunday, February 1, 2009, 10:38 கட்டுரைகள் திரு தி வழுதியின் கட்டுரை வாசித்தேன். அவருடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன். எனினும் போராட்டம் தொடர்பான அவருடைய மூல உபாயம் தவறானது.

http://www.nerudal.com/nerudal.77.html

இந்திய அரசு (state) இந்திய அரசாங்கங்கள் (Indian government) பற்றிய குழப்பம் மீண்டும் மிகத் தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். தமிழ் நாட்டின் எழுச்சி காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உறுதியான விமர்சனமாகும். அது இந்திய அரசுக்கு எதிரான போர்க்குரல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரைக்கும் இந்திய அரசு மற்றும் இந்திய அரசாங்கங்களோடு எமக்கு பெரும் சிக்கல்கள் இருக்கவில்லை.

தமிழ் நாட்டின் ஆதரவுடன் எதிர்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. இந்திராவின் மரணத்துக்குப் பின்னர் ரஜீவ் தலைமையில் இந்தியாவில் தொடர்ந்த காங்கிரஸ் அரசாங்கத்துடன் சிக்கல்கள் முற்றியது. எம்.ஜி.ஆரின் மரணம், கலைஞர் தொடர்பான எங்கள் அணுகுமுறை இரஜீவ் அரசின் ஆதிக்க மனப்பாங்கு எமது அரசியல் எல்லாம் நிலமையை சீர்குலைத்தன. அதன்பின்னர் இரண்டு வரலாற்றுத் தவறுகள் இடம்பெற்றன. ஒன்று இந்தியா தமிழர் பங்குபற்றாத ஒரு உடன்பாட்டை இலங்கை அரசுடன் செய்தமை. இது இந்திய படையின் தக்குதல் நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தது. இரண்டாவது வரலாற்றுத் தவறாக அரச அடைக்கலமாக தமிழகத்தில் இருந்த பத்மநாபா கொலை, அதனைத் தொடர்ந்த ரஜீவ் கொலை என்பவற்றையே குறிப்பிடுகிறேன். இதன் பின்னர் காங்கிரஸ் அரசுகள் இலங்கை அரச பயங்கரவாதத்துக்குச் சார்பான நிலையே எடுத்தன. கான்கிரஸ் அற்ற அரசுகளுக்கு நீதிமன்ற வளக்கு நிலவரங்கள் தடையாக இருந்த்தது. இன்று பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்ட்டுகளும் புதிய நிலைபாடு எடுத்துள்ளனர். இதற்க்கு நமக்கு ஆதரவாகத் தமிழ் நாடில் வளர்ந்துள்ள ஆதரவு மட்டுமே முக்கிய காரணமாகும்.

அரசியல் ரீதியான நமது பங்களிப்பு இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸை காங்கிரஸ் தலைவியை எதிர்த்துக் குரல் கொடுப்பது உயர்ந்த பட்ச்சம் இன்றைய இந்திய அரசுக்கு எதிரான குரல் மட்டுமே. அத்தகைய போராட்டம் வேறு. தூதரகங்களை முடகுவது என்பது அடிப்படையில் இரண்டு பாரிய இராஜதந்திரத் தவறுகளை உள்ளடக்கியுள்ளது. மேற்க்குநாடுகளில் அரசியல் ரீதியாகப் போராடுவதையே அது மேற்க்கு நாடுகளின் மனசைப் பாதிக்குமென்று திரு வழுதி சொல்கிறார். எனினும் அத்தகைய ஊர்வலங்கள் அனுமதியுடன் இடம்பெறும் சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகள் ஆகும். ஆனால் மேற்க்கு நாடுகளின் பாதுகாப்பில் உள்ள தூதரகம் ஒன்றை முடக்க முனைவதுதான் மேற்க்கு நாடுகளை அதிகம் பாதிக்கும் செயலாகும். இத்தகைய முயற்ச்சி மேற்க்கு நாடுகளால் சட்டபூர்வமான அரசியல் அரசியல் எதிர்ப்பாக எடுக்கப்பட மாட்டாது. இது பி.கே.கே போன்ற அமைப்புகளின் மேற்குலக கிழைகளின் மட்டத்துக்கே எங்கள் அமைப்புகளையும் கீழ்ப்படுத்தும்.

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி என்கிற திரு வழுதியின் கூற்று அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றுடனான மோதலை இந்தியாவுடனான மோதலாக மாற்றுவது தமிழ் நாட்டின் எழுச்சியின் அடிப்படைகள் பறிய தெளிவின்மையையே காட்டுகிறது. இன்னும் நான்குமாதத்தில் ஆட்ச்சி மாறும்போது இந்தக் கோசம் செம்மைப் படுத்தமுடியாத பாதிப்புகலை ஏற்படுத்தியிருக்கும். இது தமிழக எழுச்சியை வளர்ப்பதற்க்குப் பதிலாக சீர்குலைப்பதற்க்கே உதவும்.

எனவே மக்கள் எதிர்ப்பையும் தமிழக எதிர்ப்பையும் இலங்கை அரசுக்கெதிரான எங்கள் போராட்டமாக்குவது முற்றிலும் சாத்தியம். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றின் அணுகுமுறைக்கு எதிரான போராட்டமாக்குவதும் சாத்தியமே. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக வழர்ப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமுமில்லை அவசியமும் இலை.

தமிழ்நாடில் வெண்ணை திரண்டுவரும் சமயத்தில் அதிதீவிர அணுகுமுறைகளால் தாழியை உடத்து விடாதீர்க.

-வ.ஐ.ச.ஜெயபாலன்

  • தொடங்கியவர்

இந்திய எதிர்ப்பு என்பது வேறு இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது வேறு என்பதில்நாம் தெளிவாக இருக்க வேண்டும்.இந்திய என்ற நாடோ இந்திய மக்களோ நமது எதிரிகள் அல்ல.தமிழனத்தை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்தை கருவியாகப் பயன்படுத்தும் இந்திய ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவது தான் எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பாடுபடுகிறது.ஏற்கனவே பாடுபட்டது.சிறீலங்காவின்அரச

நாங்கள் மிகத்தெளிவாக சிந்தித்து எங்கள் முன்னால் உள்ள உடன் பிரச்சனை எமது தமிழ்மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை உலகின் தொடர்ச்சியாக கொண்டுசெல்லுதல்..

வன்னியில் நடத்தும் இன அழிவுகளை உலகிற்கு ஏமாற்றி தொடர்ச்சியாக செய்து வருதல்.. உலக தலையீடு உடன் மனிதாபிமான உதவிகள்.

2. இந்தியாவின் இலங்கையின் இராணுவ ஒத்துழைப்பு இலங்க்கையின் இன அழிப்பை ஊக்கிவித்து மேலும் தமிழ்மக்களை கொலைகளை அதிகரித்துள்ளது.

3. இந்தியாவின் தலையீடு தனது சுயனல காரணங்கள், பிராந்திய ஆதிக்கம் அதாவது விடுதலைப்புலிகள் தங்கள் சொல்படி நடக்கவில்லை, ராஜிவ்கொலை, இலங்கையரசின் தனிப்பட்ட அரசியல் இந்திய அரசியலதிகாரிகளுடன் தொடர்பு, வாங்குதல் மூலம் செல்வாக்கு செலுத்தல், சீனா, பாகிஸ்தான் செல்வாக்கை மீறி தான் இலங்கையில் உதவி செய்வதாக காட்டி இலங்கையை நிரந்தரமாக கைக்குள் வைத்திருத்தல்

4. இதற்கு ஒரே ஒரு வழி சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்த் இலங்கையின் மீது தொடர் நெருக்கடி ஏற்படுத்தி தலையீடு செய்து நல்ல ஒரு தீர்வை ஏற்Pஅடுத்தி தமிழ்மக்களை பாதுகப்பவர்களை பலப்படுத்தி, தடைகளை எடுத்துஅல்.. இலங்கை இதற்கு ஒத்துலைக்காவிட்டலும் இலங்கையை உலக்த்திலிருந்து ஓரம்கட்டி.. புலிகளுக்கு ஆதரவை பகிரங்கமாக அறிவித்தால் போதும்..

5. மக்கள் தாங்களாகவே தங்களை மீட்பர்..பாதுகாப்பர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.